02-07-2006, 04:07 AM
<span style='color:green'><b>ஜெனீவாவில் பெப்ரவரி 22 இல் பேச்சு: நோர்வே அறிவிப்பு </b>
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே பெப்ரவரி 22ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறும் என்று நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
நோர்வே வெளிவிவகார அமைச்சு இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நோர்வே அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜெனீவாவில் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் பேச்சுக்கள் நடைபெற உள்ளன.
ஜெனீவா பேச்சுக்களுக்கு நோர்வே நாட்டை அனுசரணையாளராக இருக்க சிறிலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இப்பேச்சுக்கள் நடைபெற உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இருதரப்பு உயர்நிலையில் நடைபெறும் முதலாவது பேச்சுவார்த்தை இது.
"இரு தரப்பினரும் பாதுகாப்பு நிலைமைகளை வலுப்படுத்துவது தொடர்பாக சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டமை நல்ல விடயம்" என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
"அனுசரணையாளர் பணியை முன்னெடுக்கும் நோர்வே நடைமுறைச் சாத்தியமான தீர்வை உருவாக்குவதற்கு உதவி வழங்கும். யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீதான அழுத்தத்தைக் குறைக்க முன்முயற்சிகள் மேற்கொள்ளும்".
"இப்பேச்சுக்கள் குறுகியதானது என்றாலும் அமைதிப் பேச்சுக்களை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு மிகவும் முக்கியமான நடவடிக்கை. பேச்சுக்கள் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்." என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நோர்வே குழுவுக்கு சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தலைமை வகிப்பார். அக்குழுவில் சிறிலங்காவுக்கான நோர்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர், விதார் ஹெல்கிசன் ஆகியோர் இடம் பெறுவர்.
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்டும் பேச்சுக்களில் பங்கேற்பார்.
அமைதி முயற்சிகளில் சுவிஸ் அரசாங்கம் மிகவும் ஆதரவு வழங்கி வருவதால் ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்றும் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லண்டனில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் நோர்வே சிறப்புத் தூதுவருமான அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் பேச்சுக்களுக்கான நாள் தொடர்பில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இப்பேச்சுக்களின் முடிவில் நோர்வே அரசாங்கம் சார்பில் பேச்சுக்களுக்கான நாள் அறிவிக்கப்பட்டது.</span>
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே பெப்ரவரி 22ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறும் என்று நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
நோர்வே வெளிவிவகார அமைச்சு இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நோர்வே அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜெனீவாவில் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் பேச்சுக்கள் நடைபெற உள்ளன.
ஜெனீவா பேச்சுக்களுக்கு நோர்வே நாட்டை அனுசரணையாளராக இருக்க சிறிலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இப்பேச்சுக்கள் நடைபெற உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இருதரப்பு உயர்நிலையில் நடைபெறும் முதலாவது பேச்சுவார்த்தை இது.
"இரு தரப்பினரும் பாதுகாப்பு நிலைமைகளை வலுப்படுத்துவது தொடர்பாக சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டமை நல்ல விடயம்" என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
"அனுசரணையாளர் பணியை முன்னெடுக்கும் நோர்வே நடைமுறைச் சாத்தியமான தீர்வை உருவாக்குவதற்கு உதவி வழங்கும். யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீதான அழுத்தத்தைக் குறைக்க முன்முயற்சிகள் மேற்கொள்ளும்".
"இப்பேச்சுக்கள் குறுகியதானது என்றாலும் அமைதிப் பேச்சுக்களை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு மிகவும் முக்கியமான நடவடிக்கை. பேச்சுக்கள் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்." என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நோர்வே குழுவுக்கு சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தலைமை வகிப்பார். அக்குழுவில் சிறிலங்காவுக்கான நோர்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர், விதார் ஹெல்கிசன் ஆகியோர் இடம் பெறுவர்.
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்டும் பேச்சுக்களில் பங்கேற்பார்.
அமைதி முயற்சிகளில் சுவிஸ் அரசாங்கம் மிகவும் ஆதரவு வழங்கி வருவதால் ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்றும் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லண்டனில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் நோர்வே சிறப்புத் தூதுவருமான அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் பேச்சுக்களுக்கான நாள் தொடர்பில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இப்பேச்சுக்களின் முடிவில் நோர்வே அரசாங்கம் சார்பில் பேச்சுக்களுக்கான நாள் அறிவிக்கப்பட்டது.</span>
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

