Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சதி கொன்ற சாவு.'கௌசல்யன்"
#1
கௌசல்யனின் சாவறிந்த தினம் எழுதப்பட்ட கவிதை. இன்று கௌசல்யனின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு மீளவும் பதிவாகிறது.

சதி கொன்ற சாவு.

'கௌசல்யன்"
சத்தமின்றி இருந்த வீரன்
சத்தமின்றி எங்கள் மனங்களை
வென்று போன சத்தியன்.

மோப்பர்களை மீட்பர்களாய்
நம்பிய பாவம்
எங்கள் மீட்பர்களே
உங்களை நாம் இழந்து போக
அரச மோப்பரே சாட்சியாக.....


கண்காணிப்போர் கண்களில்
உங்கள் சாவு
குழு மோதல் என்பதாக.....
சார்ந்து நின்று நீதி சொல்லும்
பணிசெய்ய வந்த
பிணியரே இவர்களெல்லாம்.

கருணாவின் சதியென்று கதைபூசி
கௌசல்யன், புகழன்,
செந்தோழன், நிதிமாறன்
சாவிதனை விதியென்றா எழுதிவிட....?

இல்லையில்லை,
சதிகொன்று போனதெங்கள்
சந்ததியின் விதிமாற்றி எழுதிப்போன
வீரர்கள் வரிசையிலே
உரமாகிப் போனவர்கள்.
07.02.05.
Reply


Messages In This Thread
சதி கொன்ற சாவு.'கௌசல்யன்" - by shanthy - 02-06-2006, 08:17 PM
[No subject] - by வர்ணன் - 02-06-2006, 11:06 PM
[No subject] - by iruvizhi - 02-06-2006, 11:33 PM
[No subject] - by வர்ணன் - 02-06-2006, 11:54 PM
[No subject] - by தூயவன் - 02-07-2006, 05:57 AM
[No subject] - by Mathuran - 02-08-2006, 10:26 PM
[No subject] - by RaMa - 02-09-2006, 07:12 AM
[No subject] - by Mathan - 02-10-2006, 08:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)