02-06-2006, 09:41 AM
<b>ஜெனீவா பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் முட்டுக்கட்டை
<i>ஓரிரு தினங்களில் நோர்வே தூதுவர் வன்னி செல்லும் சாத்தியம்</i></b>
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனீவா பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலையை நீக்குவதற்காக விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்துவதற்காக இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் வன்னிக்குச் செல்லவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஓரிரு தினங்களில் இவரது வன்னிப் பயணம் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெனீவா நகரில் இம்மாதம் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் நடத்த தாம் தயாராய் இருப்பதாக அரசாங்கம் நோர்வே ஊடாக விடுதலைப் புலிகளுக்கு அறிவித்துள்ளது.
ஆனால், அரசாங்கம் அறிவித்துள்ளபடி 15 ஆம், 16 ஆம் திகதிகளில் ஜெனீவாப் பேச்சுவார்த்தையை நடத்த தாம் தயாரில்லை என தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிப்பதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரொருவர்,
தமது இயக்கம் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராய் இருப்பதாகவும் ஆனால், தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களது கடத்தல் சம்பவமானது, பேச்சுக்கான புறச் சூழ்நிலையை மிக மோசமாக பாதிப்படையச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் பேச்சுகளை ஜெனீவாவில் மீள ஆரம்பிக்க தாம் தயார் என புலிகள் நோர்வே மூலம் அரசாங்கத்திற்கு தெளிவாகத் தெரிவித்த பின்னரும் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் துணைப்படையினரால் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இதனால், தமிழ் மக்கள் பதற்றமடைந்துள்ளதுடன் குழப்பமடைந்துமுள்ளனர். எனவே, அரசாங்கத்துடன் 15 ஆம் திகதி பேச்சு நடத்துவதென்பது முடியாத காரியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், துணை இராணுவக் குழுக்களே ஜெனீவாப் பேச்சுகளை ஆரம்பிப்பதில் முட்டுக் கட்டையாகவுள்ளன. எனவே, அவர்களது ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
சமாதான பேச்சுகளின் போது, யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவது பற்றியே பிரதானமாக பேசப்படவுள்ளது. அந்த உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாரில்லை. அப்படி அவர்கள் திருத்த முற்படுவார்களேயானால், பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜெனீவாப் பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் குழப்பநிலை தோன்றியுள்ளது.
இம் மாத நடுப்பகுதியில் இந்தப் பேச்சுகள் நடைபெறுமென முதலில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது இம் மாதம் பிற்பகுதியிலாவது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையிலேயே தற்போதைய சூழ்நிலையின் இறுக்கத்தை தணிக்கும் நோக்கில் நோர்வே தூதுவர் வன்னி சென்று புலிகளின் தலைவர்களுடன் பேசுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுகளை எங்கு நடத்துவது என்ற சர்ச்சைக்கு நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தீர்வு கண்ட நிலையில் தற்போதைய சர்ச்சைக்கு ஹான்ஸ் பிரட்ஸ்கார் தீர்வு காண்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
<i><b>தகவல் மூலம்- தினக்குரல்</b></i>
<i>ஓரிரு தினங்களில் நோர்வே தூதுவர் வன்னி செல்லும் சாத்தியம்</i></b>
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனீவா பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலையை நீக்குவதற்காக விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்துவதற்காக இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் வன்னிக்குச் செல்லவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஓரிரு தினங்களில் இவரது வன்னிப் பயணம் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெனீவா நகரில் இம்மாதம் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் நடத்த தாம் தயாராய் இருப்பதாக அரசாங்கம் நோர்வே ஊடாக விடுதலைப் புலிகளுக்கு அறிவித்துள்ளது.
ஆனால், அரசாங்கம் அறிவித்துள்ளபடி 15 ஆம், 16 ஆம் திகதிகளில் ஜெனீவாப் பேச்சுவார்த்தையை நடத்த தாம் தயாரில்லை என தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிப்பதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரொருவர்,
தமது இயக்கம் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராய் இருப்பதாகவும் ஆனால், தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களது கடத்தல் சம்பவமானது, பேச்சுக்கான புறச் சூழ்நிலையை மிக மோசமாக பாதிப்படையச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் பேச்சுகளை ஜெனீவாவில் மீள ஆரம்பிக்க தாம் தயார் என புலிகள் நோர்வே மூலம் அரசாங்கத்திற்கு தெளிவாகத் தெரிவித்த பின்னரும் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் துணைப்படையினரால் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இதனால், தமிழ் மக்கள் பதற்றமடைந்துள்ளதுடன் குழப்பமடைந்துமுள்ளனர். எனவே, அரசாங்கத்துடன் 15 ஆம் திகதி பேச்சு நடத்துவதென்பது முடியாத காரியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், துணை இராணுவக் குழுக்களே ஜெனீவாப் பேச்சுகளை ஆரம்பிப்பதில் முட்டுக் கட்டையாகவுள்ளன. எனவே, அவர்களது ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
சமாதான பேச்சுகளின் போது, யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவது பற்றியே பிரதானமாக பேசப்படவுள்ளது. அந்த உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாரில்லை. அப்படி அவர்கள் திருத்த முற்படுவார்களேயானால், பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜெனீவாப் பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் குழப்பநிலை தோன்றியுள்ளது.
இம் மாத நடுப்பகுதியில் இந்தப் பேச்சுகள் நடைபெறுமென முதலில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது இம் மாதம் பிற்பகுதியிலாவது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையிலேயே தற்போதைய சூழ்நிலையின் இறுக்கத்தை தணிக்கும் நோக்கில் நோர்வே தூதுவர் வன்னி சென்று புலிகளின் தலைவர்களுடன் பேசுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுகளை எங்கு நடத்துவது என்ற சர்ச்சைக்கு நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தீர்வு கண்ட நிலையில் தற்போதைய சர்ச்சைக்கு ஹான்ஸ் பிரட்ஸ்கார் தீர்வு காண்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
<i><b>தகவல் மூலம்- தினக்குரல்</b></i>
"
"
"

