02-06-2006, 08:18 AM
<b>ஜெனீவாப் பேச்சு வார்த்தை உடனடியாக சாத்தியமில்லை</b>
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவால் தமிழர் புனர் வாழ்வுக்கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ள இந்நிலையில் சிறிலங்கா அரசுடனான பேச்சுக்களுக்கு உடனடியாக சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களின் மனிதாபிமான பணிகளை முன்னின்று மேற்கொண்டு வரும் தொண்டு நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுதக்குழுக்களால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் விடுவிக்கப்பட்ட இருவர் தெரிவித்துள்ள தகவல்களின்படி கடத்தியவர்கள் இராணுவத்துடன் இயங்கும் ஆயுதக்குழுக்கள்தான் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.ரெஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த கடத்தலால் தமிழ்மக்கள் பீதியும் குழப்பமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் அரசாங்கத்துடன் இப்போது எப்படி பேச்சு நடத்தமுடியும். பெப்ரவரி 15 என்று தெரிவிக்கப்பட்டு வரும் பேச்சுக்கான காலக்கெடுவில் புலிகள் பேச்சில் கலந்து கொள்ள முடியாது. அப்படியானால் இம்மாத இறுதியில் அதற்கான சாத்தியம் உண்டா என்பது குறித்து ஆராயலாம்.
விடுதலைப் புலிகள் ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுக்களில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் அதற்கான சூழ்நிலையை முற்றாக சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் கடத்தல் சம்பவத்தால் பேச்சு குறித்து உடனடியான முடிவு ஒன்றுக்கும் தற்போதைக்கு வர முடியாது உள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையில் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டதை கண்டித்து கிளிநொச்சியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பர நாதன் தெரிவிக்கையில்:-
தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் பேச்சு மேசைக்கு தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை ஒருபோதும் அனுப்பமாட்டார்கள் என்றிருந்தார்.
ஆனால், புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தல் விடயம் ஜெனீவா பேச்சுக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று சிறிலங்கா படைத்துறை அமைச்சின் ஆலோசகர் கொட்டகதெனியா கூறியிருக்கிறார்.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவால் தமிழர் புனர் வாழ்வுக்கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ள இந்நிலையில் சிறிலங்கா அரசுடனான பேச்சுக்களுக்கு உடனடியாக சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களின் மனிதாபிமான பணிகளை முன்னின்று மேற்கொண்டு வரும் தொண்டு நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுதக்குழுக்களால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் விடுவிக்கப்பட்ட இருவர் தெரிவித்துள்ள தகவல்களின்படி கடத்தியவர்கள் இராணுவத்துடன் இயங்கும் ஆயுதக்குழுக்கள்தான் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.ரெஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த கடத்தலால் தமிழ்மக்கள் பீதியும் குழப்பமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் அரசாங்கத்துடன் இப்போது எப்படி பேச்சு நடத்தமுடியும். பெப்ரவரி 15 என்று தெரிவிக்கப்பட்டு வரும் பேச்சுக்கான காலக்கெடுவில் புலிகள் பேச்சில் கலந்து கொள்ள முடியாது. அப்படியானால் இம்மாத இறுதியில் அதற்கான சாத்தியம் உண்டா என்பது குறித்து ஆராயலாம்.
விடுதலைப் புலிகள் ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுக்களில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் அதற்கான சூழ்நிலையை முற்றாக சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் கடத்தல் சம்பவத்தால் பேச்சு குறித்து உடனடியான முடிவு ஒன்றுக்கும் தற்போதைக்கு வர முடியாது உள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையில் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டதை கண்டித்து கிளிநொச்சியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பர நாதன் தெரிவிக்கையில்:-
தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் பேச்சு மேசைக்கு தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை ஒருபோதும் அனுப்பமாட்டார்கள் என்றிருந்தார்.
ஆனால், புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தல் விடயம் ஜெனீவா பேச்சுக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று சிறிலங்கா படைத்துறை அமைச்சின் ஆலோசகர் கொட்டகதெனியா கூறியிருக்கிறார்.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"

