02-06-2006, 12:32 AM
து}யவன்! பெயருக்கேற்றற்போல் து}ய பல கருத்துக்களை வைத்திருக்கிறார்.
இளைய சமுதாயத்தின் சீரழிவுகள் பலவிதமாக இருந்தாலும் கட்டாக்காலி போன்ற இணையத்தின் சீரழிவே பெரும்பான்மையானவை என்றும், ஆனால் எதிரணியினர் அவற்றை மூடிமறைக்க முயல்கின்றனர் என்றும், இணையத்திற்கும் இணையம் சாராத ஊடகங்களுக்கும் இடையிலான வேறுபாட்டையே இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஆரம்பத்தில் குமுறுகின்றார்;.
40 வயதுடைய ஒருவர் ஆபாசமாகப் பார்க்க ஆசைப்பட்ட விடயத்தை விளக்கி "தவளையும் தன் வாயால் கெடும்" என்று ஒரு பழமொழியையும் சேர்த்திருந்தார். பாதிப்பெல்லாம் 30, 40 வயதிற்கு பிறகுதான் என்று காதிலே புூச்சுத்துகிறார் என்றார். இது "நுணலும் தன் வாயால் கெடும்" என்றுதான் வரும் என்று எண்ணுகிறேன். ஆனால் கருத்து ஒன்றுதான்.
யாழ் களத்தை உதாரணம் காட்டி, இரண்டு இலட்சத்தை நெருங்கிவிட்ட கருத்துக்களை எழுதியவர்கள் எல்லோரும் பிரயோசனமாகப் பாவித்தார்களா? பாவிக்கவில்லை! தனிநபர் தாக்குதல்கள், முகக்குறிப்புகள், வீணான அரட்டைகள் போன்றவற்றையே அதிகமாகப் பாவித்திருக்கிறார்கள் என்று அதிகமானோரைச் சாடுகிறார். (இனிமேல் கருத்தெழுதுவோர் கட்டாயம் கவனிக்கவேண்டும்.)
முன்னர் மதில்மேலிருந்து செய்தவற்றைத்தானே இப்போது இணையத்தில் செய்ய இருக்கின்றனர் என்ற எதிரணியினரின் வாதத்தை மதில் மேலிருந்து செய்தவை எல்லாம் சரியானவையா? அதுகூட சமூக சீரழிவின் வெளிப்பாடுதானே என்கிறார். மதில் மேலிருந்து செய்ததெல்லாம் இணையத்தில் செய்யலாமா? ம்! யோசிக்கவேண்டி உள்ளது. முன்னர் மதில் மேலிருந்தவர்களில் சிலர் இப்போது புலத்தில் மிக உயர்ந்த நிலையில் (மீண்டும் மதிலில் அல்ல) இருக்கின்றார்களே! (இதனை எதிரணியினர் தமக்குச் சார்பாக எடுக்கவேண்டாம்).
எம்.எஸ்.என் தமது பகிரங்க அரட்டை அறையை மூடியதற்கான விளக்கத்தைக் கொடுத்திருந்தார். அதிலே உண்மை இருக்கத்தான் செய்கிறது. இது முன்னர் அறிந்த செய்திதான். தமிழ் பிரிவு பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
இவருடைய வாதம் அருமையாகத்தான் உள்ளது. அதைவிட அஜீவன் அண்ணாவின் வாதத்திறமையைப் பார்த்து வியந்த மதனுடைய மூடி மறைக்கும் விவாதத்திறமை இவரையே வியக்கவைத்துவிட்டது என்கிறார். எதிரணியினர் நன்மை பற்றிப்பேசினாலும் தீமை அணிக்கும் உரம் சேர்க்கும் வாதங்களையும் வழங்குகிறார்கள் என்று மகிழ்கிறார். அப்படித்தானா?
தமது ஆண் நண்பர்களையே வைத்திருக்கும் மகள், அவர்களுடன் பல்வேறு படங்களைப் பரிமாறினாள் என்று அறிந்ததும் அவளுடைய பெற்றோர்கள் இணைய இணைப்பில் தில்லுமுல்லுகள் செய்து துண்டித்தார்கள் என்றார். இவற்றை உணராமல் இருக்கின்ற பெற்றோர்களை கதிர்காமக் கந்தன்தான் காப்பாற்றவேண்டும் என்றும் கடவுளை வேண்டுகிறார். கந்தன் "தகப்பன் சுவாமி" என்று பெயர் பெற்றவன். தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்தவன். அதேபோன்று யாராவது அமைந்துவிட்டால்? எதிரணியினர் கூறுவதுதான் என்ன?
இணையத்தின் முன்னேற்றம் இன்னும் 5, 10 வருடங்களில் மேலும் அதிகமாகிவிடும் என்ற குறுக்காலைபோவானின் கருத்திற்கு அப்படியென்றால் இந்த சீரழிவு 5, 10 வருடங்களில் இன்னும் அதிகமாகும் என்று அந்த வாதத்தை தமதணிக்குச் சார்பாக எடுக்கின்றாரா? சும்மா லொள்ளு விடவேண்டாம், விதண்டாவாதம் செய்யவேண்டாம், தனிநபர் தாக்குதல் என்ற போர்வையில் தமது அணியினரையே தாக்கவேண்டாம் என்று தமது அணியின் சார்பாக எச்சரிக்கின்றாரா?
இணையம் இல்லாமலே தமிழ்த்தேசியம் வளர்ந்தது. தமிழ்த்தேசிய போராட்டகால வழிகாட்டலுக்கும், வியுூகங்களுக்கும் இணையம் அல்ல இயற்கைதான் வழிகாட்டியாக இருந்தது என்று சமாதான காலத்திற்கு முந்தியவற்றை நினைவுூட்டுகின்றார்.
இணையமான சடப்பொருளை யாழ்ப்பாணவீதியில் இருக்கும் கல் ஒன்றிற்கு ஒப்பிட்டு தனது கால் விரலுடன் சேர்த்து வாதிக்கின்றார். நாரதரும், குறுக்காலைபோவானும் முன்னர் தமிழ்ச்சமூகம் தமது பொன்னான நேரத்தை மண்ணாக்குகிறார்கள் என்று புடம்போட்டுக்காட்டியவர்கள் என்பதை நினைவுூட்டி, அனைத்தையும் அறிந்து வைத்திருந்தும் அதனை விடுத்து எதையெதையோ செய்கிறார்கள் என்று வேதனைப்படுகின்றார்.
இவருடைய எல்லா வாதங்களின் சிகரமாக, அண்மையில் கட்டுப்பாடுகளை செம்மையாகக் கடைப்பிடிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சிப்பரப்பிலே இணையத்தின் பாதிப்பை அறிந்ததால் வீடுகளுக்கான இணைய இணைப்புக்களுக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை என்ற செய்தியினை ஆதாரம் காட்டி தனது கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக முன்வைத்துள்ளார்.
து}யவன் தனது வாதத்தின்போது ஆங்காகங்கே சிலவற்றை அனைவருக்கும் நினைவுூட்டினார், சில வேளைகளில் எச்சரித்தார், சிலரை சாடினார், குமுறினார், மகிழ்ந்தார், வேதனைப்பட்டார். மிகவும் திறமையாக தன் வாதத்தினை முன்வைத்தார். எதிரணியினருக்கு உண்மைகளை மூடி மறைக்கவேண்டாம் என்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் எடுத்துரைத்தார்.
"வாதம் செய்வது என் கடமை - அதில்
வழியை காண்பது உன் திறமை"
யாரோ, யாருக்கோ சொன்ன அழகான வரிகள்.
எங்கே எதிரணியினர் வந்து என்ன கூறப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.
நன்றி.
இளைய சமுதாயத்தின் சீரழிவுகள் பலவிதமாக இருந்தாலும் கட்டாக்காலி போன்ற இணையத்தின் சீரழிவே பெரும்பான்மையானவை என்றும், ஆனால் எதிரணியினர் அவற்றை மூடிமறைக்க முயல்கின்றனர் என்றும், இணையத்திற்கும் இணையம் சாராத ஊடகங்களுக்கும் இடையிலான வேறுபாட்டையே இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஆரம்பத்தில் குமுறுகின்றார்;.
40 வயதுடைய ஒருவர் ஆபாசமாகப் பார்க்க ஆசைப்பட்ட விடயத்தை விளக்கி "தவளையும் தன் வாயால் கெடும்" என்று ஒரு பழமொழியையும் சேர்த்திருந்தார். பாதிப்பெல்லாம் 30, 40 வயதிற்கு பிறகுதான் என்று காதிலே புூச்சுத்துகிறார் என்றார். இது "நுணலும் தன் வாயால் கெடும்" என்றுதான் வரும் என்று எண்ணுகிறேன். ஆனால் கருத்து ஒன்றுதான்.
யாழ் களத்தை உதாரணம் காட்டி, இரண்டு இலட்சத்தை நெருங்கிவிட்ட கருத்துக்களை எழுதியவர்கள் எல்லோரும் பிரயோசனமாகப் பாவித்தார்களா? பாவிக்கவில்லை! தனிநபர் தாக்குதல்கள், முகக்குறிப்புகள், வீணான அரட்டைகள் போன்றவற்றையே அதிகமாகப் பாவித்திருக்கிறார்கள் என்று அதிகமானோரைச் சாடுகிறார். (இனிமேல் கருத்தெழுதுவோர் கட்டாயம் கவனிக்கவேண்டும்.)
முன்னர் மதில்மேலிருந்து செய்தவற்றைத்தானே இப்போது இணையத்தில் செய்ய இருக்கின்றனர் என்ற எதிரணியினரின் வாதத்தை மதில் மேலிருந்து செய்தவை எல்லாம் சரியானவையா? அதுகூட சமூக சீரழிவின் வெளிப்பாடுதானே என்கிறார். மதில் மேலிருந்து செய்ததெல்லாம் இணையத்தில் செய்யலாமா? ம்! யோசிக்கவேண்டி உள்ளது. முன்னர் மதில் மேலிருந்தவர்களில் சிலர் இப்போது புலத்தில் மிக உயர்ந்த நிலையில் (மீண்டும் மதிலில் அல்ல) இருக்கின்றார்களே! (இதனை எதிரணியினர் தமக்குச் சார்பாக எடுக்கவேண்டாம்).
எம்.எஸ்.என் தமது பகிரங்க அரட்டை அறையை மூடியதற்கான விளக்கத்தைக் கொடுத்திருந்தார். அதிலே உண்மை இருக்கத்தான் செய்கிறது. இது முன்னர் அறிந்த செய்திதான். தமிழ் பிரிவு பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
இவருடைய வாதம் அருமையாகத்தான் உள்ளது. அதைவிட அஜீவன் அண்ணாவின் வாதத்திறமையைப் பார்த்து வியந்த மதனுடைய மூடி மறைக்கும் விவாதத்திறமை இவரையே வியக்கவைத்துவிட்டது என்கிறார். எதிரணியினர் நன்மை பற்றிப்பேசினாலும் தீமை அணிக்கும் உரம் சேர்க்கும் வாதங்களையும் வழங்குகிறார்கள் என்று மகிழ்கிறார். அப்படித்தானா?
தமது ஆண் நண்பர்களையே வைத்திருக்கும் மகள், அவர்களுடன் பல்வேறு படங்களைப் பரிமாறினாள் என்று அறிந்ததும் அவளுடைய பெற்றோர்கள் இணைய இணைப்பில் தில்லுமுல்லுகள் செய்து துண்டித்தார்கள் என்றார். இவற்றை உணராமல் இருக்கின்ற பெற்றோர்களை கதிர்காமக் கந்தன்தான் காப்பாற்றவேண்டும் என்றும் கடவுளை வேண்டுகிறார். கந்தன் "தகப்பன் சுவாமி" என்று பெயர் பெற்றவன். தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்தவன். அதேபோன்று யாராவது அமைந்துவிட்டால்? எதிரணியினர் கூறுவதுதான் என்ன?
இணையத்தின் முன்னேற்றம் இன்னும் 5, 10 வருடங்களில் மேலும் அதிகமாகிவிடும் என்ற குறுக்காலைபோவானின் கருத்திற்கு அப்படியென்றால் இந்த சீரழிவு 5, 10 வருடங்களில் இன்னும் அதிகமாகும் என்று அந்த வாதத்தை தமதணிக்குச் சார்பாக எடுக்கின்றாரா? சும்மா லொள்ளு விடவேண்டாம், விதண்டாவாதம் செய்யவேண்டாம், தனிநபர் தாக்குதல் என்ற போர்வையில் தமது அணியினரையே தாக்கவேண்டாம் என்று தமது அணியின் சார்பாக எச்சரிக்கின்றாரா?
இணையம் இல்லாமலே தமிழ்த்தேசியம் வளர்ந்தது. தமிழ்த்தேசிய போராட்டகால வழிகாட்டலுக்கும், வியுூகங்களுக்கும் இணையம் அல்ல இயற்கைதான் வழிகாட்டியாக இருந்தது என்று சமாதான காலத்திற்கு முந்தியவற்றை நினைவுூட்டுகின்றார்.
இணையமான சடப்பொருளை யாழ்ப்பாணவீதியில் இருக்கும் கல் ஒன்றிற்கு ஒப்பிட்டு தனது கால் விரலுடன் சேர்த்து வாதிக்கின்றார். நாரதரும், குறுக்காலைபோவானும் முன்னர் தமிழ்ச்சமூகம் தமது பொன்னான நேரத்தை மண்ணாக்குகிறார்கள் என்று புடம்போட்டுக்காட்டியவர்கள் என்பதை நினைவுூட்டி, அனைத்தையும் அறிந்து வைத்திருந்தும் அதனை விடுத்து எதையெதையோ செய்கிறார்கள் என்று வேதனைப்படுகின்றார்.
இவருடைய எல்லா வாதங்களின் சிகரமாக, அண்மையில் கட்டுப்பாடுகளை செம்மையாகக் கடைப்பிடிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சிப்பரப்பிலே இணையத்தின் பாதிப்பை அறிந்ததால் வீடுகளுக்கான இணைய இணைப்புக்களுக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை என்ற செய்தியினை ஆதாரம் காட்டி தனது கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக முன்வைத்துள்ளார்.
து}யவன் தனது வாதத்தின்போது ஆங்காகங்கே சிலவற்றை அனைவருக்கும் நினைவுூட்டினார், சில வேளைகளில் எச்சரித்தார், சிலரை சாடினார், குமுறினார், மகிழ்ந்தார், வேதனைப்பட்டார். மிகவும் திறமையாக தன் வாதத்தினை முன்வைத்தார். எதிரணியினருக்கு உண்மைகளை மூடி மறைக்கவேண்டாம் என்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் எடுத்துரைத்தார்.
"வாதம் செய்வது என் கடமை - அதில்
வழியை காண்பது உன் திறமை"
யாரோ, யாருக்கோ சொன்ன அழகான வரிகள்.
எங்கே எதிரணியினர் வந்து என்ன கூறப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.
நன்றி.

