02-04-2006, 01:36 PM
<b>ஜனீவா பேச்சு பெப் 15இல் என்ற அரசின் அறிவிப்புக்கு புலிகள் மறுப்பு </b>
ஜெனீவாவில் பெப்ரவரி 15ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், எங்களது அரசியல் ஆலோசகரும் எமது பேச்சுக்குழுவிற்கு தலைமை வகிப்பவருமான அன்ரன் பாலசிங்கம், அனுசரணையாளர்களுடன் இது தொடர்பாக நாளாந்தம் பேசி வருகிறார். ஆனால் பேச்சுக்களுக்கான நாள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் தாயகத்தில் தேடுதல்களும் சுற்றிவளைப்புக்களும் தொடர்கின்றன. மக்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இன்று கூட அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பேச்சுக்களுக்கான இயல்பு நிலைமையை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். நிலைமை இன்னமும் அப்படியே தான் இருக்கிறன என்றார் புலித்தேவன்.
முன்னதாக கொழும்பு ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா வர்த்தகத்துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, ஜெனீவாவில் 15ஆம் நாளன்று பேச்சுக்கள் நடைபெறும் என்று என்னிடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். நானும் பேச்சுக்குழுவில் உள்ளேன். ஜெனீவாவுக்கு இங்கிருந்து 14ஆம் நாள் புறப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டனர் என்று அரசாங்கமும் இராணுவமும் தெரிவித்து வருவது குறித்து விடுதலைப்புலிகள் கடும் சினமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தலுக்கு அரசாங்கமே காரணம் என்றும் புலிகள் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
ஜெனீவாவில் பெப்ரவரி 15ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், எங்களது அரசியல் ஆலோசகரும் எமது பேச்சுக்குழுவிற்கு தலைமை வகிப்பவருமான அன்ரன் பாலசிங்கம், அனுசரணையாளர்களுடன் இது தொடர்பாக நாளாந்தம் பேசி வருகிறார். ஆனால் பேச்சுக்களுக்கான நாள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் தாயகத்தில் தேடுதல்களும் சுற்றிவளைப்புக்களும் தொடர்கின்றன. மக்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இன்று கூட அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பேச்சுக்களுக்கான இயல்பு நிலைமையை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். நிலைமை இன்னமும் அப்படியே தான் இருக்கிறன என்றார் புலித்தேவன்.
முன்னதாக கொழும்பு ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா வர்த்தகத்துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, ஜெனீவாவில் 15ஆம் நாளன்று பேச்சுக்கள் நடைபெறும் என்று என்னிடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். நானும் பேச்சுக்குழுவில் உள்ளேன். ஜெனீவாவுக்கு இங்கிருந்து 14ஆம் நாள் புறப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டனர் என்று அரசாங்கமும் இராணுவமும் தெரிவித்து வருவது குறித்து விடுதலைப்புலிகள் கடும் சினமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தலுக்கு அரசாங்கமே காரணம் என்றும் புலிகள் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"

