Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#54
இந்தப் பட்டிமன்றத்தை தலைமை தாங்கி நடத்தும் நடுவர்களே! இதை நடத்துவதற்கு ஆவன செய்த களப் பொறுப்பாளர்களே! மட்டுறுத்தினர்களே, எனது மற்றும் எதிரணி உறவுகளே, பார்வையாளர்களே அனைவருக்கும் முதற்கண் வணக்கங்கள்!

ஒரு இளைஞனை தொலைக்காட்சிகளும், வானொலிகளும் சீரழித்து விட்டன. எனவே இணையம் சீரழிக்குமா என்று கவலைப்படத் தேவையில்லை என்று எதிரணியினர் விளம்புகின்றனர். ஆனால் அதிக விகிதமான இளைய சமுதாயத்தை சீரழிவின் பால் தள்ளியது இணையம் என்பதை இதனுள் மறைக்க முனைகின்றனர்.

எதிரணியினர் சீரழிவான விடயங்களை, சினிமா மீதோ, அல்லது தொலைக்காட்சி மீதோ, பத்திரிகை மீதோ போட்டு விட்டு, தப்பிக்கும் முறையைப் பார்க்கும் போது இணையத்திற்கும், இணையம் சாராத ஊடகங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ளும் அளவிற்கு........... முடியாமல் இருக்கின்றதோ என்ற வருத்தம் ஏற்படுகின்றது.

கட்டுப்பாடுகள் தான் ஒரு மனிதனை நல்வழிப்படுத்துகின்றன.அதனால் தான் ஒவ்வொரு நாடுகளும் தமக்கென சட்டதிட்டங்களை வரையறை செய்து வைத்திருக்கின்றன. நல்வழியில் செல்லக்கூடியதாக இருந்தால் உலகில் எவ்வித சட்டங்களும் தேவையில்லை. இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால் உலகத்தில் உள்ள கட்டுப்பாடற்ற, நினைத்ததைப் பகிரக் கூடிய ஊடகம் என்றால் அது இணையம் தான். இணையத்தினூடாக என்னவென்றாலும் செய்து கொள்ளமுடியும்.

தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளிவரும் எவ்விதமான நடவடிக்கைகளையும், அந்தந்த நாட்டு அரசாங்கங்களால் கட்டுப்படுத்தவோ, அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ முடியும். சமீபத்தில் மைக்கல் ஜக்சனின் சகோதரி செய்த அசிங்கமான ஒளிபரப்பால் அவ் தொலைக்காட்சி நிலையத்துக்கு அமெரிக்க அரசாங்கம் விளக்கம் கேட்டது நல்ல சான்று. ஏனென்றால் மற்றய ஊடகங்கள் எல்லாம் சட்டவிதிகளுக்கு அமைவாகத் தான் செயற்பட வேண்டியவை. ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் தான் செயற்பட முடியும்.

ஆனால் இணையம் என்பது கட்டாக்காலி போன்றது. கட்டுப்பாடுகள் இல்லாத எதுவுமே, ஒழுங்கான வரையறைக்குள் அடங்காது. உலகில் உள்ள பல லட்சம் தளங்களைக் கட்டுப்படுத்தவோ, அல்லது ஒவ்வொரு நபர்களின் தனிப்பட்ட மடல்களைப் பிரித்துப் பார்ப்பதோ முடியாத காரியம். எனவே மேலெழுந்தவாரியாக சீரழிவிற்கு இணையம் சாராத ஊடகங்களின் மேல் போட்டுவிட்டு தப்பிப்பது ஏற்புடையதாக இருக்கப் போவதில்லை. .

ஆதலால்<b> புலம்பெயர்வாழ்வில் இளைய சமுதாயத்துக்கு மற்றவர்களுக்கு இல்லாத விசேட தன்மை கிடைத்துவிடும் என்று காட்ட முனைவது ஏற்புடையதல்ல.</b>முடியும், முடியாது என்பது எல்லாம் வாதத்திற்காக மட்டுமே! எத்தனை பேரால் அது முடிந்தது என்று மார்தட்ட முடிந்தது என்றால் தான் அது யதார்த்தம்!! எதிரணியினால் அது முடியுமா?
Quote:"முப்பது நாற்பது வயசெல்லாம் இளையரில்லையாம்.உங்களுக்கொரு விசயம் தெரியுமோ ஆபாச தளங்களுக்குப் போன ஒரு 40 வயசாள் தன் மனனவியை தான் பார்த்த படங்கள் போல பார்க்க ஆசைப்பட்டு இப்ப விவாகாரத்து ஆயிட்டுது. "
தவளையும் தன் வாயால் கெடுமென்றால் இப்படித் தானா? பாதிப்பெல்லாம், 30,40 வயதுக்கு மேலே தான் வயதிற்கு பிறகு தான் என்பது அப்படியே புூச்சுத்துவது போல இருக்கின்றது.இளைய சமுதாயம் தவறுகளை பகுத்தறிவது போலவும், வயது வந்தவர்கள் தான் பன்னாடை போன்றவர்கள் என்றும் வாதிடுவது வேடிக்கையாக இல்லை??


பிரியோசனமாகப் பாவித்தால் பிரியோசனம் என்று அடிக்கடி எதிரணியினர் அடிக்கடி சொல்லுகின்றனர். அதற்கு ஆதாரப்படுத்தமுடியாத மூன்றாம் மனிதனைக் குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். பிரியாசனமாக இளைய சமுதாயம் பயன்படுத்துகின்றதா என்பதற்கு யாழ்களத்தை உதாரணமாகக் கொள்ளமுடியும்.

யாழ்களத்தில் வழங்கப்பட்ட கருத்துக்களின் எண்ணிக்கை 2லட்சத்தை நெருங்குகின்றது. அதிலே கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை எத்தனை பேர் பிரியோசனமாகப் பாவித்தார்கள்? "தகவலுக்கு நன்றி", "முகக்குறிகள்", அரட்டைகள்,"தனிநபர் தாக்குதல்கள்." என்பவற்றைத் தான் இந்தப் பிரியோசனப்படுத்தும் இளைய சமுதாயம் அதிகமாகப் பாவித்திருப்பது கண்கூடு. மோகன் அண்ணாவின் எதிர்பார்ப்பை எத்தனை பேர் பிரியோசனமாகப் பாவித்திருக்கின்றீர்கள்?

Quote:"கூத்தடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் டிஸ்கோ இருக்கிறது. டேற்றிங் செய்வதற்கு கைத்தொலைபேசி இருக்கிறது. கல்யாண பிறந்தநாள் சாமத்தியச்சடங்கு மண்டபங்களிலும் தமிழர் கலைநிகழ்வுகளிலும் கைத்தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கு பின்னால் டேட்டிங் செய்து பிறகு காதல் செய்து பிறகு காமம் கொண்டு பிறகு கைவிட்டு என்று நடக்கிறது. இணையம் இல்லாமல் தான் இவ்வளவும் நடக்கிறது.... ! "

நடக்கலாம். நாம் அதை மறுக்கவில்லையே, அவைகளும் குற்றவாளிக் கூண்டில் தான் நிற்கின்றன. நாம் விவாதிப்பது இளைய தமிழ்சமுதாயத்துக்கு இணையம் செய்ய பாதிப்பை மட்டும் தான்.அவற்றின் குற்றத்தை வேணுமென்றால் உங்களுக்காக பிரிதொரு விவாதத்தில் விவாதிப்போமே!!!

அவ்வாறே மதில் மேல் இருந்து கொண்டு செய்ததைத் தானே இணையத்தில் செய்ய இருக்கின்றனர் என்றவகையில் சிலபேர் நியாயப்படுத்த முனைந்திருந்தனர். மதில்மேல் இருந்து செய்தவை எல்லாம் சரியானவை என்று யார் சொன்னது? அது கூட சமூகசீரழிவின் வெளிப்பாடு தானே? மேலும் மதில் மேல் இருந்தவர்களை கட்டுப்படுத்துவதற்கென்று சமூகசூழல் இருந்தது! ஆனால் இணையத்தைக் கட்டுப்படுத்த யார் உள்ளனர்?
Quote:சீரழிவால் தான் MSN சாட் தளம் பொது அரட்டையை நிறுத்தி இருப்பதாக எங்கே சொல்லப்பட்டது?? எம் எஸ் என் மஸெஞ்சர்கள் எப்போதுதடைசெய்ய போகிறார்கள்... அல்லது புதிதாக ஒரு வேர்ஸனை கொண்டுவரப்போகிறார்களாமா???
எம்எஸ்என் தனது பகிரங்க அரட்டை அறையை மூடியதற்கு அங்கு சில பாலியல் துஸ்பிரயோக விடயங்கள் பரிமாறப்படுவதால் தான் அது நிறுத்தப்படுவதாகவும் மைக்ரோ சொவ் விளக்கம் கொடுத்திருந்தது. எனவே விஸ்ணு அவர்களே நீங்கள் சொன்னது போல புது பதிப்பு(வேசன்) கொண்டு வருவதற்காக இருந்தால் 2 வருடமாக அது முடக்கப்பட்டிருக்கத் தேவையில்லையே! புது பதிப்பை முடக்கப்படாமல் தான் இணைப்பார்களே தவிர இப்படி நிரந்தரமாக நிறுத்தி விட்டல்ல. எனவே அதைப் புூசி மொழுகுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை.

அனித்தா அவர்கள் சொன்னார்கள். யாகு அரட்டை அறையில் முன்பு பட்டிமன்றம் எல்லாம் நடந்ததாக. அது எவ்வகையில் உண்மை என்று உறுதிப்படுத்த முடியாது. ஆனாலும் புலம்பெயர்வாழ் தமிழர்கள் அமைத்து வைத்திருக்கும் தமிழ் பிரிவில் 2002ம் ஆண்டு முதல் நான் இருந்திருக்கின்றேன். அங்கே என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன. எதைப்பற்றி பேசுகின்றார்கள் என்று எனக்குத் தெரியும். அதை இங்கே சொன்னால் அது அசிங்கம்.

Quote:அஜீவன் அண்ணாவின் வாததிறனை பார்த்து வியந்து போய்விட்டாராம் - ஆக அவரின் வாதமும் அதில் இருந்த எமது அணிக்கு சார்ப்பான கருத்துக்களும் தன்னை வாயடைக்க வைத்துவிட்டதாக மறைமுகமாக ஒத்து கொள்கின்றார்.
நிச்சயமாக மதன். ஒரு சமூகத்தை சீரழிக்கும் விடயத்தை இவ்வளவு அழகாக முடிமறைக்கும் திறமையைக் கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை. பாதிப்புக்களை எவ்வளவு லாவமாக மூடி மறைக்கின்றீர்கள்.

Quote:நீங்க சொன்ன 2 வது வகை தமிங்கிலம் பேசுபவர்கள்தான் கனடாவின் சரித்திரம் கண்டிராத ஒரு பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி முடித்தார்கள்!
இது முதற்கட்டம்.. நான் இங்கேதான் என் நினைவுதெரிந்தவரை இருக்கிறேன். ஆனால் இனம் முக்கியம் ... இதுக்கும் சிங்கள அரசாங்கம் பதில் சொல்லாவிடில் இன்னும் தீவிரமாக எம் போராட்டத்தை முன்னெடுப்போம்! .............................................................
...............இந்த இங்க பிறந்து வளர்ந்த இளையோர்தானே அதை செய்தாங்க.
அப்போ எங்கே போனிங்க நீங்க?
அவர்கள் பார்த்திராத இணையதளங்களா?
அது அவர்கள் பாதையை திசை திருப்பிச்சா?
குடிகாரன் ஒருவன் டாக்டர் ஆக இருக்கமுடியாதா? அவன் நாட்டுக்கு சேவை ஆற்றுபவன் மறுப்பதற்கில்லை. ஆனால் குடி என்ற போதை அவன் வாழ்வைச் சீரழித்து இருக்கின்றது அல்லவே. இது போலத் தான் வர்ணன் கேட்ட பொங்குதமிழில் இணைந்த கூட்டம் பற்றியதும், சுனாமிக்கு உதவிய இளைஞர் பற்றியதும். இணையத்தில் ஆபாசப் படங்களைப் பார்ப்பவன் பொங்குதமிழுக்கு வரமாட்டான் என்று யார் சொன்னது? நமக்குள்ள பிரச்சனை புலம்பெயர்வாழ்வில் இணையத்தின் பிரதிபலிப்பு மட்டும் தான்.

நண்பர் குறுக்ஸ் என்னதான் நன்மை பற்றிப் பெருமை பேச வந்தாலும் தவிர்க்க முடியாமல், இடையிடையே, தீமைகளுக்கு உதாரணம் காட்டுவது உண்மைகள் மறைக்கமுடியாதவை என்பதைச் சுட்டி நிற்கின்றது.
Quote:இந்தக் களத்தில் பகிரப்பட்ட ஒரு அனுபவம். குறிப்பிட்ட ஒரு பிள்ளையின் பெற்றோர் மகள் எம்எஸ்என் இல் ஆண்களை மாத்திரம் நண்பர்களாக சேர்த்து வைத்திருந்தாள். பல்வேறு பட்ட படங்களை பரிமாறினாள். அதை அறிந்ததால் பெற்றோர் இணைய இணைப்பை துண்டித்து விட்டார்கள். ஆனால் அதை நேரடியாக செய்தால் பிள்ளை கேவித்துவிடும் என்று கணனிக்கு இணைய இணைப்பு வழங்கும் கடத்தியில் தில்லு முல்லுச் செய்துதார்கள் என்று.
இங்கே பல்வேறுபட்ட படங்களைப் பகிந்தாள் என்பது கூட தீமைகளைச் சுட்டி நிற்கின்றதல்லவா!! மேலும் அப் பிள்ளையின் பெற்றோர் கண்டுபிடித்தபடியால் அப் பிள்ளையை ஓரளவேனும் காப்பாற்ற முடிந்தது. ஆனால் இதை உணராத பெற்றோர்கள் எத்தனை பேர்கள் உள்ளனர். இவர்களுக்கு புரிய வைக்க கதிர்காமக் கந்தன் தான் துணை புரிய வேண்டும். முருகா!!!
இப்படியே விடுவாரா நண்பர் குறுக்ஸ். எனி எம்மை ஆக்கிரமிக்கப் போகும் இணையத்தின் இன்னுமொரு பயங்கரத்தையும் சுட்டிக் காட்டுகின்றார்.நாம் சந்திக்கப் போகும் அடுத்த பயங்கரம் அது.
Quote: "இன்னுமொரு 5...10 வருடங்களில் கைத் தொலைபேசியில் இணையத்திற்கு செல்லக்கூடியது என்பது சர்வசாதாரணமாகப் போகிறது. அது மாத்திரமல்ல தொலைக்காட்சி உரையாடல் (video conference) கூடச் செய்யலாம். தனியே பேச்சு எழுத்துக்கள் மாத்திரம் அல்ல பங்குபற்றுபவர்களின் அசையும் படங்கள் உடனுக்குடன் பரிமாறப்படும். இங்கே ஒருவரின் வக்கிர எண்ணங்கள் இன்னெருவரினால் அறைக்குள் மாத்திரம் ஒளிந்திருந்து பகிரப்படப்போவதில்லை அணிந்திருக்கும் ஆடைகளுக்குள் ஒளித்துவைக்கும் கைத்தொலைபேசியால் எங்கும் என்னேரமும் நிறைவேற்றலாம். "
ஆக, இப்போது புலம்பெயர்வாழ் இளையசமுதாயம் கேவலம் கணனியால் கைக்கொள்ளப்படும் இணையத்தால் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் கைத்தொலைபேசியில் பாவிக்கப்படும் இணையத்தால் தான் பாதிக்கப்படப் போகின்றார்களாம். ரெம்ப லொள்ளுத் தான் உங்களுக்கு குறுக்ஸ்!!!

வேண்டிய வாதத்தை தங்களால் சொல்ல முடியாவிட்டால் மற்றவர்களை விதண்டாவாதிகளாக காட்டுவது தவிர்க்க முடியாது தான். ஆனால் விதாண்டாவாதம் பற்றியே பட்டிமன்றத்தை கொண்டு சென்றிருப்பது மேகநாதன் செய்திருக்கும் அழகு. தனிநபர் தாக்குதல்கள் என்று சொன்னபடியே எம் அணியினைரை தாக்கி கதைப்பது எல்லாம் ஏற்புடையதாகத் தெரியவில்லை. இப்படி முகந்தெரியாதபடி தனிநபர் தாக்குதல் செய்வது கூட இணையத்தின் தீமைகளை தமிழ்சமுதாயம் தெளிவாகப் பின்பற்றுகின்றது என்பதற்கு சான்று.
Quote:விமான தொழில்நுட்ப அறிவு பலகாலகட்டத்து யுத்த சம்பந்தமான அறிவு புலனாய்வுசம்பந்தபட்ட அறிவுகளை புல சூழலில் இருக்கு சாதகமான் அம்சங்களோடு பெற்று தாயக உறவுகளோடு பகிர்ந்து கொள் வதன் மூலம் தமிழ் தேசியத்துக்கூட வலுவூட்டிக்கொள்கிறான்.
உங்கள் வாதம் சிறப்பாக அமையவேண்டும் என்றால் போராட்டத்தையும் இணைத்துக் கதைப்பது இயல்பு தான். ஆனால் அதற்காக இப்படியா??
தேசியத் தலைவர் போராட்டத்தில் குதித்தபோதோ, அல்லது இராணுவ தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுவதற்கோ இணையத்தைப் பாவித்தனர் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம். ஜயா!! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இணைய ஊடகம் என்று வந்தது எல்லாம் இந்த சமாதானகாலத்திற்கு பிற்பட்டகாலத்தில் தான். நீங்கள் வேணுமென்றால் மறந்திருக்கலாம். யுத்தம் நடந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இணையப் பாவனையைக் கொண்டிருக்கவில்லை. அப்போது புலிகளினால் தொலைபேசிச் செய்தி என்று சிறிய ஒரு செய்திப்பக்கம் மட்டும் தான் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டன. அப்போது எல்லாம் போராட்டத்துக்கு பெறப்பட்ட வியுகங்களுக்கு இணையம் ஒன்றும் சொந்தக்காரர் கிடையாது.
மேலும் யுத்தநிறுத்தகாலப்பகுதி வரமுன்பு கொல்லப்பட்ட கேணல் சங்கர் அவர்கள் விமாப்படைக்கான கட்டமைப்புக்களை செய்துமுடித்திருந்த பின்பு தான் வீரச்சாவடைந்தார். எனவே தலைவர் சொல்வது போல இயற்கை தான் வழிகாட்டியே தவிர, இணையம் அல்ல. தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள்!!

புதினமாக இருக்கட்டும், சங்கிதியாக இருக்கட்டும் அவை கூட இந்த சமாதான கால ஒப்பந்த்தின் பின்னரான வெளியீடுகளே!!இணையத்திற்கு முன்பெல்லாம் தேசியம் வளரவில்லையா?

Quote:நிலமை இவ்வாறு இருக்க அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?
மற்றவர்கள் எல்லாம் தலைப்பை விட்டு, இணையத்தின் நன்மை பற்றிப் புலம்பிக் கொண்டிருக்க, நாரதர், ஒருபடி மேலே சென்று இணையம் தப்பில்லை. எய்தவனில் தான் தப்பு என்கின்றார். அவருக்கு அவர் பாணியில் சொன்னால் தான் புரியும் என நினைக்கின்றேன். நாம் யாழ்பாணவீதி ஒன்றில் போகின்றோம். வழியில் கல் ஒன்று காலில் தட்டி விட்டது. நாம் உடனே கால் விரலை வெட்டிவிடுவோம். ஏனென்றால் ஏய்தவன் இருக்க அம்பை நோகலாமா? கல் வழியில் பேசாமல் தானே இருந்தது. நாம் தானே போய் மோதினோம்.

இப்படித் தான் இருக்கின்றது அவரது வாதம். இணையம் பாவிப்பவரில் தான் தப்பாம். இணையத்தில் தப்பில்லையாம்.தலைப்பை விட்டு கடைசியில் இணையத்தை நியாயப்படுத்தும் அளவிற்கு எதிரணியினர் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாகத் தான் எனக்கு புலப்படுகின்றது.

இப்படியே விவாதித்தால் மட்டுறுத்தினர் தேவையில்லை என்கின்றார். வரவேற்கின்றோம் நாரதர். ஆனால் அது உங்களால் முடியுமா? இங்கே மட்டறுத்தனர்களுடன் முரண்டு பிடிப்பதிலும், தணிக்கை செய்யப்படும் கருத்துக்களிலும் எமது ஆக்கங்களும் முக்கியமாக உமது கருத்துக்களும் அடங்குகின்றன என்பதை மறுக்கமுடியுமா? வெறுமனே தேவையில்லை என்று கதைத்தால் மட்டும் போதாது. <b>அவற்றை யதார்த்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அது தான் தலைப்பு சொல்லும் பிரச்சனையே!!</b>

இதை விட ஒரு காலத்தில் சீனசமுதாயம் எப்படி நேரத்தை பயன்படுத்துகின்றன என்றும், தமிழ்சமுதயம் ஏன் அரட்டைகளிலும், வேறுவழிகளிலும் நேரத்தைச் செலவழிக்கின்றன என்று எம் மக்களின் உண்மை நிலையை புடம் போட்டுக் காட்டியவர்கள் நாரதரும், குறுக்கால போவானும் என்பதை நினைவு கூறுகின்றேன்.

இதனால் அரட்டை அடிப்பதை கண்டித்த உங்களை களத்தின் பல உறுப்பினர்கள் கோபித்துக் கொண்டதையும் கண்கூடாகக் கண்டிருக்கின்றேன். பிற்பட்ட காலப்பகுதியில் நீங்களும் அவ் அரட்டைகளுடன் ஒன்றித்துப் போனதையும் நாம் அறிவோம். பெரும்பான்மை புலம்பெயர் சமுதயத்தை இணையத்தினூடு அச்சந்தர்ப்பத்தில் அடையாளம் கண்டிருக்கும் நீங்கள், தலைப்பிற்காக வாதாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையைக் கண்டு வேதனையடைகின்றேன்.

இந்த வாதங்கள் எல்லாவற்றையும் தாண்டி, இணையத்தின் பாதிப்பைக் காட்ட வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளின் அரசங்கத்தில் இணையத்தின் பயன்பாடு பற்றி ராய்ட்டர் எழுதிய செய்தி, இது சிலநாட்களுக்கு முன்பு தான் வந்தது. <b> "வீடுகளில் இணைய இணைப்புக்கு ஏன் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை விதித்துள்ளனர் என்ற கேள்விக்கு நிசாந்தன் அலோசியஸ் அளித்த பதில்:ஒழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுகின்றனர். அதனால் வீடுகளுக்கான இணைய இணைப்புக்கு அனுமதி அளிக்கவில்லை. கணணி சேர்வர் ஊடாக இணையப் பயன்பாட்டை நாம் கண்காணித்து வருகிறோம்" </b>
இதுவே இணையத்தின் பாதிப்பை புலிகள் உணர்ந்த விதத்தைச் சுட்டிக் காட்டும். இணையத்தைப் பற்றிய உண்மையான முகத்தைப் போட்டுக் காட்டும். கட்டுப்பாடுகளை செம்மையாகக் கடைப்பிடிக்கும் விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பரப்பிலேயே, இணையத்தின் பிரதிபலிப்புக்களை கட்டுப்படுத்துகின்றமை அதன் பாதிப்புக்களை உணர்ந்தபடியால் தான். ஆனால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வாழும் புலம்பெயர் இளம்சமுதாயத்திற்கு இணையப் பாதிப்பில் இருந்து தப்புவார்கள் என்பது மறைக்கப்படும் வேதனை!!
ஒரு குடம் நஞ்சில் ஒரு துளி பாலுக்காக அவ் நஞ்சையே அருந்துவது போலத் தான் உங்கள் வாதம். இல்லை!! ஒரு குடம்பாலில் தான் ஒரு துளி நஞ்சு கலந்துள்ளது என்று நீஙகள் சொன்னாலும் கூட அது எமக்கு அழிவைத் தான் தரப்போகின்றது.


எனவே வாதம் என்றபெயரில் இணையத்தின் பாதிப்புக்களை மூடி மறைக்காதீர்கள். அது எம் இளம் சமுதாயம் மேலும்மேலும் சீரழிந்து போவதற்கு இப்படியான மூடி மறைக்கப்படும் வாதங்கள் தான் காரணமாக தமிழ் உலகம் கட்டாயம் சுட்டி நிற்கும்

நன்றி!!!
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)