02-04-2006, 03:25 AM
<b>மங்கள சமரவீர கருத்துக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் எதிர்ப்பு </b>
[சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2006, 06:46 ஈழம்] [ம.சேரமான்]
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்யவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்ததை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிர்வாகி அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் வெளியிட்ட அறிக்கை:
தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக தகவல் எமக்குக் கிடைத்த பின்னர் இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதே நேரத்தில் கொழும்பில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
<i><b>puthinam.com</b></i>
[சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2006, 06:46 ஈழம்] [ம.சேரமான்]
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்யவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்ததை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிர்வாகி அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் வெளியிட்ட அறிக்கை:
தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக தகவல் எமக்குக் கிடைத்த பின்னர் இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதே நேரத்தில் கொழும்பில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
<i><b>puthinam.com</b></i>
"
"
"

