02-03-2006, 07:45 AM
<span style='color:darkred'><b>பேச்சுக்கான சூழமைவு என்ன?</b>
<b> ஞாபகன்</b>
தென்னிலங்கை ஆட்சியாளர்களான ஜே.வி.பி, ஹெல உறுமய மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டணியினர் தமிழ் மக்களை எந்த முறையில் அணுக வேண்டும் என்பதை சில வாரங்களுக்கு முன்பு வரை திட்டமிட்ட ஒரு முன்மொழிவாக வைத்திருந்தனர். அதனையே தேர்தல் பிரசார பொருளாகவும் கூட கொண்டு சென்றிருந்தனர். ஆனால், தமிழ் மக்களையோ விடுதலைப் புலிகளையோ அவர்கள் நினைத்த கோணத்தில் நெருங்கவோ அணுகவோ முடியாது என்பதை இப்போதாவது அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
இதனை ஜே.வி.பி, ஹெல உறுமய போன்றன விளங்கிக் கொண்டனவோ இல்லையோ மகிந்தராஜபக்ஷ மிகக் குருரமான முறையில் விளங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழர் தரப்பை எவ்வாறு அணுகலாம் என்று தனது நலனின்பால் நின்று மகிந்த போட்ட கணக்குக்கு மாறாக, தமிழர் தரப்பு அவரை எவ்வாறு அணுக வேண்டும் என்று தீர்மானித்து செயற்படுகின்றது.
தனது வெற்றிக்கு பின்னால் நின்ற சிங்களக் கடும்போக்குவாதிகளின் வழிகாட்டலில் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக மகிந்த இராணுவ கட்டமைப்புக்களில் சில மாற்றங்களை மேற்கொண்டார். சிறிலங்கா இராணுவத் தளபதி, இராணுவப் புலனாய்வுத் தளபதி போன்றோர்களின் புதிய நியமனங்கள் தமிழர் தரப்புக்கு – மக்களுக்கு காட்டிய சமிக்ஞை திமிர்த்தனமானது என்பதில் ஐயமில்லை.
சமிக்ஞைகளோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் நடைமுறைப்படுத்திய படையியல் செயற்பாடுகளும் மோசமானவை. யதார்த்தத்தில் இருந்து வெகுதூரத்தில் நின்றுகொண்டு தமிழ் மக்களை அச்சுறுத்தி பணியவைக்கும் தந்திரோபாயத்தை கையாயத் தலைப்பட்டதன் விளைவை அவர்கள் அனுபவித்தார்கள். போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது அப்பாவி தமிழ் மக்ககள் கொல்லப்பட்டதற்கு சமனாக தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த சிங்களச் சிப்பாய்களின் உயிர்களும் வாங்கப்பட நேர்ந்தது.
அதேநேரம் சர்வதேச ரீதியாக உதவி பெற்று புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று மகிந்த நம்பிய இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கையைவிட்டன. மகிந்த சூடியிருந்த எதிர்நிலைப்பாடுகள் எவையோ அவற்றையே அவர் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும் என்று அவை அழுத்தம் கொடுத்தன.
குறிப்பாக நோர்வேயை அனுசரணையாளர்களாக கொண்டு பேச்சுக்களை ஆரம்பிப்பதுதான் மகிந்த செய்யவேண்டிய காரியம் என்பதை அவர்கள் உறுதிபட வெளிக்காட்டினர். இது தமிழர் தரப்புக்கு முரண்பாடில்லாததாகவும் அமைந்த அதேவேளை ஐரோப்பிய நாடுகளை மையமாக கொண்டே பேச்சுக்களை நடத்த இயலும் என்று விடுதலைப்புலிகளின் விருப்பத்தையும் மதிப்பதாகவும் இருந்திருக்கின்றது.
இந்த சாதகமான அம்சங்கள் தான் கடந்;த வாரம் தேசியத் தலைவர் நோர்வே சமாதானத் தூதுவரும் அபிவிருத்தி அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் அவர்களை சந்தித்தபோது ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்க காரணமானது.
இந்தப் பேச்சுக்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையை செம்மையாக அமுல்படுத்துவது பற்றியதாகவே அமையவுள்ளன. மகிந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஒற்றையாட்சிக்கும் அரசியல் யாப்புக்கும் முரணாக இருப்பதாகவும் அதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரே மிகப்பெரிய முரண்பாட்டின் வடிவமாக இதனை எவ்வாறு முழுமையாக அமுல்படுத்துவது என்று பேசுவதற்று இணங்க வேண்டிய இராஜதந்திர சிக்கலுக்குள் அகப்பட்டிருக்கின்றார்.
அவர் பதவிக்கு வந்ததும் வடக்கு கிழக்கில் என்னென்ன இராணுவக் கெடுபிடிகளை ஆரம்பித்து வைத்தாரோ அவை எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வந்தால் தான் பேசமுடியும் என்ற ஒரு நிபந்தனையையும் ஏற்றுக்கொண்டு அமுல்செய்ய வேண்டியவராக இருக்கின்றார். அவ்வாறு செய்தாலே ஜெனீவா பேச்சுக்களுக்கு சாத்தியம் இருக்கும் என்ற மிகக் கடுமையான யதார்த்தம் அவருக்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது.
இதை செய்யாமல், பேச்சுக்களுக்காக ஜெனீவாவுக்கு போகாமல் விட்டால் அவரது படைகள் மிகக் கடுமையான பாடத்தை படிக்கும் என்பதும் இலங்கைத்தீவு விரைவிலேயே இரண்டு நாடுகளாக பிளந்துவிடும் என்பதும் தெனிவாகவே இப்போது அவருக்கு விளங்கியிருக்கின்றன. இதனை ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் விளங்கிக் கொண்டிருக்கின்றன. என்றாலும் அவர்கது இனவாதப் பழக்கதோசம் இன்னும் நோர்வேக்கு எதிரான நிலைப்பாடாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனினும், இவர்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையை கிழித்து வீசிவிட வேண்டும் என்று இன்னும் பேசுமளவுக்கு துணிச்சலுடன் இல்லை என்பது தமிழர் தரப்பின் வலுவை அவர்கள் உணர்ந்துள்ளமைக்கு சாட்சியமாகும்.
ஆனால், தென்னிலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகளில் - இன அழிப்பு போரைத் தொடங்கும் முனைப்பில் இருந்து விலகிவிட்டதாக கருதமுடியாது. மானசீகமாக அது தமிழர் தரப்பு பலமிழந்து அழிந்து போகவேண்டும் என்ற சிந்தனையில் தான் இருக்கின்றது.
நோர்வே தூதுவர் சந்திப்பதற்று முன்வரை எந்தநேரத்திலும் போர் ஒன்று தொடங்கும் அதை எதிர்கொள்ளவேண்டும் என்ற தயார்ப்படுத்தலில் இருந்திருக்கின்றன. போரொன்றை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் அதற்கான திட்டங்களிலும் ஈடுபட்டிருக்கின்றன. தைப்பொங்கல் தினத்துக்கு பின் போர் ஒன்று வெடிக்கும் என்று தென்னிலங்கை சிங்கள ஊடகங்களும் அவதானிகளும் எதிர்வு கூறி படைகளை உசார் நிலைக்குட்படுத்தியிருக்கின்றார்கள்.
ஆனால், எதிர்பார்த்தது போல விடுதலைப் புலிகள் அத்ததையதொரு கட்டத்துக்குள் பிரவேசிக்காததால் விரக்தி நிலைக்குட்பட்டனர் என்றே கருதவேண்டும். வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருக்கும் சிறிலங்கா படையினர் இன்னொரு போர் தொடர்பில் மிகுந்த கிலேசத்துடனும் மனவுளைச்சலுடனும் இருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஆனால், போரின் மூலம் பிழைப்பு நடத்தும் தென்னிலங்கையின் சில சக்திகள் போரொன்றுக்கான எதிர்பார்ப்புடன் அதிலும் தமிழர் தரப்பின் அழிவை வரவேற்கும் மனப்பாங்குடன் காத்திருக்கின்றன. இதன் வெளிப்பாடாகவே கடந்த வாரத்தில் மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் கிளைமோர் தாக்குதல் இடம் பெற்றதாகவும் அதில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சிக்கியதாகவும் செய்தி வெளியிடும் அளவுக்கு குரூரமான கற்பனை வளத்துடன் இருந்தன.
இந்த செய்தியுடன் யுத்தம் ஒன்று வெடிக்கப்போவதாக முடிவெடுத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சிறிலங்காவுக்கு திரும்ப இருந்த முடிவை லண்டன் விமான நிலையத்தில் வைத்து மாற்றிக் கொண்டமையும் தென்னிலங்கை என்ன மனோபாவத்துடன் இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.
இப்போது ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்துவதற்கான தயார்ப்படுத்தலில் சிறிலங்கா அரசு இருக்கின்றது. உண்மையில் ஜெனீவாவில் என்ன பேசப்பட வேண்டும் என்பதும் என்ன முடிவை அரசு கூற வேண்டும் என்பதும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன.
புரிந்துணர்வு உடன்படிக்கையை இருதரப்பும் செம்மையான முறையில் அமுல்படுத்துவது என்பது தான் பேச்சின் பொருள். குறிப்பாக சிறிலங்கா அரசும் படைகளும் உடன்படிக்கையின் படி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேறி மக்களின் இயல்பு வாழ்வுக்கு வழி சமைத்தல், ஒட்டுப்படைகளினை அகற்றுதல் என்பனவே பிரதான விடயங்கள். இதனை செய்ய முடியுமா இல்லையா என்பதையே சிறிலங்கா ஜெனீவாவில் வைத்து விடுதலைப் புலிகளிடம் கூற வேண்டும்.
இதற்கு மகிந்த அரசு தயார் என்றால் எத்தனை நாள்களுக்குள் செய்து முடிக்கும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னைய பேச்சுக்களில் இழுத்தடித்த வரலாற்றை இந்த பேச்சுக்களிலும் சிறிலங்கா அரசு தொடர முடியாது.
ஏனெனில், தமிழர் தரப்பு தமிழீழத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க தயாரான வேளையிலேயே இந்தப் பேச்சுக்கான சூழமைவு ஏற்பட்டிருக்கின்றது.</span>
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு-</b></i><b>வாரவெளியீடு(ஆசிரியர் தலையங்கம்)</b>
<b> ஞாபகன்</b>
தென்னிலங்கை ஆட்சியாளர்களான ஜே.வி.பி, ஹெல உறுமய மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டணியினர் தமிழ் மக்களை எந்த முறையில் அணுக வேண்டும் என்பதை சில வாரங்களுக்கு முன்பு வரை திட்டமிட்ட ஒரு முன்மொழிவாக வைத்திருந்தனர். அதனையே தேர்தல் பிரசார பொருளாகவும் கூட கொண்டு சென்றிருந்தனர். ஆனால், தமிழ் மக்களையோ விடுதலைப் புலிகளையோ அவர்கள் நினைத்த கோணத்தில் நெருங்கவோ அணுகவோ முடியாது என்பதை இப்போதாவது அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
இதனை ஜே.வி.பி, ஹெல உறுமய போன்றன விளங்கிக் கொண்டனவோ இல்லையோ மகிந்தராஜபக்ஷ மிகக் குருரமான முறையில் விளங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழர் தரப்பை எவ்வாறு அணுகலாம் என்று தனது நலனின்பால் நின்று மகிந்த போட்ட கணக்குக்கு மாறாக, தமிழர் தரப்பு அவரை எவ்வாறு அணுக வேண்டும் என்று தீர்மானித்து செயற்படுகின்றது.
தனது வெற்றிக்கு பின்னால் நின்ற சிங்களக் கடும்போக்குவாதிகளின் வழிகாட்டலில் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக மகிந்த இராணுவ கட்டமைப்புக்களில் சில மாற்றங்களை மேற்கொண்டார். சிறிலங்கா இராணுவத் தளபதி, இராணுவப் புலனாய்வுத் தளபதி போன்றோர்களின் புதிய நியமனங்கள் தமிழர் தரப்புக்கு – மக்களுக்கு காட்டிய சமிக்ஞை திமிர்த்தனமானது என்பதில் ஐயமில்லை.
சமிக்ஞைகளோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் நடைமுறைப்படுத்திய படையியல் செயற்பாடுகளும் மோசமானவை. யதார்த்தத்தில் இருந்து வெகுதூரத்தில் நின்றுகொண்டு தமிழ் மக்களை அச்சுறுத்தி பணியவைக்கும் தந்திரோபாயத்தை கையாயத் தலைப்பட்டதன் விளைவை அவர்கள் அனுபவித்தார்கள். போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது அப்பாவி தமிழ் மக்ககள் கொல்லப்பட்டதற்கு சமனாக தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த சிங்களச் சிப்பாய்களின் உயிர்களும் வாங்கப்பட நேர்ந்தது.
அதேநேரம் சர்வதேச ரீதியாக உதவி பெற்று புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று மகிந்த நம்பிய இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கையைவிட்டன. மகிந்த சூடியிருந்த எதிர்நிலைப்பாடுகள் எவையோ அவற்றையே அவர் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும் என்று அவை அழுத்தம் கொடுத்தன.
குறிப்பாக நோர்வேயை அனுசரணையாளர்களாக கொண்டு பேச்சுக்களை ஆரம்பிப்பதுதான் மகிந்த செய்யவேண்டிய காரியம் என்பதை அவர்கள் உறுதிபட வெளிக்காட்டினர். இது தமிழர் தரப்புக்கு முரண்பாடில்லாததாகவும் அமைந்த அதேவேளை ஐரோப்பிய நாடுகளை மையமாக கொண்டே பேச்சுக்களை நடத்த இயலும் என்று விடுதலைப்புலிகளின் விருப்பத்தையும் மதிப்பதாகவும் இருந்திருக்கின்றது.
இந்த சாதகமான அம்சங்கள் தான் கடந்;த வாரம் தேசியத் தலைவர் நோர்வே சமாதானத் தூதுவரும் அபிவிருத்தி அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் அவர்களை சந்தித்தபோது ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்க காரணமானது.
இந்தப் பேச்சுக்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையை செம்மையாக அமுல்படுத்துவது பற்றியதாகவே அமையவுள்ளன. மகிந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஒற்றையாட்சிக்கும் அரசியல் யாப்புக்கும் முரணாக இருப்பதாகவும் அதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரே மிகப்பெரிய முரண்பாட்டின் வடிவமாக இதனை எவ்வாறு முழுமையாக அமுல்படுத்துவது என்று பேசுவதற்று இணங்க வேண்டிய இராஜதந்திர சிக்கலுக்குள் அகப்பட்டிருக்கின்றார்.
அவர் பதவிக்கு வந்ததும் வடக்கு கிழக்கில் என்னென்ன இராணுவக் கெடுபிடிகளை ஆரம்பித்து வைத்தாரோ அவை எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வந்தால் தான் பேசமுடியும் என்ற ஒரு நிபந்தனையையும் ஏற்றுக்கொண்டு அமுல்செய்ய வேண்டியவராக இருக்கின்றார். அவ்வாறு செய்தாலே ஜெனீவா பேச்சுக்களுக்கு சாத்தியம் இருக்கும் என்ற மிகக் கடுமையான யதார்த்தம் அவருக்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது.
இதை செய்யாமல், பேச்சுக்களுக்காக ஜெனீவாவுக்கு போகாமல் விட்டால் அவரது படைகள் மிகக் கடுமையான பாடத்தை படிக்கும் என்பதும் இலங்கைத்தீவு விரைவிலேயே இரண்டு நாடுகளாக பிளந்துவிடும் என்பதும் தெனிவாகவே இப்போது அவருக்கு விளங்கியிருக்கின்றன. இதனை ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் விளங்கிக் கொண்டிருக்கின்றன. என்றாலும் அவர்கது இனவாதப் பழக்கதோசம் இன்னும் நோர்வேக்கு எதிரான நிலைப்பாடாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனினும், இவர்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையை கிழித்து வீசிவிட வேண்டும் என்று இன்னும் பேசுமளவுக்கு துணிச்சலுடன் இல்லை என்பது தமிழர் தரப்பின் வலுவை அவர்கள் உணர்ந்துள்ளமைக்கு சாட்சியமாகும்.
ஆனால், தென்னிலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகளில் - இன அழிப்பு போரைத் தொடங்கும் முனைப்பில் இருந்து விலகிவிட்டதாக கருதமுடியாது. மானசீகமாக அது தமிழர் தரப்பு பலமிழந்து அழிந்து போகவேண்டும் என்ற சிந்தனையில் தான் இருக்கின்றது.
நோர்வே தூதுவர் சந்திப்பதற்று முன்வரை எந்தநேரத்திலும் போர் ஒன்று தொடங்கும் அதை எதிர்கொள்ளவேண்டும் என்ற தயார்ப்படுத்தலில் இருந்திருக்கின்றன. போரொன்றை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் அதற்கான திட்டங்களிலும் ஈடுபட்டிருக்கின்றன. தைப்பொங்கல் தினத்துக்கு பின் போர் ஒன்று வெடிக்கும் என்று தென்னிலங்கை சிங்கள ஊடகங்களும் அவதானிகளும் எதிர்வு கூறி படைகளை உசார் நிலைக்குட்படுத்தியிருக்கின்றார்கள்.
ஆனால், எதிர்பார்த்தது போல விடுதலைப் புலிகள் அத்ததையதொரு கட்டத்துக்குள் பிரவேசிக்காததால் விரக்தி நிலைக்குட்பட்டனர் என்றே கருதவேண்டும். வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருக்கும் சிறிலங்கா படையினர் இன்னொரு போர் தொடர்பில் மிகுந்த கிலேசத்துடனும் மனவுளைச்சலுடனும் இருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஆனால், போரின் மூலம் பிழைப்பு நடத்தும் தென்னிலங்கையின் சில சக்திகள் போரொன்றுக்கான எதிர்பார்ப்புடன் அதிலும் தமிழர் தரப்பின் அழிவை வரவேற்கும் மனப்பாங்குடன் காத்திருக்கின்றன. இதன் வெளிப்பாடாகவே கடந்த வாரத்தில் மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் கிளைமோர் தாக்குதல் இடம் பெற்றதாகவும் அதில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சிக்கியதாகவும் செய்தி வெளியிடும் அளவுக்கு குரூரமான கற்பனை வளத்துடன் இருந்தன.
இந்த செய்தியுடன் யுத்தம் ஒன்று வெடிக்கப்போவதாக முடிவெடுத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சிறிலங்காவுக்கு திரும்ப இருந்த முடிவை லண்டன் விமான நிலையத்தில் வைத்து மாற்றிக் கொண்டமையும் தென்னிலங்கை என்ன மனோபாவத்துடன் இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.
இப்போது ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்துவதற்கான தயார்ப்படுத்தலில் சிறிலங்கா அரசு இருக்கின்றது. உண்மையில் ஜெனீவாவில் என்ன பேசப்பட வேண்டும் என்பதும் என்ன முடிவை அரசு கூற வேண்டும் என்பதும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன.
புரிந்துணர்வு உடன்படிக்கையை இருதரப்பும் செம்மையான முறையில் அமுல்படுத்துவது என்பது தான் பேச்சின் பொருள். குறிப்பாக சிறிலங்கா அரசும் படைகளும் உடன்படிக்கையின் படி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேறி மக்களின் இயல்பு வாழ்வுக்கு வழி சமைத்தல், ஒட்டுப்படைகளினை அகற்றுதல் என்பனவே பிரதான விடயங்கள். இதனை செய்ய முடியுமா இல்லையா என்பதையே சிறிலங்கா ஜெனீவாவில் வைத்து விடுதலைப் புலிகளிடம் கூற வேண்டும்.
இதற்கு மகிந்த அரசு தயார் என்றால் எத்தனை நாள்களுக்குள் செய்து முடிக்கும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னைய பேச்சுக்களில் இழுத்தடித்த வரலாற்றை இந்த பேச்சுக்களிலும் சிறிலங்கா அரசு தொடர முடியாது.
ஏனெனில், தமிழர் தரப்பு தமிழீழத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க தயாரான வேளையிலேயே இந்தப் பேச்சுக்கான சூழமைவு ஏற்பட்டிருக்கின்றது.</span>
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு-</b></i><b>வாரவெளியீடு(ஆசிரியர் தலையங்கம்)</b>
"
"
"

