02-03-2006, 02:31 AM
வணக்கம்
நாரதர் வந்து கலகத்தை உண்டாக்குவார் என்று எதிர்பார்த்தேன் வந்துவிட்டார். கூடவே கலகத்தையும் உருவாக்க ஏதாவது கொண்டுவந்தாரா என்று பார்ப்போம்.
"கவிக் கூர் இழஞ்சன்" யார் இவர்? ஓ! அணித் தலைவரையா இப்படி அழைக்கிறார். சரி, சரி.
இக்களத்திலே வந்து கருத்துக்கூறிய பலரைப்போலவே இவரும் தலைப்பைப்பற்றிய சந்தேகம் இன்னும் சிலருக்கு இருக்கின்றது என்று அதனை விளக்க முயன்றார். இணையம் என்பது ஏன் ஓர் ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது? என்ற கேள்வியிலேயே விடையும் உள்ளது என்றார். எதிரணியினருக்கு தலைப்பைத் தெளிவுபடுத்த "ஊடு, அகம்" என்றால் என்ன என்ற விளக்கத்துடன் ஆரம்பித்தார். இந்த ஊடகத்தை நன்மைக்குப் பாவித்துப் பயனடைவதும், தீமைக்குப் பாவித்துச் சீரழிவதும் இதனைப் பாவிப்பவரையே பொறுத்தது என்று கூறினார்.
புலத்திலே உள்ள பத்திரிகைகளில் ஒரு செய்தியைத் தேடிப்பிடிப்பதே கடினமாக இருக்கிறது என்றார். அப்படிப் பிடித்தாலும் அது ஒரு சினிமாச் செய்தியாகத்தான் இருக்கும் என்றார். இது உண்மையா? அல்லது தன் கலகத்தை ஆரம்பிக்க எடுத்த ஓர் கணையா?
தொலைக்காட்சியையும் திட்டுகிறார். சின்னத்திரை அறுவைத் தொடர்களும், தினம் இரண்டு சினிமாப் படங்களையும் தவிர அறிவியல் சிந்தனை வளர்ச்சிக்கு, சமூக வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார். (இவைகள் இல்லாவிட்டால் இங்கே பலருக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்றும் கேள்விப்பட்டேன். இவைகள் இருப்பதாலும் பலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்றும் கேள்விப்படுகிறேன்.) இவற்றோடு இணைய ஊடகத்தை ஒப்பிடுகிறார்.
இணைய ஊடகம் இலகுவாக தகவல்களைத் தருகின்றது. தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும், படைப்பிலக்கியங்களை ஆக்கவும், அவற்றை பலரும் படிக்கக்கூடியதாக பணச்செலவுகள் ஏதுமின்றி பார்வைக்கு வைக்கவும் களம் அமைத்துக் கொடுத்ததாகவும், இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு இணைய தொழில்நுட்பமே காரணம் என்று ஆனந்திக்கிறார்.
மீண்டும் இறுதியில் ஆவதும், அழிவதும் இதனைப் பாவிப்பவர் கைகளிலேதான் இருக்கின்றது என்றும், இணைய ஊடகத்தை ஆக்கியவர்களைக் குறைகூறுவதுபோல் நிறைவுசெய்திருக்கின்றார். எதிரணியினரே இதற்கு உங்கள் பதில் என்ன?
நாரதர் தனது வாதத்தை தனது பாணியிலே அழகாகச் செய்தார். நாரதரரும் ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் விட்டிருந்தாலும் வாதத்தின் முடிவில் இந்த வாய்ப்பை "அழித்த" யாழ் களத்திற்கு நன்றி கூறி முடித்துள்ளார். "அளித்த", "அழித்த" இரண்டும் மாறுபட்ட கருத்துடைய சொற்கள். ழ, ள வை இடம்மாறி எழுதினால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்? பலருக்கு இந்த ழ, ள, ல என்பன பிரச்சினையாகத்தான் இருக்கிறது. சபையிலே கதைத்தால் உடனே திருத்திக்கொள்ளலாம். ஆனால் இங்கே எழுதிவிட்டால் ஒருபோதும் அழியாது அல்லவா? மன்னிக்கவும். இவைகளைக் குறைகூற விரும்பாவிட்டாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவும் முடியவில்லை. இது என் தனிப்பட்ட கருத்து.
அடுத்து தீமை அணியிலிருந்து வருபவர் யார்? இனி வரப்போகும் புூனைக்குட்டியும், மற்றவர்களும் சண்டை போடாமல் ஒழுங்கில் வந்து என்ன பதில் கூறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
நன்றி.
நாரதர் வந்து கலகத்தை உண்டாக்குவார் என்று எதிர்பார்த்தேன் வந்துவிட்டார். கூடவே கலகத்தையும் உருவாக்க ஏதாவது கொண்டுவந்தாரா என்று பார்ப்போம்.
"கவிக் கூர் இழஞ்சன்" யார் இவர்? ஓ! அணித் தலைவரையா இப்படி அழைக்கிறார். சரி, சரி.
இக்களத்திலே வந்து கருத்துக்கூறிய பலரைப்போலவே இவரும் தலைப்பைப்பற்றிய சந்தேகம் இன்னும் சிலருக்கு இருக்கின்றது என்று அதனை விளக்க முயன்றார். இணையம் என்பது ஏன் ஓர் ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது? என்ற கேள்வியிலேயே விடையும் உள்ளது என்றார். எதிரணியினருக்கு தலைப்பைத் தெளிவுபடுத்த "ஊடு, அகம்" என்றால் என்ன என்ற விளக்கத்துடன் ஆரம்பித்தார். இந்த ஊடகத்தை நன்மைக்குப் பாவித்துப் பயனடைவதும், தீமைக்குப் பாவித்துச் சீரழிவதும் இதனைப் பாவிப்பவரையே பொறுத்தது என்று கூறினார்.
புலத்திலே உள்ள பத்திரிகைகளில் ஒரு செய்தியைத் தேடிப்பிடிப்பதே கடினமாக இருக்கிறது என்றார். அப்படிப் பிடித்தாலும் அது ஒரு சினிமாச் செய்தியாகத்தான் இருக்கும் என்றார். இது உண்மையா? அல்லது தன் கலகத்தை ஆரம்பிக்க எடுத்த ஓர் கணையா?
தொலைக்காட்சியையும் திட்டுகிறார். சின்னத்திரை அறுவைத் தொடர்களும், தினம் இரண்டு சினிமாப் படங்களையும் தவிர அறிவியல் சிந்தனை வளர்ச்சிக்கு, சமூக வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார். (இவைகள் இல்லாவிட்டால் இங்கே பலருக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்றும் கேள்விப்பட்டேன். இவைகள் இருப்பதாலும் பலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்றும் கேள்விப்படுகிறேன்.) இவற்றோடு இணைய ஊடகத்தை ஒப்பிடுகிறார்.
இணைய ஊடகம் இலகுவாக தகவல்களைத் தருகின்றது. தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும், படைப்பிலக்கியங்களை ஆக்கவும், அவற்றை பலரும் படிக்கக்கூடியதாக பணச்செலவுகள் ஏதுமின்றி பார்வைக்கு வைக்கவும் களம் அமைத்துக் கொடுத்ததாகவும், இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு இணைய தொழில்நுட்பமே காரணம் என்று ஆனந்திக்கிறார்.
மீண்டும் இறுதியில் ஆவதும், அழிவதும் இதனைப் பாவிப்பவர் கைகளிலேதான் இருக்கின்றது என்றும், இணைய ஊடகத்தை ஆக்கியவர்களைக் குறைகூறுவதுபோல் நிறைவுசெய்திருக்கின்றார். எதிரணியினரே இதற்கு உங்கள் பதில் என்ன?
நாரதர் தனது வாதத்தை தனது பாணியிலே அழகாகச் செய்தார். நாரதரரும் ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் விட்டிருந்தாலும் வாதத்தின் முடிவில் இந்த வாய்ப்பை "அழித்த" யாழ் களத்திற்கு நன்றி கூறி முடித்துள்ளார். "அளித்த", "அழித்த" இரண்டும் மாறுபட்ட கருத்துடைய சொற்கள். ழ, ள வை இடம்மாறி எழுதினால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்? பலருக்கு இந்த ழ, ள, ல என்பன பிரச்சினையாகத்தான் இருக்கிறது. சபையிலே கதைத்தால் உடனே திருத்திக்கொள்ளலாம். ஆனால் இங்கே எழுதிவிட்டால் ஒருபோதும் அழியாது அல்லவா? மன்னிக்கவும். இவைகளைக் குறைகூற விரும்பாவிட்டாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவும் முடியவில்லை. இது என் தனிப்பட்ட கருத்து.
அடுத்து தீமை அணியிலிருந்து வருபவர் யார்? இனி வரப்போகும் புூனைக்குட்டியும், மற்றவர்களும் சண்டை போடாமல் ஒழுங்கில் வந்து என்ன பதில் கூறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
நன்றி.

