02-02-2006, 11:50 PM
<b>நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சிறிலங்கா அரசாங்க குழு </b>
[வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2006, 18:09 ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜெனீவாவில் நடத்த உள்ள யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுக்களுக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் குழுவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை வகிப்பார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகவியலாளர்களிடம் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
இக்குழுவில் இடம்பெற உள்ள இதர உறுப்பினர்களும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றார் அனுரா பிரியதர்சன யாப்பா.
இம்மாத இறுதியில் ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறும் என்றும் இப்பேச்சுகள் இருநாட்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்த அனுரா பிரியதர்சன யாப்பா, பேச்சுக்கள் நடைபெறும் நாள்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அரசாங்கக் குழுவுக்கு சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை வகிப்பார்.
<i><b> தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
[வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2006, 18:09 ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜெனீவாவில் நடத்த உள்ள யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுக்களுக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் குழுவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை வகிப்பார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகவியலாளர்களிடம் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
இக்குழுவில் இடம்பெற உள்ள இதர உறுப்பினர்களும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றார் அனுரா பிரியதர்சன யாப்பா.
இம்மாத இறுதியில் ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறும் என்றும் இப்பேச்சுகள் இருநாட்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்த அனுரா பிரியதர்சன யாப்பா, பேச்சுக்கள் நடைபெறும் நாள்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அரசாங்கக் குழுவுக்கு சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை வகிப்பார்.
<i><b> தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

