02-02-2006, 02:26 AM
<b>ஜெனீவா பேச்சுக்களுக்கு 10 பேர் கொண்ட அரசாங்கக் குழு </b>
[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:10 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
ஜெனீவாவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளின் பெயர்கள் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மகிந்தவின் அலரி மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 பேரைக் கொண்டதாக இக்குழு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் குழுவில் அமைச்சர்கள், அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் சில சட்டத்தரணிகள் இடம்பெறக் கூடும்.
அரச குழுவினரைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜெனீவா பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரல் தற்போது சிறிலங்கா சமாதான செயலகத்தினாலும் ஏனைய தரப்புகளினாலும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலை விடுதலைப் புலிகள் தயாரிக்கவில்லை என்றும் அது மக்களை திசை திருப்ப கிளப்பிவிடப்பட்டுள்ள வதந்தி என்றும் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி நிரலை அரசாங்கம், நோர்வே மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோர் கூட்டாக இணைந்தே தயாரிப்பார்கள். அதேநேரம் பேச்சுவார்த்தைகளை இம்மாதம் 21 மற்றும் 22 ஆம் நாட்களில் நடத்தலாம் என்று விடுதலைப் புலிகள் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிகழ்ச்சி நிரலுக்கென கல்விமான்களின் கருத்துக்கள் அறியப்பட்டு வருகின்றன என்றும் சிறிலங்கா அராசங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் குழுவில் அவர்களின் இராணுவப்பிரிவைச் சேர்ந்த ஜெயம் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத் தரப்பிலும் இராணுவ அதிகாரி ஒருவரை இணைத்துக் கொள்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:10 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
ஜெனீவாவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளின் பெயர்கள் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மகிந்தவின் அலரி மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 பேரைக் கொண்டதாக இக்குழு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் குழுவில் அமைச்சர்கள், அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் சில சட்டத்தரணிகள் இடம்பெறக் கூடும்.
அரச குழுவினரைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜெனீவா பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரல் தற்போது சிறிலங்கா சமாதான செயலகத்தினாலும் ஏனைய தரப்புகளினாலும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலை விடுதலைப் புலிகள் தயாரிக்கவில்லை என்றும் அது மக்களை திசை திருப்ப கிளப்பிவிடப்பட்டுள்ள வதந்தி என்றும் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி நிரலை அரசாங்கம், நோர்வே மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோர் கூட்டாக இணைந்தே தயாரிப்பார்கள். அதேநேரம் பேச்சுவார்த்தைகளை இம்மாதம் 21 மற்றும் 22 ஆம் நாட்களில் நடத்தலாம் என்று விடுதலைப் புலிகள் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிகழ்ச்சி நிரலுக்கென கல்விமான்களின் கருத்துக்கள் அறியப்பட்டு வருகின்றன என்றும் சிறிலங்கா அராசங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் குழுவில் அவர்களின் இராணுவப்பிரிவைச் சேர்ந்த ஜெயம் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத் தரப்பிலும் இராணுவ அதிகாரி ஒருவரை இணைத்துக் கொள்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

