02-01-2006, 10:14 PM
அன்பிற்கும், பண்பிற்கும் உறைவிடமாக என்றுமே நடு நிலை தவறாது செயற்படும் நடுவர் பெரு மக்களே, மிகுந்த சிரமத்தின் மத்தியில் பல்வேறு குழப்பங்களுக்குள்ளே இந்தக் களத்திலே இதனை கஸ்ட்டப் பட்டு நெறிப் படுத்திக் கொண்டிருக்கும் ரசிகை அவர்களே,இந்தப் பட்டி மன்றத்திற்கு களம் அமைத்துக் கொடுத்த மோகன் அவர்களே ,சீரிய சிந்தனையும் அறிவாற்றலும் உடய எமது அணித் தலைவர் கவிக் கூர் இழஞ்சன் அவர்களே,வெற்றி அணியின் நண்பர்களே, தோல்வியை எதிர் பார்த்து நடுவர்களின் நடு நிலமயைச் சந்தேகிக்கும் எதிரணி விதண்டாவாதிகளே அனைவருக்கும் எனது முதற் கண் வணக்கம்.
இங்கே இணயத்தின் நன்மைகளை மீண்டும் பட்டியல் இட்டு உங்கள் பொறுமையைச் சோதிக்க நான் விரும்பவில்லை. நடுவர் அவர்களே நீங்கள் தீர்ப்புச் சொல்லும் நேரம் நெருங்கி வருவதால் எதிரணி அன்பர்கள் தலைப்பைப் பற்றிச் சொன்ன சில விடயங்களை சற்று விரிவாக ஆராய்ந்து, அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.அவர்கள் மீண்டும் மீண்டும் தலைப்பைப் பாருங்கள் தலைப்பை பாருங்கள் என்று கூறுகிறார்களே ஒழிய அவர்கள் தலைப்பைச் சரியாகப் புரிந்து கொண்டனரா?
இங்கே விவாததிற்கான தலைப்புத் தான் என்ன?புலம் பெயர்ந்து வாழும் இளயோர் இணய ஊடகத்தால் சீரழிகின்றனரா? நன்மயடைகின்றனரா? என்பது தானே?
இங்கே இணயம் என்பது ஏன் ஒரு ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது ,இதில் தானே இந்தக் கேள்விக்கான விடையும் உள்ளதே?இதனை இவர்கள் கவனித்து தான் இந்தப் பட்டி மன்றத்தில் வாதாடுகின்றனரா?ஊடகம் என்றால் என்ன?இதனை இரண்டாகப் பிரித்தால் ஊடு அகம் என்று வரும்.அதாவது தனக்கு ஊடாக தனது அகத்திலே தகவல்களைக் காவிச் செல்வது தானே ஊடகம்.இங்கே ஒரு முனையில் இடப்படுவதே இன்னொரு முனயில் எடுக்கப் படுகிறது.ஆகவே இங்கே சீரழிப்பவை என்று சொல்லப் படுபவை ஒரு முனையிலே இடப்பட்டு மறுமுனயிலே எடுக்கப் படுகிறது. நிலமை இவ்வாறு இருக்க அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?
இங்கே மனிதர்களே சீரழிக்கின்றனர் இணயம் அல்ல.சரி அப்படியானால் அதெப்படி நன்மை பயக்கிறது என்று வாதிட முடியும், என்று எதிரணி நன்பர்கள் ஒரு குதர்க்கமான கேள்வியைக் கேட்க முடியும்.இதற்கான பதிலை இணயம் என்னும் தொழில் நுட்பத்தை மற்றய ஊடகங்களின் தொழிற்பாட்டு முறமையுடன் ஒப்பிடுவதன் மூலம் பெற முடியும்.இந்த ஊடகத் தொழில் நுட்பமானது மற்றய எந்த ஊடகத்தையும் விட பெறுனருக்கு அதனைக் கட்டுப் படுத்தும் வல்லமையை வழங்குகின்றது .ஆகவே இங்கே பெறுனர் ஆனவர் சக்தி மிக்கவராக ஆக்கப் படுகிறார்.இந்த தீர்மானிக்கும் சக்தியை அவர் நன்மைக்குப் பாவித்தால் நன்மை அடைவார்.சீரழிவுக்குப் பாவித்தால் சீரழிகிறார்.இந்த தொழில் நுட்ப வல்லமையே இணயத்தின் வெற்றிக்கு இதன் பாவனை அதிகரிப்புக்கு இதன் பயன் பாட்டுக்கு அடிப்படயாக அமைகிறது.ஒரு தொலைக்காட்சியையோ அல்லது ஒரு பத்திரிகையையோ எடுத்துக் கொண்டாலோ அதில் வரும் தகவல்களை நெறிப் படுத்துபவராக அதன் செய்தி ஆசிரியர்கள் , நிருபர்கள் இருக்கிறார்கள்.இன்று புலத்தில் உள்ள ஒரு பத்திரிகையை எடுத்துக் கொண்டால் அதில் முதலில் ஒரு செய்தியைத் தேடிப் பிடிப்பதே கஸ்டமாக இருக்கிறது அப்படித் தேடிப் பிடித்தாலும் அது அனேகமாக ஒரு சினிமாச் செய்தியாகத் தான் இருக்கும்.தொலைக் காட்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் காலயில் ஒரு படம் மாலையில் ஒரு படம் பிறகு அழுதுவடியும் சின்னத்திரை அறுவைத் தொடர்கள்.இங்கே அறிவியலுக்கு சிந்தனை வளர்ச்சிக்கு ,சமூக வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது? ஆனால் இணயதில் நாம் விரும்புவதை ஒரு சில சொடுக்குகளுக்குள் எம்மால் பெற முடிகிறது.அத்தோடு பெறப்படும் விடயமானது அந்த நிமிடதிற்கு பொருத்தமான விடயமாக இருகிறது.அத்தோடல்லாமல் பெறப்படும் தகவலை நாம் எமக்கு ஏற்றவாறு மாறுபாடு அடயச் செய்யக் கூடியதாக இருகிறது.ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் தகவலை உருமாற்றி அதனை எமக்கு பயன் உள்ள வழியில் மாற்றமடயச் செய்யக் கூடியதாக உள்ளது.அது மட்டுமா ஒருவர் தானே செய்திகளை ,படைப்பிலக்கியங்களை ஆக்கக் கூடிய வல்லமயை அது வளங்கி உள்ளது.இங்கே எதிரணியில் வாதாடும் அன்பர்கள் கவிதை எழுதக் கூட அது களம் அமைத்துக் கொடுத்துள்ளது.இதனை மறுதலித்து அவர்கள் வாதிடுவர் எனின் அவர்களை என்ன வென்று சொல்லுவது.இந்த இணயம் இல்லாது விடின் இன்று தமிழ் மணத்தில் பூத்துக் குலுங்கும் இழஞர்களின் படைப்புக்கள் அவர்களுக்குள்ளே வாழ்ந்து அல்லது பள்ளி மட்டைக் கொப்பிகளுக்குள்ளே புதைந்து மண்ணோடு மண்ணாகி இருக்கும்.இங்கே பெட்டை என்னும் ஒரு வலைப்பதிவாளர் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது,எனக்குள்ளே எரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களை எனது ஆளுமையை நான் வெளிப்படுத்தாமல் இது கால வரையும் புளுங்கிக் கொண்டு இருந்தேன்.இப்போது எனது எண்ணங்களை வெளிக் கொணர எனக்கென்று ஒரு ஊடகம்,எனக்கென்று ஒரு களம் எனக்குக் கிடைத்திருகிறது என்கிறார்.ஏனெனில் படைப்பிலக்கியம் எனப்படுவது அமைப்பு ரீதியாக அல்லது தனி மனித செல்வாக்கு,பண பலம் உடயவர்களின் ஆதிக்கதுக்குள் ஒரு வட்டத்திற்குள்ளேயே இருந்து வந்துள்ளது.இன்று இணயத்தின் வரவால் இந்த தடைகள் உடைக்கப்பட்டு ஒருவரின் ஆக்கத் திறமையே படைப்பதற்கான திறவுகோலாக உருமாறி உள்ளது.இன்று தமிழ் மணத்திலே உள்ள தொழில் நுட்பமானது வாசகரின் பரிந்துரைகளுக்கு ஏற்ப ஒரு ஆக்கத்தை மேலுளுப்ப வைக்கக் கூடியதாக உள்ளது.இதனைச் சாத்தியப் பட வைத்தது இணயத் தொழில் நுட்பமே அன்றி வேறொன்றும் அல்ல.இந்த இழஞ்சர்களின் முன்னேற்றத்தை வெளிக் கொணர்ந்தது இணயம் என்னும் தொழில் நுட்பமே அன்றி வேறொன்றும் அல்ல.
ஆகவே இங்கே இணயம் என்னும் தொழில் நுட்பமானது ஒருவருக்கு அதிகூடிய வினைத்திறனை வளங்கி அவரின் செய்யற்பாட்டு ஆளுமையை அதிகரிக்க வைக்கிறது.இவ்வளவு வல்லமை படைத்த இந்த ஊடகத்தயே இங்கே சீரழிக்கிறது என்று வாதிட வந்து ,விதண்டாவாதமாக பேசிக் கொன்டிருகின்றனர் எதிர் அணியினர்.
இங்கே இழஞ்சர் தம்மைத் தாமே சீரழிக்கிறனரே தவிர ,இணயம் அவர்களைச் சீரழிக்கவில்லை ,அதனால் சீரழிக்கவும் முடியாது என்று ஆணித்திரமாக திடமாகக் கூற முடியும் நடுவர் அவர்களே.அதன் தொழில் நுட்பத் திறன் ஆனது மற்றய ஊடகங்களை விட நன்மை பயற்க வல்ல இயல்புகளை தன்னகத்தே கொண்டது.அதன் நன்மைகளைப் பயன் படுத்துவது அதனைப் பாவிப்பவர் கைகளிலேயே தங்கி உள்ளது.ஆகவே இணயத்தை குறை கூறி, அம்பை நோகாமால் ,அதனை எய்த மனிதரை நோக்கி உங்கள் சுட்டு விரலைக் காட்டுங்கள்,என்று கூறி ,இந்த வாய்ப்பை அழித்த யாழ்க் களத்திற்கு நன்றி கூறி,பொறுமையாக இருந்து இந்தத் தலைப்பில் மட்டுறுதினர்களுக்கு வேலை எதுவும் இன்றி கருத்தாடிய அனைவருக்கும் நன்றி கூறுவதோடு ,ரமா அவர்கள் சுட்டிக் காட்டிய படி இந்தத் தலைப்பில் எவ்வாறு மட்டுறுதினருக்கு வேலை இல்லாமல் நாம் கருத்தாடினொமோ அவ்வாறே எல்லாத் தலைப்புக்குள்ளும் நாம் கருத்தாடினால் மட்டுறுதினர்கள் இங்கு தேவயே இல்லை என்று கூறி,இது ஒன்றே மிகத் தெழிவாக எமக்கு மனிதர்களே சீரழிவுக்குக் காரணம் ஆகுகின்றனர் ,இணயம் அல்ல என்பதை உணர்த்துகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .இதனை உங்கள் சிந்தையில் நிலை நிறுத்தி நடுவர் அவர்களே உங்கள் தீர்ப்பை வழங்குவீர்கள் என்கின்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்,
நன்றி,
வணக்கம்.
இங்கே இணயத்தின் நன்மைகளை மீண்டும் பட்டியல் இட்டு உங்கள் பொறுமையைச் சோதிக்க நான் விரும்பவில்லை. நடுவர் அவர்களே நீங்கள் தீர்ப்புச் சொல்லும் நேரம் நெருங்கி வருவதால் எதிரணி அன்பர்கள் தலைப்பைப் பற்றிச் சொன்ன சில விடயங்களை சற்று விரிவாக ஆராய்ந்து, அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.அவர்கள் மீண்டும் மீண்டும் தலைப்பைப் பாருங்கள் தலைப்பை பாருங்கள் என்று கூறுகிறார்களே ஒழிய அவர்கள் தலைப்பைச் சரியாகப் புரிந்து கொண்டனரா?
இங்கே விவாததிற்கான தலைப்புத் தான் என்ன?புலம் பெயர்ந்து வாழும் இளயோர் இணய ஊடகத்தால் சீரழிகின்றனரா? நன்மயடைகின்றனரா? என்பது தானே?
இங்கே இணயம் என்பது ஏன் ஒரு ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது ,இதில் தானே இந்தக் கேள்விக்கான விடையும் உள்ளதே?இதனை இவர்கள் கவனித்து தான் இந்தப் பட்டி மன்றத்தில் வாதாடுகின்றனரா?ஊடகம் என்றால் என்ன?இதனை இரண்டாகப் பிரித்தால் ஊடு அகம் என்று வரும்.அதாவது தனக்கு ஊடாக தனது அகத்திலே தகவல்களைக் காவிச் செல்வது தானே ஊடகம்.இங்கே ஒரு முனையில் இடப்படுவதே இன்னொரு முனயில் எடுக்கப் படுகிறது.ஆகவே இங்கே சீரழிப்பவை என்று சொல்லப் படுபவை ஒரு முனையிலே இடப்பட்டு மறுமுனயிலே எடுக்கப் படுகிறது. நிலமை இவ்வாறு இருக்க அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?
இங்கே மனிதர்களே சீரழிக்கின்றனர் இணயம் அல்ல.சரி அப்படியானால் அதெப்படி நன்மை பயக்கிறது என்று வாதிட முடியும், என்று எதிரணி நன்பர்கள் ஒரு குதர்க்கமான கேள்வியைக் கேட்க முடியும்.இதற்கான பதிலை இணயம் என்னும் தொழில் நுட்பத்தை மற்றய ஊடகங்களின் தொழிற்பாட்டு முறமையுடன் ஒப்பிடுவதன் மூலம் பெற முடியும்.இந்த ஊடகத் தொழில் நுட்பமானது மற்றய எந்த ஊடகத்தையும் விட பெறுனருக்கு அதனைக் கட்டுப் படுத்தும் வல்லமையை வழங்குகின்றது .ஆகவே இங்கே பெறுனர் ஆனவர் சக்தி மிக்கவராக ஆக்கப் படுகிறார்.இந்த தீர்மானிக்கும் சக்தியை அவர் நன்மைக்குப் பாவித்தால் நன்மை அடைவார்.சீரழிவுக்குப் பாவித்தால் சீரழிகிறார்.இந்த தொழில் நுட்ப வல்லமையே இணயத்தின் வெற்றிக்கு இதன் பாவனை அதிகரிப்புக்கு இதன் பயன் பாட்டுக்கு அடிப்படயாக அமைகிறது.ஒரு தொலைக்காட்சியையோ அல்லது ஒரு பத்திரிகையையோ எடுத்துக் கொண்டாலோ அதில் வரும் தகவல்களை நெறிப் படுத்துபவராக அதன் செய்தி ஆசிரியர்கள் , நிருபர்கள் இருக்கிறார்கள்.இன்று புலத்தில் உள்ள ஒரு பத்திரிகையை எடுத்துக் கொண்டால் அதில் முதலில் ஒரு செய்தியைத் தேடிப் பிடிப்பதே கஸ்டமாக இருக்கிறது அப்படித் தேடிப் பிடித்தாலும் அது அனேகமாக ஒரு சினிமாச் செய்தியாகத் தான் இருக்கும்.தொலைக் காட்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் காலயில் ஒரு படம் மாலையில் ஒரு படம் பிறகு அழுதுவடியும் சின்னத்திரை அறுவைத் தொடர்கள்.இங்கே அறிவியலுக்கு சிந்தனை வளர்ச்சிக்கு ,சமூக வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது? ஆனால் இணயதில் நாம் விரும்புவதை ஒரு சில சொடுக்குகளுக்குள் எம்மால் பெற முடிகிறது.அத்தோடு பெறப்படும் விடயமானது அந்த நிமிடதிற்கு பொருத்தமான விடயமாக இருகிறது.அத்தோடல்லாமல் பெறப்படும் தகவலை நாம் எமக்கு ஏற்றவாறு மாறுபாடு அடயச் செய்யக் கூடியதாக இருகிறது.ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் தகவலை உருமாற்றி அதனை எமக்கு பயன் உள்ள வழியில் மாற்றமடயச் செய்யக் கூடியதாக உள்ளது.அது மட்டுமா ஒருவர் தானே செய்திகளை ,படைப்பிலக்கியங்களை ஆக்கக் கூடிய வல்லமயை அது வளங்கி உள்ளது.இங்கே எதிரணியில் வாதாடும் அன்பர்கள் கவிதை எழுதக் கூட அது களம் அமைத்துக் கொடுத்துள்ளது.இதனை மறுதலித்து அவர்கள் வாதிடுவர் எனின் அவர்களை என்ன வென்று சொல்லுவது.இந்த இணயம் இல்லாது விடின் இன்று தமிழ் மணத்தில் பூத்துக் குலுங்கும் இழஞர்களின் படைப்புக்கள் அவர்களுக்குள்ளே வாழ்ந்து அல்லது பள்ளி மட்டைக் கொப்பிகளுக்குள்ளே புதைந்து மண்ணோடு மண்ணாகி இருக்கும்.இங்கே பெட்டை என்னும் ஒரு வலைப்பதிவாளர் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது,எனக்குள்ளே எரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களை எனது ஆளுமையை நான் வெளிப்படுத்தாமல் இது கால வரையும் புளுங்கிக் கொண்டு இருந்தேன்.இப்போது எனது எண்ணங்களை வெளிக் கொணர எனக்கென்று ஒரு ஊடகம்,எனக்கென்று ஒரு களம் எனக்குக் கிடைத்திருகிறது என்கிறார்.ஏனெனில் படைப்பிலக்கியம் எனப்படுவது அமைப்பு ரீதியாக அல்லது தனி மனித செல்வாக்கு,பண பலம் உடயவர்களின் ஆதிக்கதுக்குள் ஒரு வட்டத்திற்குள்ளேயே இருந்து வந்துள்ளது.இன்று இணயத்தின் வரவால் இந்த தடைகள் உடைக்கப்பட்டு ஒருவரின் ஆக்கத் திறமையே படைப்பதற்கான திறவுகோலாக உருமாறி உள்ளது.இன்று தமிழ் மணத்திலே உள்ள தொழில் நுட்பமானது வாசகரின் பரிந்துரைகளுக்கு ஏற்ப ஒரு ஆக்கத்தை மேலுளுப்ப வைக்கக் கூடியதாக உள்ளது.இதனைச் சாத்தியப் பட வைத்தது இணயத் தொழில் நுட்பமே அன்றி வேறொன்றும் அல்ல.இந்த இழஞ்சர்களின் முன்னேற்றத்தை வெளிக் கொணர்ந்தது இணயம் என்னும் தொழில் நுட்பமே அன்றி வேறொன்றும் அல்ல.
ஆகவே இங்கே இணயம் என்னும் தொழில் நுட்பமானது ஒருவருக்கு அதிகூடிய வினைத்திறனை வளங்கி அவரின் செய்யற்பாட்டு ஆளுமையை அதிகரிக்க வைக்கிறது.இவ்வளவு வல்லமை படைத்த இந்த ஊடகத்தயே இங்கே சீரழிக்கிறது என்று வாதிட வந்து ,விதண்டாவாதமாக பேசிக் கொன்டிருகின்றனர் எதிர் அணியினர்.
இங்கே இழஞ்சர் தம்மைத் தாமே சீரழிக்கிறனரே தவிர ,இணயம் அவர்களைச் சீரழிக்கவில்லை ,அதனால் சீரழிக்கவும் முடியாது என்று ஆணித்திரமாக திடமாகக் கூற முடியும் நடுவர் அவர்களே.அதன் தொழில் நுட்பத் திறன் ஆனது மற்றய ஊடகங்களை விட நன்மை பயற்க வல்ல இயல்புகளை தன்னகத்தே கொண்டது.அதன் நன்மைகளைப் பயன் படுத்துவது அதனைப் பாவிப்பவர் கைகளிலேயே தங்கி உள்ளது.ஆகவே இணயத்தை குறை கூறி, அம்பை நோகாமால் ,அதனை எய்த மனிதரை நோக்கி உங்கள் சுட்டு விரலைக் காட்டுங்கள்,என்று கூறி ,இந்த வாய்ப்பை அழித்த யாழ்க் களத்திற்கு நன்றி கூறி,பொறுமையாக இருந்து இந்தத் தலைப்பில் மட்டுறுதினர்களுக்கு வேலை எதுவும் இன்றி கருத்தாடிய அனைவருக்கும் நன்றி கூறுவதோடு ,ரமா அவர்கள் சுட்டிக் காட்டிய படி இந்தத் தலைப்பில் எவ்வாறு மட்டுறுதினருக்கு வேலை இல்லாமல் நாம் கருத்தாடினொமோ அவ்வாறே எல்லாத் தலைப்புக்குள்ளும் நாம் கருத்தாடினால் மட்டுறுதினர்கள் இங்கு தேவயே இல்லை என்று கூறி,இது ஒன்றே மிகத் தெழிவாக எமக்கு மனிதர்களே சீரழிவுக்குக் காரணம் ஆகுகின்றனர் ,இணயம் அல்ல என்பதை உணர்த்துகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .இதனை உங்கள் சிந்தையில் நிலை நிறுத்தி நடுவர் அவர்களே உங்கள் தீர்ப்பை வழங்குவீர்கள் என்கின்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்,
நன்றி,
வணக்கம்.

