02-01-2006, 12:41 PM
கடத்தப்பட்ட 10 புனர்வாழ்வுக் கழகத்தினரில் 2 பெண்கள் விடுதலை!!
மட்டக்களப்பு வெலிக்கந்தை பிரதேசத்தில் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பேரில் 2 பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவுஸ்திரேலியா இன்பத் தமிழ் வானொலிக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் சீசர் அளித்த நேர்காணல்:
எமது பணியாளர்களின் கண்களை கட்டி கொடூரமாக துன்புறுத்தப்பட்ட நிலையில் ஆயுதக் குழுவினர் கடத்திச் சென்றனர்.
அவர்களில் 2 பெண்கள் திங்கட்கிழமை மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
மிகுந்த பயத்துடன் எவரையும் சந்திக்க மறுக்கும் மனநிலையில் உள்ளனர். ஊடகவியலாளர்களிடம் பேசினால் சுட்டுக் கொலை செய்வோம் என்ற அச்சுறுத்தலுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார் சீசர்.
தப்பி வந்த பெண்களில் ஒருவர் இன்பத் தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலில், கண்களும் கைகளும் வாயும் கட்டப்பட்ட பகுதியில் தாங்கள் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு எம்மை புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆயுதக் குழுவினர் எங்கள் இருவரை அங்கிருந்து தப்பிச் செல்லுமாறும் ஊடகத்தாரிடம் இது தொடர்பில் கதைத்தால் சுட்டுப் படுகொலை செய்வோம் என்றும் கூறி அனுப்பினர். அவர்களிடமிருந்து தப்பிய நிலையில் நாங்களாகவே எமது அலுவலகத்தை வந்தடைந்துள்ளோம் என்றார்.
மேலும் தம்மைக் கடத்திய ஆயுதக் குழுவினர் தமிழிலிதான் தங்களோடு கதைத்தார்கள் என்றும் அப்பெண் தெரிவித்தார்.
இதனிடையே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை விடுவிக்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை அவுஸ்திரேலிய புனர்வாழ்வுக் கழகத்தினர் தொடங்கியுள்ளனர்.
அவுஸ்திரேலியா நகரங்களில் வர்த்தக நிறுவனங்களினூடாக இந்தக் கையெழுத்துகள் பெறப்படுவதாகவும் இந்தக் கையெழுத்து இயக்கத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் தொடர்ச்சியான அறிவித்தலை அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலி வெளியிட்டு வருகிறது.
இன்று தப்பி வந்த பெண்களிடமும் நேற்று முன்தினம் ஐவர் கடத்தப்பட்ட போது அந்த வாகனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஏனையவர்களிடமும் இலங்கை யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவினர் வாக்குமூலங்களைப் பெற்றுவருவதாக கண்காணிப்புக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன
நன்றி புதினம்
மட்டக்களப்பு வெலிக்கந்தை பிரதேசத்தில் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பேரில் 2 பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவுஸ்திரேலியா இன்பத் தமிழ் வானொலிக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் சீசர் அளித்த நேர்காணல்:
எமது பணியாளர்களின் கண்களை கட்டி கொடூரமாக துன்புறுத்தப்பட்ட நிலையில் ஆயுதக் குழுவினர் கடத்திச் சென்றனர்.
அவர்களில் 2 பெண்கள் திங்கட்கிழமை மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
மிகுந்த பயத்துடன் எவரையும் சந்திக்க மறுக்கும் மனநிலையில் உள்ளனர். ஊடகவியலாளர்களிடம் பேசினால் சுட்டுக் கொலை செய்வோம் என்ற அச்சுறுத்தலுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார் சீசர்.
தப்பி வந்த பெண்களில் ஒருவர் இன்பத் தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலில், கண்களும் கைகளும் வாயும் கட்டப்பட்ட பகுதியில் தாங்கள் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு எம்மை புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆயுதக் குழுவினர் எங்கள் இருவரை அங்கிருந்து தப்பிச் செல்லுமாறும் ஊடகத்தாரிடம் இது தொடர்பில் கதைத்தால் சுட்டுப் படுகொலை செய்வோம் என்றும் கூறி அனுப்பினர். அவர்களிடமிருந்து தப்பிய நிலையில் நாங்களாகவே எமது அலுவலகத்தை வந்தடைந்துள்ளோம் என்றார்.
மேலும் தம்மைக் கடத்திய ஆயுதக் குழுவினர் தமிழிலிதான் தங்களோடு கதைத்தார்கள் என்றும் அப்பெண் தெரிவித்தார்.
இதனிடையே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை விடுவிக்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை அவுஸ்திரேலிய புனர்வாழ்வுக் கழகத்தினர் தொடங்கியுள்ளனர்.
அவுஸ்திரேலியா நகரங்களில் வர்த்தக நிறுவனங்களினூடாக இந்தக் கையெழுத்துகள் பெறப்படுவதாகவும் இந்தக் கையெழுத்து இயக்கத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் தொடர்ச்சியான அறிவித்தலை அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலி வெளியிட்டு வருகிறது.
இன்று தப்பி வந்த பெண்களிடமும் நேற்று முன்தினம் ஐவர் கடத்தப்பட்ட போது அந்த வாகனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஏனையவர்களிடமும் இலங்கை யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவினர் வாக்குமூலங்களைப் பெற்றுவருவதாக கண்காணிப்புக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன
நன்றி புதினம்
" "

