02-01-2006, 08:05 AM
<b>அமைதிப் பேச்சுக்களில் முஸ்லிம்களுக்கும் இடம்: மகிந்த உறுதி </b>
இலங்கை அமைதிப் பேச்சுக்களில் முஸ்லிம்களும் இடம்பெறுவார்கள் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
மகிந்தவின் அலரி மாளிகையில் அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது மகிந்த இதைத் தெரிவித்தார்.
கௌரவமான அமைதியை உருவாக்கும் போது முஸ்லிம்களுக்கோ இதர இனத்தவருகோ எதிராக பாரபட்சமாக நடந்து கொள்ளமாட்டோம் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் நன்மைக்காக வடக்கு கிழக்கில் மகாண தலைமைச் செயலகங்களின் கிளைகள் அம்பாறையில் அமைக்கப்படும் என்றும் மகிந்த ராஜபக்ச இந்த சந்திப்பின்போது அறிவித்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.எம்.சய்யீத், அமைச்சர் நஜிப் ஏ. மஜித், அமீர் அலி மற்றும் பொதுச் செயலாளர் ஒய்.எல்.எஸ். ஹமீத் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாக ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்கப்படும் குழுவில் சட்டத்தரணி பைஸ் முஸ்தாபா இடம்பெறக் கூடும் என்றும் அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
இலங்கை அமைதிப் பேச்சுக்களில் முஸ்லிம்களும் இடம்பெறுவார்கள் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
மகிந்தவின் அலரி மாளிகையில் அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது மகிந்த இதைத் தெரிவித்தார்.
கௌரவமான அமைதியை உருவாக்கும் போது முஸ்லிம்களுக்கோ இதர இனத்தவருகோ எதிராக பாரபட்சமாக நடந்து கொள்ளமாட்டோம் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் நன்மைக்காக வடக்கு கிழக்கில் மகாண தலைமைச் செயலகங்களின் கிளைகள் அம்பாறையில் அமைக்கப்படும் என்றும் மகிந்த ராஜபக்ச இந்த சந்திப்பின்போது அறிவித்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.எம்.சய்யீத், அமைச்சர் நஜிப் ஏ. மஜித், அமீர் அலி மற்றும் பொதுச் செயலாளர் ஒய்.எல்.எஸ். ஹமீத் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாக ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்கப்படும் குழுவில் சட்டத்தரணி பைஸ் முஸ்தாபா இடம்பெறக் கூடும் என்றும் அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

