02-01-2006, 08:03 AM
<b>தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 5 பணியாளர்கள் கடத்தல் ஜெனீவா பேச்சுக்கு தடையாக அமையலாம் - விடுதலைப் புலிகள் அறிவிப்பு.</b>
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் 5 பணியாளர்கள் கடத்தப்பட்ட சமபவமானது ஜெனிவாவில் அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்ததைகளுக்கு தடையாக அமைலாம் என தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது நிறுத்தப்படும் என்பது அதன் கருத்தாகாது எனவும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிக்குமானால் பேச்சுவார்ததை நடக்காமல் போகலாம் என புலிதேவன் குறிப்பிட்டுள்ளார்.
வெலிக்கந்தையில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் நேற்று கடத்திச் செல்லப்பட்டதாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் திட்ட ஆலோசகர் அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் தெரிவித்தார்.
பயிற்சிநெறி ஓன்றில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த 15 பேர் கடத்தப்பட்ட போதும் அதில் 10 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்டவர்கள் தமது நிறுவனத்தில் அண்மையில் பணியாளர்களாக இணைத்து கொள்ளப்பட்டவர்கள் எவும் அவர் தெரிவித்தார்
இந்த நிலையில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எதுவித முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்க வில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல்-பதிவு.கொம்</b></i>
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் 5 பணியாளர்கள் கடத்தப்பட்ட சமபவமானது ஜெனிவாவில் அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்ததைகளுக்கு தடையாக அமைலாம் என தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது நிறுத்தப்படும் என்பது அதன் கருத்தாகாது எனவும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிக்குமானால் பேச்சுவார்ததை நடக்காமல் போகலாம் என புலிதேவன் குறிப்பிட்டுள்ளார்.
வெலிக்கந்தையில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் நேற்று கடத்திச் செல்லப்பட்டதாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் திட்ட ஆலோசகர் அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் தெரிவித்தார்.
பயிற்சிநெறி ஓன்றில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த 15 பேர் கடத்தப்பட்ட போதும் அதில் 10 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்டவர்கள் தமது நிறுவனத்தில் அண்மையில் பணியாளர்களாக இணைத்து கொள்ளப்பட்டவர்கள் எவும் அவர் தெரிவித்தார்
இந்த நிலையில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எதுவித முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்க வில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல்-பதிவு.கொம்</b></i>
"
"
"

