02-01-2006, 02:48 AM
வணக்கம்
"வணக்கம் வணக்கம் என்று இருமுறை சொல்லி.. இளையோர்கள் நாம் தரும் பட்டிமன்றம்" என்று ஆரம்பித்ததும் (வயதானவர்களை மறந்துவிட்டார் போலும்), எதிரணித்தலைவர் திருப்பித்திருப்பி வருவதாகக் குறிப்பிட்டிருப்பதும் (ஒருமுறைதானே களத்தினில் வந்தார்) அவர் சிறிது குழப்பத்துடனே ஆரம்பிப்பதுபோல் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சிறிது உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம். ஆனால் போகப்போக மிகவும் திறமையாகத் தன் வாதத்தை முன்வைத்தார்.
தலையங்கத்தை எதிரணியினருக்கு தாம் எல்லோரும் ஞாபகப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளோம் என்றார். நன்மை அணியினர் தாம் தலையங்கத்தை விளங்கித்தான் தம் கருத்துக்களை முன் வைக்கிறோம் என்று திரும்பத்திரும்பக் கூறினாலும் தீமை அணியினர் இல்லை, இல்லை என்கிறார்கள். இது உண்மையா இல்லையா என்பதனை பட்டிமன்றத்தை ஆரம்பத்திலிருந்து ஒழுங்காகப் படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.
இணையத்தில் பாடசாலைகளுக்கான தேடுதல் என்று சொல்லிவிட்டு படிப்பைத்தவிர வேறு எல்லாவற்றையும் தேடுகின்றார்கள். உங்கள் அப்புவும், ஆச்சியும் எந்த இணையத்தில் தேடினார்கள் என்று அந்த நகைச்சுவை மன்னர்களிடம் கேட்கிறேன் என்று நறுக்காக் கேட்கிறார் ரமா?
ஓரிருவர் இணையத்தால் முன்னேறிவிட்டார்கள் என்பதற்காக எல்லோரும் முன்னேறிவிட்டார்கள் என்று கூறமுடியுமா? என்றும் கேட்கிறார். அப்போ "ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதமில்லை" என்கிறாரா?
பிள்ளைகள் எம் எஸ் என் இல் செய்யும் லொள்ளுகளுக்கு உதாரணம் காட்டினார். பெற்றோருக்குக் காதில் புூவை வைத்துவிட்டு தாமும் சிரழிந்து மற்றையவர்களையும் சீரழிக்கிறார்கள் என்றார். இவற்றை தன்னைப்போல் இளையோருக்குத்தான் தெரியும் என்றார். (பாம்பின் காலை பாம்புதானே அறியும்). இதனை அறியாத பெற்றோர்களை தனதணியில் முன்பு வந்தவர்கள்போல் தானும் சாடுகிறார். (பாவம் அந்தப் பெற்றோர்கள்).
இளையோரால் இணையத்தினால் நேரத்தைச் சேமிக்க முடிகிறது, ஊக்கமுள்ள இளைஞனுக்கு தகவல்களை வழங்குகிறது, அதை வைத்து திறமையானவன் உயர்கிறான் என்கின்ற நன்மை அணியினரின் வாதத்தை ஓரளவிற்கு ஒத்துக்கொண்டாலும் அதனால் அவர்கள் சீரழிகிறார்கள் என்றே திரும்பத்திரும்பக் கூறுகின்றார். ரமா கூறுவதுபோல் நன்மைகளைவிட தீமைகள் பன்மடங்காக இருக்கின்றனவா? நன்மை அணியினர்தான் இதற்குப் பதில் தரவேண்டும்.
இணையம் இளையோரை வாழவைக்கும் கண்ணுக்குத் தெரியாத தெய்வம் என்ற கூற்றிற்கு அப்படியானால் அதற்குப் புூமாலை சாத்தி, கற்புூரம் காட்டி, உண்டியல் வையுங்கள் என்று கொதிக்கிறார். "தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலைதான்" என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. கல்லை, காசை, மனிதரைத் தெய்வமாக மதிப்பவர்கள் இணையத்தை தெய்வமாக மதிப்பது தவறா? சரியா? பதில் தாருங்கள் எதிரணிப் பக்தர்களே!
இணையத்தால் உலகை எம் கைக்குள் கொண்டுவந்தாலும் எமது பாரம்பரிய இசை பாதுகாக்கப்படவில்லை, களவாடப்பட்ட மெட்டுக்களும், மாற்றங்கள் செய்யப்பட்ட மெட்டுக்களும், மேலைத்தேய ஆக்கங்களின் செல்வாக்குகளும்தான் அதிகமாக இருக்கின்றன என்று குமுறுகிறார். அதேவேளை நடுத்தரவயதுடையோர்தான் தமிழை, தமிழ்ப் பாரம்பரியத்தை வளர்க்க அதிகம் பாடுபடுகின்றார்கள் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
இணையம் இல்லாவிடில் தேடல் அதிகமாகும், புத்திக்கூர்மையும் அதிகமாகும் என்றும், இணையத்தால் இளையோர் சோம்பேறிகளாகின்றார்கள் என்றும் கூறுகின்றார். தெளிவில்லா இவர்களால் தமிழர் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் இடம்பெறும் கலாச்சார சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை.
தான் ஒரு பெண் என்பதாலோ என்னவோ தனது உதாரணங்களை சமையல் அறைவரை கொண்டு செல்கிறார். இணையத்தை ஆக்கமுள்ள ஒருசில அனுபவசாலிகளுக்கு சமையலுக்குப் பயன்படும் அளவான நெருப்புக்கும், அனுபவம் இல்லாத புலம்பெயர் நாட்டில் பொழுதுபோக்கை குறியாக்கி வைத்திருக்கும் புலம் பெயர் இளையோரை வீட்டையும், நகரத்தையும் எரிக்கும் பெரியதொரு நெருப்புக்கும் ஒப்பிட்டு சீரழிக்கிறது, சீரழிக்கிறது, சீரழிக்கிறது என்று மூன்று முறை சீறுகின்றார். "அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்" என்பதாலா? இந்த அம்மி நகருமா பொறுத்திருந்து பார்ப்போம்.
ரமா வயதால் இளையவர்தான் ஆனால் பட்டிமன்றத்தில் எப்படி வாதாடவேண்டும் என்கின்ற அனுபவத்தில் முதியவர்போல் தெரிகிறது. இறுதிவரை இடியுடன் கூடிய மழை பொழிந்ததுபோல் தன் வாதத்தினை முன்வைத்தார். எதிரணியினருக்கு தனது தமிழால் நல்ல சாட்டையடி கொடுத்த அதேவேளையில் நடுவர்களாகிய எமக்கும் ஓர் அடி பட்டதுபோல் உணர்ந்தேன். பி.கு வில் நன்மை அணிக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கினால் மட்டுறுத்தினர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதுதான் அது. நல்ல வாதம் செய்தவர் ஏன் ஒரு மிரட்டலையும் விட்டுச்சென்றார்? முகத்தாரும், தலவும் அவரை தட்டிக்கொடுப்பதுபோலவும் இருக்கிறது. ம்! நாம் நடுவர்கள்தான்!
அடுத்து நன்மை அணியிலிருந்து வருபவர் யார்? வருக, வந்து உங்கள் வாதத்தைத் தருக.
நன்றி.
"வணக்கம் வணக்கம் என்று இருமுறை சொல்லி.. இளையோர்கள் நாம் தரும் பட்டிமன்றம்" என்று ஆரம்பித்ததும் (வயதானவர்களை மறந்துவிட்டார் போலும்), எதிரணித்தலைவர் திருப்பித்திருப்பி வருவதாகக் குறிப்பிட்டிருப்பதும் (ஒருமுறைதானே களத்தினில் வந்தார்) அவர் சிறிது குழப்பத்துடனே ஆரம்பிப்பதுபோல் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சிறிது உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம். ஆனால் போகப்போக மிகவும் திறமையாகத் தன் வாதத்தை முன்வைத்தார்.
தலையங்கத்தை எதிரணியினருக்கு தாம் எல்லோரும் ஞாபகப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளோம் என்றார். நன்மை அணியினர் தாம் தலையங்கத்தை விளங்கித்தான் தம் கருத்துக்களை முன் வைக்கிறோம் என்று திரும்பத்திரும்பக் கூறினாலும் தீமை அணியினர் இல்லை, இல்லை என்கிறார்கள். இது உண்மையா இல்லையா என்பதனை பட்டிமன்றத்தை ஆரம்பத்திலிருந்து ஒழுங்காகப் படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.
இணையத்தில் பாடசாலைகளுக்கான தேடுதல் என்று சொல்லிவிட்டு படிப்பைத்தவிர வேறு எல்லாவற்றையும் தேடுகின்றார்கள். உங்கள் அப்புவும், ஆச்சியும் எந்த இணையத்தில் தேடினார்கள் என்று அந்த நகைச்சுவை மன்னர்களிடம் கேட்கிறேன் என்று நறுக்காக் கேட்கிறார் ரமா?
ஓரிருவர் இணையத்தால் முன்னேறிவிட்டார்கள் என்பதற்காக எல்லோரும் முன்னேறிவிட்டார்கள் என்று கூறமுடியுமா? என்றும் கேட்கிறார். அப்போ "ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதமில்லை" என்கிறாரா?
பிள்ளைகள் எம் எஸ் என் இல் செய்யும் லொள்ளுகளுக்கு உதாரணம் காட்டினார். பெற்றோருக்குக் காதில் புூவை வைத்துவிட்டு தாமும் சிரழிந்து மற்றையவர்களையும் சீரழிக்கிறார்கள் என்றார். இவற்றை தன்னைப்போல் இளையோருக்குத்தான் தெரியும் என்றார். (பாம்பின் காலை பாம்புதானே அறியும்). இதனை அறியாத பெற்றோர்களை தனதணியில் முன்பு வந்தவர்கள்போல் தானும் சாடுகிறார். (பாவம் அந்தப் பெற்றோர்கள்).
இளையோரால் இணையத்தினால் நேரத்தைச் சேமிக்க முடிகிறது, ஊக்கமுள்ள இளைஞனுக்கு தகவல்களை வழங்குகிறது, அதை வைத்து திறமையானவன் உயர்கிறான் என்கின்ற நன்மை அணியினரின் வாதத்தை ஓரளவிற்கு ஒத்துக்கொண்டாலும் அதனால் அவர்கள் சீரழிகிறார்கள் என்றே திரும்பத்திரும்பக் கூறுகின்றார். ரமா கூறுவதுபோல் நன்மைகளைவிட தீமைகள் பன்மடங்காக இருக்கின்றனவா? நன்மை அணியினர்தான் இதற்குப் பதில் தரவேண்டும்.
இணையம் இளையோரை வாழவைக்கும் கண்ணுக்குத் தெரியாத தெய்வம் என்ற கூற்றிற்கு அப்படியானால் அதற்குப் புூமாலை சாத்தி, கற்புூரம் காட்டி, உண்டியல் வையுங்கள் என்று கொதிக்கிறார். "தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலைதான்" என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. கல்லை, காசை, மனிதரைத் தெய்வமாக மதிப்பவர்கள் இணையத்தை தெய்வமாக மதிப்பது தவறா? சரியா? பதில் தாருங்கள் எதிரணிப் பக்தர்களே!
இணையத்தால் உலகை எம் கைக்குள் கொண்டுவந்தாலும் எமது பாரம்பரிய இசை பாதுகாக்கப்படவில்லை, களவாடப்பட்ட மெட்டுக்களும், மாற்றங்கள் செய்யப்பட்ட மெட்டுக்களும், மேலைத்தேய ஆக்கங்களின் செல்வாக்குகளும்தான் அதிகமாக இருக்கின்றன என்று குமுறுகிறார். அதேவேளை நடுத்தரவயதுடையோர்தான் தமிழை, தமிழ்ப் பாரம்பரியத்தை வளர்க்க அதிகம் பாடுபடுகின்றார்கள் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
இணையம் இல்லாவிடில் தேடல் அதிகமாகும், புத்திக்கூர்மையும் அதிகமாகும் என்றும், இணையத்தால் இளையோர் சோம்பேறிகளாகின்றார்கள் என்றும் கூறுகின்றார். தெளிவில்லா இவர்களால் தமிழர் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் இடம்பெறும் கலாச்சார சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை.
தான் ஒரு பெண் என்பதாலோ என்னவோ தனது உதாரணங்களை சமையல் அறைவரை கொண்டு செல்கிறார். இணையத்தை ஆக்கமுள்ள ஒருசில அனுபவசாலிகளுக்கு சமையலுக்குப் பயன்படும் அளவான நெருப்புக்கும், அனுபவம் இல்லாத புலம்பெயர் நாட்டில் பொழுதுபோக்கை குறியாக்கி வைத்திருக்கும் புலம் பெயர் இளையோரை வீட்டையும், நகரத்தையும் எரிக்கும் பெரியதொரு நெருப்புக்கும் ஒப்பிட்டு சீரழிக்கிறது, சீரழிக்கிறது, சீரழிக்கிறது என்று மூன்று முறை சீறுகின்றார். "அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்" என்பதாலா? இந்த அம்மி நகருமா பொறுத்திருந்து பார்ப்போம்.
ரமா வயதால் இளையவர்தான் ஆனால் பட்டிமன்றத்தில் எப்படி வாதாடவேண்டும் என்கின்ற அனுபவத்தில் முதியவர்போல் தெரிகிறது. இறுதிவரை இடியுடன் கூடிய மழை பொழிந்ததுபோல் தன் வாதத்தினை முன்வைத்தார். எதிரணியினருக்கு தனது தமிழால் நல்ல சாட்டையடி கொடுத்த அதேவேளையில் நடுவர்களாகிய எமக்கும் ஓர் அடி பட்டதுபோல் உணர்ந்தேன். பி.கு வில் நன்மை அணிக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கினால் மட்டுறுத்தினர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதுதான் அது. நல்ல வாதம் செய்தவர் ஏன் ஒரு மிரட்டலையும் விட்டுச்சென்றார்? முகத்தாரும், தலவும் அவரை தட்டிக்கொடுப்பதுபோலவும் இருக்கிறது. ம்! நாம் நடுவர்கள்தான்!
அடுத்து நன்மை அணியிலிருந்து வருபவர் யார்? வருக, வந்து உங்கள் வாதத்தைத் தருக.
நன்றி.

