Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#50
[size=18]"வணக்கம் வணக்கம் பல முறை சொன்னேன்.
சபையோர் முன்னால் தமிழ் மொழி முன்னால்.
இது தேன் போன்ற உயிரான தமிழில்
இளையோர்கள் நாம் தரும் பட்டிமன்றம்."
(என்ன இது வெறும் காற்று தான் வருகுது)

நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று நிருபிக்கும் நக்கீரர் பரம்பரையில் வந்து உதித்த நம்ம நடுவப் பெருமக்களாகிய திரு செல்வமுத்து அவர்களுக்கும் தமிழினி அவர்களுக்கும்! திரைக்கு பின்னால் நின்று தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் அன்பு சகோதரி இரசிகைக்கும்! ஓடி ஓடியே எத்தனை பதக்கங்களை வென்றாலும் இந்த பட்டிமன்றத்திலும் தங்க பதக்கம் நமக்கே என்று சொல்லி நம்மையும் ஓட வைத்திருக்கும் எமதணி தலைவர் அவர்களே! சோழி அண்ணாவின் ஓட்டத்திற்கு இணையாக வெற்றி பெறும் நோக்குடன் ஓடிக்கொண்டிருக்கும் எமதணி உறுப்பினர்களுக்கும்! கொமாண்டோக்கள் என்றும் சிப்பாய்கள் என்றும் சொல்லிக்கொண்டு கொமடியன்ஸ்கள் போலும் சின்னப்பிள்ளைகள் போலவும் பாட்டி வடை சுட்ட கதையை திருப்பி திருப்பி நகைச்சுவையுடன் சொல்லிக்கொண்டு இருக்கும் எதிரணி தலைவர் அவர்களுக்கும்! அவர் அணி உறுப்பினர்களுக்கும்! நல்லதொரு பட்டிமன்றத்தை இங்கு நடத்த அனுமதித்த களப் பொறுப்பாளார் திரு மோகன் அண்ணா அவர்களுக்கும் எனது முதற் கண் காலை (மாலை இரவு) வணக்கங்கள் _/\_

நடுவர்களே! பட்டிமன்ற தலையங்கத்தையே எதிரணியினருக்கு நமது அணி உறுப்பினர்கள் எல்லோரும் ஞாபகப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றோம். புலம் பெயர்ந்து வாழும் இளையோர் இணைய ஊடகத்தால் நன்மையடைகின்றார்களா? சீரழிந்து போகின்றார்களா? என்பது தான் தலைப்பு

நடுவர்களே! வழமையான எதிரணின் பாணியில் இணையத்தின் நன்மைகள் சிலவற்றை சொல்லியிருக்கிறார்.. <b>இணையத்தின் நன்மை தீமைகளை பற்றி நாங்கள் இங்கு வாதாட வரவில்லை. பதிலாக புலம்பெயர்ந்த இளையோர்கள் இணையதால் நன்மை அடைகிறார்களா இல்லையா?? என்று தான் வாதிட வந்திருக்கிறோம் என்று எமதணியினர் போதும் போதும் என்ற அளவுக்கு சொல்லிவிட்டனர். இருப்பினும் எதிரணியினர் அதை எந்த அளவுக்கு உள்வாங்கி கொண்டனர் என்பது அவர்களது கருத்துகளில் இருந்து தெரிகிறது.</b>

நடுவர்களே! இந்த இணையத்தால் நாம் அடைந்த பயன்களிற்கு உங்கள் வலக்கையில் உள்ள விரல்களே போதும் எண்ணுவதற்கு. தீமைகளை இங்கு எழுத தான் எனக்கு ஆசை. ஆனால் அது இலங்கையை எரித்த அனுமாரின் வால் போல் நீண்டு கொண்டு போகும் என்ற பயத்தில் தான் சில தீமைகளை மட்டும் இங்கு சுட்டிக்காட்ட வந்திருக்கின்றேன்.

நடுவர்களே! எதிரணியினர் கூறுகின்றார்கள்; படிப்பதற்கு பல தேடுதல்கள் செய்வதற்கு இணையம் இலகுவாக இருக்கின்றதாம். ஆமாம் எனது அருமை நகைச்சுவை மன்னர்களே உங்கள் அப்பு ஆச்சி காலத்தில் எல்லாம் இந்த படிப்பிற்கு தேவையான தேடுதல்கள் எங்கிருந்து பெறப்பட்டன? அப்போ அவர்கள் வைத்தியர்களாகவோ நல்ல வக்கீலாகவோ வரவில்லையா? இப்போ பாடசாலைக்கான தேடுதல் என்று சொல்லி விட்டு இளைஞர்கள் வேறு எல்லாவற்றையும் தேடுகின்றார்கள் இணையத்தில் படிப்பை தவிர.

<b>இணையத்தின் நன்மைகளை பற்றி சொல்லிய ஸ்டாலின், இந்த நன்மைகளை இளையோர் முறையாக பயன் படுத்தி நன்மை அடைகிறார்கள் என்று சொல்லிவிட்டு, உதாரணமாக காதல் கடித தயாரிப்பாளர்களையும், திரைப்பட நடிகர் ஆகாஸையும் சுட்டிக்காட்டினார்.</b>

புலத்தில் இணையத்தைப் பயன்படுத்தும் எத்தனையோ இளையவர்கள் இருக்கிறார்கள். யாரோ ஓரிருவர் இவ்வாறு முன்னேறி விட்டார்கள் என்று சொல்லி... எல்லா இளையவர்களும் அப்படித்தான் என்று கூற வருகிறார் நண்பர். இது எவ்வகையில் பொருத்தமாகும்? இணையத்தின் சீரழிவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் அவற்றின்; விளைவுகளால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி புலம்பெயர் நாடுகளில் வெளியாகும் பத்திரிகைகளில் நாளாந்தம் காண்கிறோம்.


அம்மா: பிள்ளை வந்து சாப்பிட்டு கொம்பியுட்டரில் இருக்கலாம் தானே

பிள்ளை: நோ மம்மி எனக்கு நிறைய வேலை கொம்பியுட்டரில் செய்யணும்.நான் பின்னார் சாப்பிடுகின்றேன்

எம்எஸ்என்னில் நண்பர்: எங்கை போட்டாய் எங்கை போட்டாய் (என்று எழுதிகின்றார்)

பிள்ளை: அம்மா சாப்பிடச்சொல்லி வந்தா நான் பள்ளிக்கூட வேலை செய்வதாக சொல்லி அனுப்பி விட்டேன். நீ சொல்லு அப்ப நீ இன்னும் சாப்பிடலையா?

இது தான் இப்ப பல வீட்டில் நடக்கும் உரையாடல். நடுவர்களே! பிள்ளை அழகாக சுத்த தமிழில் எம்எஸ்என்னில் கதைத்தால் கூட கண்டுபிடிக்க முடியாதளவுக்கு பல புலம்பெயர்ந்த பெற்றோர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் கண்ணுக்கு பிள்ளைகள் படிக்கின்றார்கள் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் அந்தப்பிள்ளைகள் செய்யும் லொள்ளுகள் நம்மளை மாதிரி இளையோரிற்குத் தானே தெரியும். வெளியில் போக அனுமதி கிடைக்காத சமயத்திலும் கூட யாரை சந்திக்க நினைத்தார்களோ அவர்களை நேரில் சந்திப்பதை போல் கதைப்பதற்கு வழி வகுக்கின்றது இந்த இணையம். <b>இணையத்தின் எம் எஸ் என் க்கு பின்னால் இருந்து பெற்றோருக்கு காதில் பூ வைத்து விட்டு சாட்டிங்கில் ஈடுபடுபவர்கள் இளையவர்களே.. ஆபாசப்படங்களை அதிகம் பரிமாறி, மற்றயவர்களின் வாழ்க்கையையும் அவ்வப்போது சீரழித்து விடுபவர்கள் இளையோர்கள் தான் நடுவர் அவர்களே... கிழக்கில் சூரியன் உதிக்கிறது என்பதற்கு உதாரணம் தேவையில்லை. நடைமுறையில் நடப்பவற்றை பார்த்தாலே போதுமானது என்று நினைக்கிறேன்.</b>

இளையோரால் இணையத்தினால் நேரத்தைச் சேமிக்கமுடிகிறது என்று எதிரணியினர் சொல்கிறார்களே..! அதனால் இளையோருக்கு நன்மையா கிட்டுகிறது...??? எந்த வகையில் அவர்கள் அதனை தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்?;. குழு மோதல்களிற்கும்;, பணமோசடிக்கும், தீய பழக்கவழக்கத்துக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் அவர்களை அடிமையாக்க அல்லவா இந்த மேலதிக விடயங்கள் பயன்படுகின்றன.! இதுவே அவர்களின் கல்வியை அடியோடு பறிக்கக் காரணமும் ஆகின்றது. அதாவது சேமிக்கப்படும் நிமிடங்களால் அவர்கள்; சீரழிக்கப்படுகிறார்கள்....

நடுவர்களே! இணையம் இளையோரை வாழவைக்கும் கண்ணுக்குத் தெரியா தெய்வமாம். ஏதிரணி அறிவுக்கொழுந்துகளே! அந்த தெய்வத்தை காட்டும் கணினிக்குப் பூமாலை சாத்தி, கற்பூரம் காட்டி அருகிலேயே உண்டியல் வையுங்கள். பிழைத்துக்கொள்வீர்கள்.

<b>இணைய அறிமுகமே இளையோருக்கு வரப்பிரசாதம் போல் என்று நினைக்கும் எதிரணியினர்... இணையம் ஒரு ஊடகம் அதனால் இளையோரை ஆக்க முடிவதில்லை.... ஊக்கம் உள்ள இளைஞனுக்கு தகவல்களை வழங்குகிறது அதைவைத்து திறமையானவன் உயர்கிறான்.... ஆனால் எல்லோரையும் (திறமை இல்லதாவனையும்) சீரழிக்கக் கூடியதாய் இணையம் இருக்கிறது, எல்லோரையும் சீரழிக்கிறது.</b>

நடுவர்கள் அவர்களே! இணையத்தால் எத்தனை பேருக்கு மன உளைச்சல்கள் அதிகமாகின்றது தெரியுமா? இணையத்தில் கதைக்கும் போது நமது உணர்ச்சிகளை வார்த்தைகளால் வடிப்பது கடினம். அப்படி முகநயங்களை போட்டு எழுதினாலும் தகவல்கள் பிழையான கருத்தை கொள்கின்றது. அதனால் தான் இந்த களத்தில் கூட எவ்வளவு சண்டைகள் சச்சரவுகள்? ஏற்கனவே கூறப்பட்ட ஒரு உதாரணம் தான் இருப்பினும் இங்கே கூறுவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். <b>யாழ் போன்ற நல்ல இணையத்தளங்கள் எத்தனை இளையோர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள்?? புதியவர்கள் எத்தனை பேர் தொடர்சியாக நிலைத்து நிற்கிறார்கள் என்று பாருங்கள்? அதே வேளை கீழ்தரமான வாதங்களில் ஈடுபடும் தளங்களுக்கு எத்தனை இளையோர் செல்கிறார்கள் என்று பாருங்கள்?? ஏற்கனவே இது பற்றிய புள்ளிவிபரங்கள் எமதணியினரால் கூறப்பட்டுள்ளது</b>
ஸ்டாலின் கூறியது:-
ஒரு ஓவியன் ஒரு கவிஞன் ஒரு இசை அமைப்பாளன் தனது துறையோடு சேர்பவர்களை கண்டு பிடித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று தனது நிலையை வலுபடுத்த ஏது வாயிருக்கிறது. இலைமறை காயாக இருக்கும் திறமைகளை கூட யாருடைய கெஞ்சுதலுமின்றி சுதந்திரமாக வெளிக்கொணரமுடிகிறது
.

நடுவர் அவர்களே.... அக்காலத்தில் இசை அமைத்தோர் தாம் கற்றுக்கொண்டதோடு.. தமது முயற்சி... தமது புதிய எண்ணங்களை சேர்த்து தரமான இசையை வழங்கினார்கள். எமது பாரம்பரிய முறைகள் அழியாமல் பாதுகாத்தார்கள். ஆனால் இப்போது ஸ்டாலின் கூறியது போல செய்கின்றபடியால் தான் தரமான எமது பாரம்பரிய பாடல்கள் நமக்கு கிடைப்பதில்லை. மாறாக களவாடப்பட்ட... களவாடப்பட்ட மெட்டுகளில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்ட பாடல்கள் தான் நமக்குக் கிடைக்கின்றன.. இவை அனைத்துமே மேலைதேய பாணியில் அமைந்தவை தான். இந்திய திரையிசையாகட்டும், அல்லது புலத்தில் உருவாகும் நம்மவர் ஆக்கங்களாகட்டும் மேலைதேய ஆக்கங்களின் செல்வாக்கு மிக மிக அதிகமாக இருப்பதை எதிர் அணியினர் மறுக்க முடியுமா?? ஈழத்தில் அதிகம் இணைய பாவனை இல்லை. அங்கிருந்து உருவாகும் ஆக்கங்களில் நமது பாரம்பரியம் அழியாமல் பாதுக்காக்கப்பட்டு நமது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதைத்தானும் எதிர் அணியினர் மறுக்க முடியுமா??

வாதத்தின் பல இடங்களில் நடுத்தரவயது உடையவர்களை சற்று தாக்கி பேசியிருக்கிறார்.... எதற்காக அவர் அப்படியான ஒரு தொனியில் பேசினார் என்று அறிய முடியவில்லை. ஆனால் நான் கூறுகிறேன். <b>இணையத்தில் தமிழ் சார்ந்த விடயங்களை அதிகம் பேசி.... கட்டுரைகள் எழுதி... தமிழை, தமிழ் பாரம்பரியதை வளர்க்க அதிகம் பாடுபடுபவர்கள் நடுத்தரவயதுக்காரர்கள் தான் என்பதை எதிர் அணியினர் ஏன் புரிந்துகொள்ளவில்லை? </b>இளையோர்களால் உருவாக்கப்படும் அதிகமான தளங்கள் திரையிசைப்பாடல், படங்கள், நடிகர்களின் படங்கள் தான் கணப்படுகின்றன என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். பல இளையோர் இணையத்தால் மேலைதேய பாரம்பரியங்களிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அவற்றை தடுத்து நிறுத்த நடுத்தரவயதுக்காரர் போராடுவதால் தான் அவர்களுக்கு இப்படியான ஒரு அவப்பெயரோ என்னவோ??

ஸ்டாலின் கூறியது:-
க.பொ.த உயர்தரத்தில் திறமைச் சித்தி பெற்றவர் கூட பல்கலை கழகத்தில் ஒளிர்விட முடியாததைக்கண்டிருக்கிறோம்........ஆனால் புலஇளைஞனுக்கோ இணையத்தோடு இணைந்து இளமையிலிருந்து கல்வி பயில்வதால் உருவாக்கத்துக்கு மிகவும் பயனுள்ளதாகிறது
.

பாடசாலை தேவைகளுக்காக மாணவர்கள் இணையத்தில் தேடல்களை மேற்கொள்வது பற்றி ஏற்கனவே வாதங்கள் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன... இதுபற்றி இன்னும் அதிகம் பேசத்தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். இணையத்தில் இலகுவாக தகவல்களை பெற்றுக்கொண்டு.. அதை முழுமையாக வாசிக்காமலே கொப்பியடித்து பயன் பெறும் புலம்பெயர்ந்த மாணவன் எப்படி தேடலற்ற ஒரு மாணவனாகிப்போகிறான் என்பது பற்றி எமதணியினர் கூறிவிட்டார்கள். இருப்பினும் ஈழத்து மாணவன் சிரமத்துக்குள்ளாகின்றான் என்று கூறுகிறார் நண்பர்.

<b>முட்டி மோதுபவனே புத்திசாலி ஆகிறான். எல்லாமே இலகுவாக கிடைக்கும் என்றால். வாழ்வில் சுவையும் இருக்காது முன்னேற்றமும் இருக்காது</b>.
ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட முயல்கிறேன். ஈழத்து மாணவன் சிரமத்துக்கு மத்தியில் தேடல்களை மேற்கொண்டு படிக்கிறான். புலம் பெயர்ந்த மாணவனும் உயர் தொழில் நுட்பவசதியுடன் படிக்கிறான். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்ப்போமே ஆனால்.. புலம் பெயர்ந்த மாணவன் உயர் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ள போதும். ஒரு பிரச்சினையை எதிர் நோக்குவதிலும், புத்திக்கூர்மையிலும் ஈழத்து மாணவனே சிறந்துவிளங்குறான். மொத்தத்தில் புலம் பெயர்ந்த இளையோர் இணையத்தால் தேடலற்ற பாடசாலை ஒப்படைகளை சுயமாக எழுதாமல் கொப்பி அடித்து விட்டு சோம்பேறிகளாக இருக்கிறார்கள் என்று நான் கூறுகிறேன்.

ஆபாசப் படங்கள், சாட்டிங், டேற்றிங் பற்றி கூறிய நண்பர்... வயது முதிர்ந்தவர்களை தேவையில்லாமல் சாடியிருக்கிறார், நடுவரவர்கள் சொன்னதுபோல நையாண்டி செய்திருக்கிறார். அத்துடன் இவற்றை வயது முதியவர்கள்தான் செய்கிறார்கள்... புலம் பெயாந்த் நாட்டில்; தான் காணும் இளையவன் தெளிவாக இருக்கிறான் என்று கூறி.. தெளிவில்லாத.. நடைமுறையில் இல்லாத... நம்பமுடியாத ஒரு கருத்தை சொல்லி சென்றிருக்கிறார். ஒரு பிழையான கருத்தை எதிர் அணியினரை நையாண்டி செய்து சத்தம் போட்டு கூறிவிட்டால். அது சரியென்று ஆகிவிடாது.


அன்றைய முன்னாள் இளைஞன் இன்றைய நடுத்தர முதியவர்கள் அடல்ஸ் ஒன்லி ஆங்கிலபடத்தில் வரும் அரை குறை வெட்டுகளுடன் வரும் ஒரு இரு நிமிடக்காட்சி கூட தங்கள் வக்கிரத்தை தீர்த்து கொள்ள ஆ வென்று காத்திருப்பார்கள்....புலத்தில் தெருவோரத்து காதல் ஜோடியொன்று முத்தமிட்டு அரவணித்து இருக்கும் நிலையை கண்டால் கூட நாகரிகம் கருதி மறு புறம் திரும்பி கொள்கிறான் ...

உதாரணமாக இன்று பியர் சாப்பிடுவது.... கோலா சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. ஆனால் அன்று பியர் சாப்பிடுவது ஒருபெரும் குற்றச்செயல். அது போலத்தான் அன்றைய ஒருசில நிமிட காட்சிகள் வக்கிர உணர்வுக்கு தீனி போட்டது. ஆனால் இன்று அப்படி இல்லை. அதனால் தான் தெருவோர காதல் ஜோடிகளை புலம் பெயர்ந்த இளையோர் திரும்பிப்பார்ப்பதில்லை என்பதை தவறாக சுட்டிக்காட்டிய நண்பர்.... தவறான கருத்தை அவரே தெளிவில்லாமல் கூறி சென்றிருக்கிறார்.

தான் காணும் இளையவன் தெளிவாக இருக்கிறான் என்று கூறும் இவர்.. புலம் பெயர் நாட்டில் தமிழர் கூடும் நிகழ்வுகளில் இடம் பெறும் காலாச்சார சீர்கேடுகளுக்கு என்ன சொல்ல போகிறார்?? அதுவும் இளையவனின் தெளிவான செயல் என்று கூறப்போகிறாரா என்ன??

<b>சிறிய அளவான நெருப்பு சமையலுக்குப் பயன் படுகிறது.... ஆனால் காய்கறிகளில் இருக்கும் சத்துக்களை இழப்பது போல, பெரிய நெருப்பு ஒரு வீட்டையே எரிப்பது போல, அல்லது ஒரு நகரையே எரிப்பது போலத்தான்... இணையமும் ஆக்கம் உள்ள ஒருசில அனுபவசாலிகளுக்கு திறமைசாலிகளுக்குப் பயன் பட்டாலும்... அது அனுபவம் இல்லாத புலம்பெயர் நாட்டில் பொழுது போக்கை குறியாக்கி வைத்திருக்கும் புலம் பெயர் இளையோரைச் சீரழிக்கின்றது.. சீரழிக்கின்றது. சீரழிக்கின்றது..</b>

பி.கு இணையத்தால் இளைஞருக்கு நன்மை என்று நடுவர்கள்; தீர்ப்பு கூறுவர்களானால் இந்த களத்தில் இருக்கும் அனைத்து மட்டுpறுத்தினர்களுக்கும் கட்டாய லீவு வழங்கி வீட்டிற்கு அனுப்புமாறு மோகன் அண்ணாவை கேட்டுக்கொள்கின்றேன்.

Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)