01-31-2006, 01:35 AM
<span style='color:red'><b>வெலிகந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் ஐவர் ஒட்டுப்படையால் கடத்தல்</b>
மட்டக்களப்பிலிருந்து வவுனியா நோக்கி ஊர்தியொன்றில் சென்றுகொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் வைத்து ஸ்ரீலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுப்படையினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் நடைபெறவிருந்து கணக்கியல் பயிற்சி நெறி ஒன்றில் கலந்து கொள்ளவதற்காகச் சென்றபோதே இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஐவரும் கடத்தப்பட்டது தொடர்பாக தமிழ் புனர்வாழ்வுக் கழகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:
மட்டக்களப்பு வெலிக்கந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.
இன்று மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 15 பேரை வெலிக்கந்தையடியில் வழிமறித்த இனந்தெரியாத ஆயுததாரிகள்; அவர்களுள் ஐவரை பலவந்தமாகக் கடத்திச்சென்றுள்ளனர்.
இந்தப் பயங்கரமான சம்பவம் இன்று நண்பகல் 1.00 மணியளவில் வெலிக்கந்தையிலுள்ள சிறீலங்கா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் வந்த ஆயுதம்தரித்த கடத்தல்காரர்கள் பணியாளர்கள் பயணித்த வாகனத்தின் குறுக்காக தங்களது வாகனத்தை நிறுத்தி ஐரையும் கடத்திச்சென்றுள்ளனர். கடத்தப்பட்ட ஐவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் என்று கூறி கதறியழுதபோதிலும் அவர்கள் எவ்வித ஈவிரக்கமுமின்றி; தாக்கப்பட்டு அவர்களது கண்கள் துணிகளால் மூடிக்கட்டப் பட்ட நிலையில் கதறக்கதற வாகனம் ஒன்றில் கடத்திச்செல்லப்பட்டு;ள்ளனர். இவர்களுடன் பயணித்த ஏனைய பணியாளர்கள்; தங்களுக்கும் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பதட்டத்திலும், அச்சத்திலும் யாருடனும் உடனடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பின்றி தொடர்ந்தும் பயணிக்க முடியாதவாறு கடத்தல்காரர்களால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இச்சப்பவம் தொடர்பான தகவல்கள் கடத்தப்பட்டு நான்கு மணிநேரத்தின் பின்பே தப்பிவந்தவர்களால் தெரிவிக்க முடிந்தது. கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதனையும் இதுவரையில் அறியமுடியாதுள்ளது.
கடத்தப்பட்டவர்களில் நால்வர் தொடர்பான விபரம்:
திரு.சுரேந்திரன் (சிறுவர் இல்லங்களின் இணைப்பாளர்)
செல்வி.பிறேமினி (மட்டக்களப்பு மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்காளர்)
திரு.இரவி (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)
திரு. வசந்தன் (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)
செல்வி பிறேமினி அவர்கள் பணியாற்றிக்கொண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டுவருபவராவார்.
கடத்தப்பட்டவர்கள் ஐவர் உட்பட 15 பேரும் வவுனியாவில் நடைபெறவிருந்த கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள்; என்பதும் குறிப்பிடத்தக்கது.</span>
<i><b>தகவல் மூலம் - சங்கதி</b></i>
மட்டக்களப்பிலிருந்து வவுனியா நோக்கி ஊர்தியொன்றில் சென்றுகொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் வைத்து ஸ்ரீலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுப்படையினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் நடைபெறவிருந்து கணக்கியல் பயிற்சி நெறி ஒன்றில் கலந்து கொள்ளவதற்காகச் சென்றபோதே இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஐவரும் கடத்தப்பட்டது தொடர்பாக தமிழ் புனர்வாழ்வுக் கழகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:
மட்டக்களப்பு வெலிக்கந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.
இன்று மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 15 பேரை வெலிக்கந்தையடியில் வழிமறித்த இனந்தெரியாத ஆயுததாரிகள்; அவர்களுள் ஐவரை பலவந்தமாகக் கடத்திச்சென்றுள்ளனர்.
இந்தப் பயங்கரமான சம்பவம் இன்று நண்பகல் 1.00 மணியளவில் வெலிக்கந்தையிலுள்ள சிறீலங்கா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் வந்த ஆயுதம்தரித்த கடத்தல்காரர்கள் பணியாளர்கள் பயணித்த வாகனத்தின் குறுக்காக தங்களது வாகனத்தை நிறுத்தி ஐரையும் கடத்திச்சென்றுள்ளனர். கடத்தப்பட்ட ஐவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் என்று கூறி கதறியழுதபோதிலும் அவர்கள் எவ்வித ஈவிரக்கமுமின்றி; தாக்கப்பட்டு அவர்களது கண்கள் துணிகளால் மூடிக்கட்டப் பட்ட நிலையில் கதறக்கதற வாகனம் ஒன்றில் கடத்திச்செல்லப்பட்டு;ள்ளனர். இவர்களுடன் பயணித்த ஏனைய பணியாளர்கள்; தங்களுக்கும் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பதட்டத்திலும், அச்சத்திலும் யாருடனும் உடனடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பின்றி தொடர்ந்தும் பயணிக்க முடியாதவாறு கடத்தல்காரர்களால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இச்சப்பவம் தொடர்பான தகவல்கள் கடத்தப்பட்டு நான்கு மணிநேரத்தின் பின்பே தப்பிவந்தவர்களால் தெரிவிக்க முடிந்தது. கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதனையும் இதுவரையில் அறியமுடியாதுள்ளது.
கடத்தப்பட்டவர்களில் நால்வர் தொடர்பான விபரம்:
திரு.சுரேந்திரன் (சிறுவர் இல்லங்களின் இணைப்பாளர்)
செல்வி.பிறேமினி (மட்டக்களப்பு மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்காளர்)
திரு.இரவி (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)
திரு. வசந்தன் (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)
செல்வி பிறேமினி அவர்கள் பணியாற்றிக்கொண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டுவருபவராவார்.
கடத்தப்பட்டவர்கள் ஐவர் உட்பட 15 பேரும் வவுனியாவில் நடைபெறவிருந்த கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள்; என்பதும் குறிப்பிடத்தக்கது.</span>
<i><b>தகவல் மூலம் - சங்கதி</b></i>
"
"
"

