01-30-2006, 01:46 PM
அனைவருக்கும் எனது வணக்கம்.
ஒரு விடயத்தை நன்றாக விளங்கிக்கொண்டால் அதனை எப்படியாவது மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். அதுபோல்தான் ஸ்ராலினும் செய்திருக்கிறார்.
ஓர் உருவாக்கம் செய்வதற்கும், ஊக்குவிப்பதற்கும் இணையம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது என்று ஆரம்பித்து அவற்றிற்கு ஊதாரணங்களாக "காதல் கடிதம்" படத்தையும், இலண்டன் ஆகாஸையும் எடுத்துக்காட்டினார். ஆனால் நடுத்தர வயதுடையவர்களையும், முதியவர்களையும் பார்த்து சிறிது நையாண்டி செய்வதுபோல் தெரிகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி இன்றைய இளஞர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான் அதற்காக மேற்கூறியவர்களைச் சாடுவது முறையாகுமா? யாரிடமிருந்து என்ன பதில் வருகிறதென்று பார்ப்போம்.
தாயகத்து பல்கலைக்கழக இளைஞர்களையும், புலத்து பல்கலைக்கழக இளைஞர்களையும் ஒப்பிட்டார். அதேவேளை இவர்கள் இணையத்தால் பெறும் நன்மையையும் விளக்கினார். தேசியத்துக்கு வலுவுூட்டுவதாகக் கூறினார். ஆனால் எதிரணியினர் திரும்பத்திரும்ப ஒன்றையே கூறி கூக்குரலிடுகிறார்கள் என்றார். இவருடைய விளக்கம் தலை வெளித்தவர்களையும், தலைமுடி காதோரம் வெளுத்தவர்களையும், வேட்டி கட்டுபவர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதுபோலவும் இருக்கிறது. எதிரணியினர் பதில் என்ன?
மீண்டும் முன்னாள் இளைஞர்களையும், நடுத்தர முதியவர்களையும் பார்த்து ஆங்கிலப்பட ஆபாசக் காட்சிகளையும், புலத்து தெருவோர முத்தங்களையும் ஒப்பிடுகிறார். இவற்றைப் பார்த்துவிட்டு புலத்தில் இளைஞர்கள் கெட்டுப்போக வாய்ப்பில்லை, மற்றவர்களே கெட்டுப்போகிறார்கள் என்கிறார். புலச்சுூழல் இளைஞர்களுக்கு சாதகமும்கூட என்கிறார். அவற்றை ஆக்க சக்திக்குப் பயன்படுத்தி, வளரச்சிக்குப் பங்களிப்பான் என்று முடித்துள்ளார். இனி வரப்போகும் நபர் எப்படித் தன் வாதத்தை வைக்கிறார் என்று பார்ப்போம்.
சில இடங்களில் அவரது தமிழ் தெளிவில்லாமல் இருக்கின்றது. நல்ல தமிழில் தருவதற்கு அவருக்கு தட்டச்சு அனுபவம் போதாமல் சிறிது சங்கடப்பட்டுத்தான் பட்டிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்திருக்கிறர். நான் ஆரம்பத்தில் கூறியதுபோல் ஒரு விடயத்தை விளக்குவதற்கு நல்ல மொழியறிவு அவசியமில்லை. ஆனால் தெளிவாக இருந்தால் அனைவருக்கும் இலகுவாக இருக்கும்.
தனது வாதத்தை வைத்த ஸ்ராலினுக்கு எனது பாராட்டுக்கள். எதிர் அணியிலிருந்து அடுத்தவர் வந்து தனது வாதத்தை முன்வைக்குமாறு அழைக்கிறேன்.
ஒரு விடயத்தை நன்றாக விளங்கிக்கொண்டால் அதனை எப்படியாவது மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். அதுபோல்தான் ஸ்ராலினும் செய்திருக்கிறார்.
ஓர் உருவாக்கம் செய்வதற்கும், ஊக்குவிப்பதற்கும் இணையம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது என்று ஆரம்பித்து அவற்றிற்கு ஊதாரணங்களாக "காதல் கடிதம்" படத்தையும், இலண்டன் ஆகாஸையும் எடுத்துக்காட்டினார். ஆனால் நடுத்தர வயதுடையவர்களையும், முதியவர்களையும் பார்த்து சிறிது நையாண்டி செய்வதுபோல் தெரிகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி இன்றைய இளஞர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான் அதற்காக மேற்கூறியவர்களைச் சாடுவது முறையாகுமா? யாரிடமிருந்து என்ன பதில் வருகிறதென்று பார்ப்போம்.
தாயகத்து பல்கலைக்கழக இளைஞர்களையும், புலத்து பல்கலைக்கழக இளைஞர்களையும் ஒப்பிட்டார். அதேவேளை இவர்கள் இணையத்தால் பெறும் நன்மையையும் விளக்கினார். தேசியத்துக்கு வலுவுூட்டுவதாகக் கூறினார். ஆனால் எதிரணியினர் திரும்பத்திரும்ப ஒன்றையே கூறி கூக்குரலிடுகிறார்கள் என்றார். இவருடைய விளக்கம் தலை வெளித்தவர்களையும், தலைமுடி காதோரம் வெளுத்தவர்களையும், வேட்டி கட்டுபவர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதுபோலவும் இருக்கிறது. எதிரணியினர் பதில் என்ன?
மீண்டும் முன்னாள் இளைஞர்களையும், நடுத்தர முதியவர்களையும் பார்த்து ஆங்கிலப்பட ஆபாசக் காட்சிகளையும், புலத்து தெருவோர முத்தங்களையும் ஒப்பிடுகிறார். இவற்றைப் பார்த்துவிட்டு புலத்தில் இளைஞர்கள் கெட்டுப்போக வாய்ப்பில்லை, மற்றவர்களே கெட்டுப்போகிறார்கள் என்கிறார். புலச்சுூழல் இளைஞர்களுக்கு சாதகமும்கூட என்கிறார். அவற்றை ஆக்க சக்திக்குப் பயன்படுத்தி, வளரச்சிக்குப் பங்களிப்பான் என்று முடித்துள்ளார். இனி வரப்போகும் நபர் எப்படித் தன் வாதத்தை வைக்கிறார் என்று பார்ப்போம்.
சில இடங்களில் அவரது தமிழ் தெளிவில்லாமல் இருக்கின்றது. நல்ல தமிழில் தருவதற்கு அவருக்கு தட்டச்சு அனுபவம் போதாமல் சிறிது சங்கடப்பட்டுத்தான் பட்டிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்திருக்கிறர். நான் ஆரம்பத்தில் கூறியதுபோல் ஒரு விடயத்தை விளக்குவதற்கு நல்ல மொழியறிவு அவசியமில்லை. ஆனால் தெளிவாக இருந்தால் அனைவருக்கும் இலகுவாக இருக்கும்.
தனது வாதத்தை வைத்த ஸ்ராலினுக்கு எனது பாராட்டுக்கள். எதிர் அணியிலிருந்து அடுத்தவர் வந்து தனது வாதத்தை முன்வைக்குமாறு அழைக்கிறேன்.

