01-30-2006, 08:52 AM
<b>நோர்வேயின் புதிய விஷேட பிரதிநிதி ஜெனீவா பேச்சில் பங்குபற்றுவார்</b>
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக நோர்வே அரசினால் புதிய விஷேட தூதுவரொருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ஜெனீவா நகரில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், நோர்வே அரசு இதற்காக விசேட தூதுவரொருவரை நியமித்துள்ளது.
ஆனால், சொல்ஹெய்ம் தொடர்ந்தும் சமாதான முயற்சிகளுக்கு பொறுப்பான நோர்வேயின் அனுசரணையாளராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய விஷேட பிரதிநிதி ஜெனீவா பேச்சில் கலந்து கொள்வாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது துணைப் படையினரின் ஆயுதங்களைக் களைவது மற்றும் உயர் பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை மீண்டும் குடியமர அனுமதிப்பது என்பன குறித்தே பிரதானமாக ஆராயப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை சீராக அமுலாக்குவதன் மூலமே குடா நாட்டில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தலாம் எனவும் இதன் மூலமே படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரலாம் எனவும் சொல்ஹெய்முடனான சந்திப்பின் போது விடுதலைப் புலிகள் வலியுறுத்தியிருந்தனர்.
இதேவேளை, நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்துடன் லண்டனுக்கும் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஜெனீவாவில் நடத்துவது குறித்து ஆராய்ந்ததாகவும் அதன் பின்னரே இலங்கைக்கு வந்து வன்னிக்கு சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததாகவும் தெரிய வருகிறது.
<i><b>தகவல் மூலம்-தினக்குரல்</b></i>
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக நோர்வே அரசினால் புதிய விஷேட தூதுவரொருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ஜெனீவா நகரில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், நோர்வே அரசு இதற்காக விசேட தூதுவரொருவரை நியமித்துள்ளது.
ஆனால், சொல்ஹெய்ம் தொடர்ந்தும் சமாதான முயற்சிகளுக்கு பொறுப்பான நோர்வேயின் அனுசரணையாளராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய விஷேட பிரதிநிதி ஜெனீவா பேச்சில் கலந்து கொள்வாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது துணைப் படையினரின் ஆயுதங்களைக் களைவது மற்றும் உயர் பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை மீண்டும் குடியமர அனுமதிப்பது என்பன குறித்தே பிரதானமாக ஆராயப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை சீராக அமுலாக்குவதன் மூலமே குடா நாட்டில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தலாம் எனவும் இதன் மூலமே படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரலாம் எனவும் சொல்ஹெய்முடனான சந்திப்பின் போது விடுதலைப் புலிகள் வலியுறுத்தியிருந்தனர்.
இதேவேளை, நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்துடன் லண்டனுக்கும் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஜெனீவாவில் நடத்துவது குறித்து ஆராய்ந்ததாகவும் அதன் பின்னரே இலங்கைக்கு வந்து வன்னிக்கு சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததாகவும் தெரிய வருகிறது.
<i><b>தகவல் மூலம்-தினக்குரல்</b></i>
"
"
"

