01-30-2006, 08:46 AM
<b>பேச்சுக்கான உத்தேச திகதிகள்
புலிகள் தரப்புக்குத் தெரிவிப்பு
பெப்ரவரி 15,16 இல் அல்லது
21,22 இல் நடத்தத் திட்டம் </b>
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவது பற்றிய நேரடிப் பேச்சு களை ஜெனீவாவில் நடத்துவதற்கான மூன்று தொகுதித் திகதிகள் பிரேரிக்கப்பட்டிருக் கின்றன.
பெப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் இந்தப் பேச்சுகளை நடத்த லாம் என்பதை சுவிற்ஸர்லாந்து அரசின் ஆலோசனையோடு அனுசரணையாளர்களான நோர்வேத் தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குத் தெரியப்படுத்தி யிருக்கின்றனர் என அறியவருகின்றது.
பெப்ரவரி 15, 16இல் அல்லது, பெப்ர வரி 21, 22இல் அல்லது பெப்ரவரி 22,23இல் இந்தப் பேச்சுகளை ஜெனீவாவில் நடத்த லாம் என நோர்வே அனுசரணையாளர்கள் பிரேரித்திருக்கின்றனர்.
ஆனால், இத்திகதிகளில் எப்போது பேச்சை நடத்தலாம் என்பது குறித்து புலி களின் தலைமை இன்னும் திட்டவட்டமான பதில் எதையும் வெளிப்படையாக நோர் வேக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அறியவந்தது.
நேரடிப் பேச்சு நடத்துவதற்கு முதலில் அதற்கான புறச்சூழ்நிலை ஏற்படவேண்டும், தமிழர் தாயகத்தில் இராணுவக் கெடுபிடிகள், தாக்குதல்கள் போன்றவை இல்லாத அமைதி நிலைமை நீடிக்க÷வண்டும் எனப் புலிகளின் தலைமை கருதுவதாகத் தெரிகின் றது.
அத்தகைய நிலைமை நிலவுவதற்கான சாத்தியங்கள் தென்படமுதல் பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் அர்த்தமில்லை என்பதில் புலிகளின் தலைமை உறுதியாக இருப்பதாகவும் தெரிகின்றது.
எனவே, அரச படைகளின் தாக்குதல்கள், ஒட்டுப்படைகளின் அட்டகாசங்கள் போன் றவை தணிந்து, அந்தப் படைகளை அரசுத் தøலமை தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வருவது உறுதிப்படுத்தப்படுமானால், உத் தேச பேச்சுக்குப் பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று தொகுதித் திகதிகளில் ஒன்றைப் புலிகளின் தலைமை ஏற்று அதற்கு இணங்கக் கூடும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன
<i><b>தகவல் மூலம்-உதயன்</b></i>
புலிகள் தரப்புக்குத் தெரிவிப்பு
பெப்ரவரி 15,16 இல் அல்லது
21,22 இல் நடத்தத் திட்டம் </b>
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவது பற்றிய நேரடிப் பேச்சு களை ஜெனீவாவில் நடத்துவதற்கான மூன்று தொகுதித் திகதிகள் பிரேரிக்கப்பட்டிருக் கின்றன.
பெப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் இந்தப் பேச்சுகளை நடத்த லாம் என்பதை சுவிற்ஸர்லாந்து அரசின் ஆலோசனையோடு அனுசரணையாளர்களான நோர்வேத் தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குத் தெரியப்படுத்தி யிருக்கின்றனர் என அறியவருகின்றது.
பெப்ரவரி 15, 16இல் அல்லது, பெப்ர வரி 21, 22இல் அல்லது பெப்ரவரி 22,23இல் இந்தப் பேச்சுகளை ஜெனீவாவில் நடத்த லாம் என நோர்வே அனுசரணையாளர்கள் பிரேரித்திருக்கின்றனர்.
ஆனால், இத்திகதிகளில் எப்போது பேச்சை நடத்தலாம் என்பது குறித்து புலி களின் தலைமை இன்னும் திட்டவட்டமான பதில் எதையும் வெளிப்படையாக நோர் வேக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அறியவந்தது.
நேரடிப் பேச்சு நடத்துவதற்கு முதலில் அதற்கான புறச்சூழ்நிலை ஏற்படவேண்டும், தமிழர் தாயகத்தில் இராணுவக் கெடுபிடிகள், தாக்குதல்கள் போன்றவை இல்லாத அமைதி நிலைமை நீடிக்க÷வண்டும் எனப் புலிகளின் தலைமை கருதுவதாகத் தெரிகின் றது.
அத்தகைய நிலைமை நிலவுவதற்கான சாத்தியங்கள் தென்படமுதல் பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் அர்த்தமில்லை என்பதில் புலிகளின் தலைமை உறுதியாக இருப்பதாகவும் தெரிகின்றது.
எனவே, அரச படைகளின் தாக்குதல்கள், ஒட்டுப்படைகளின் அட்டகாசங்கள் போன் றவை தணிந்து, அந்தப் படைகளை அரசுத் தøலமை தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வருவது உறுதிப்படுத்தப்படுமானால், உத் தேச பேச்சுக்குப் பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று தொகுதித் திகதிகளில் ஒன்றைப் புலிகளின் தலைமை ஏற்று அதற்கு இணங்கக் கூடும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன
<i><b>தகவல் மூலம்-உதயன்</b></i>
"
"
"

