01-30-2006, 07:31 AM
<i><b>சமஷ்டி முறையில் தீர்வு காணலாம் என்ற நிலைப்பாடு பிரச்சினைகளை அதிகரிக்கவே செய்யும் - விமல் வீரவன்ச </b></i>
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் தீர்வுக்காணலாம் என்ற நிலைப்பாடு மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கவே வழிவகுக்கும் என ஜே வி பியின் பிரசார செயலர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நிலை ஒன்றை அரசாங்கம் எடுக்குமானால் அதனை தாம் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜேவிபி அரசாங்கத்தின் அங்கம் அல்ல அது அதன் தனித்த நிலையிலேயே செயற்பட்டு வருகிறது.
மஹிந்த கொள்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும் அதனை விடுத்து எவராவது வெளியில் இருந்து மஹிந்த கொள்கையை மாற்றி சமஷ்டி முறையை நடைமுறைப்படுத்த முனைந்தால் அதனை தமது கட்சி அனுமதிக்கப் போவதில்லை என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஒற்றையாட்சி கொள்கையின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகிறது. நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் சமாதான முயற்சிகளில் முன்னரை போன்று செயற்பட அனுமதிக்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே நாட்டினரை போர் நிறுத்த உடன்பாட்டின் சொந்தக்காரர்களாக கருதி வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணத்துங்கவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியல்ரீதியாக தற்சமயம் தோற்கடிக்கப் பட்டுள்ளார்கள் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்
லங்கா சிறீ
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் தீர்வுக்காணலாம் என்ற நிலைப்பாடு மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கவே வழிவகுக்கும் என ஜே வி பியின் பிரசார செயலர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நிலை ஒன்றை அரசாங்கம் எடுக்குமானால் அதனை தாம் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜேவிபி அரசாங்கத்தின் அங்கம் அல்ல அது அதன் தனித்த நிலையிலேயே செயற்பட்டு வருகிறது.
மஹிந்த கொள்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும் அதனை விடுத்து எவராவது வெளியில் இருந்து மஹிந்த கொள்கையை மாற்றி சமஷ்டி முறையை நடைமுறைப்படுத்த முனைந்தால் அதனை தமது கட்சி அனுமதிக்கப் போவதில்லை என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஒற்றையாட்சி கொள்கையின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகிறது. நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் சமாதான முயற்சிகளில் முன்னரை போன்று செயற்பட அனுமதிக்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே நாட்டினரை போர் நிறுத்த உடன்பாட்டின் சொந்தக்காரர்களாக கருதி வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணத்துங்கவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியல்ரீதியாக தற்சமயம் தோற்கடிக்கப் பட்டுள்ளார்கள் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்
லங்கா சிறீ
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

