01-30-2006, 07:23 AM
<b>பேச்சுவார்த்தை அறிவிப்புக்குப் பின்னர் வன்முறைகள் குறைந்துவிட்டன: ஹக்ரூப் ஹொக்லெண்ட் </b>
தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது முதல் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வன்முறைகள் குறைந்துவிட்டன என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளதாவது:
ஒரு மாதத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம் இது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் முழு அளவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் 2002 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த பின்னர் கடந்த டிசம்பர் மாதம்தான் மோசமான வன்முறைகள் ஏற்பட்டன. நூற்றுக்கும் அதிகமான பொதுமக்களும் அரச படையினரும் விடுதலைப் புலிகளும் உயிரிழந்தனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையே கேள்விக்குறியாக்கியிருந்தது.
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் சிறிலங்கா அரசாங்கமும் ஜெனீவாவில் அடுத்த மாதம் பேச்சுகள் நடத்துவதாக அறிவித்த நிலையில் வன்முறைகள் முடிவுக்கு வந்துள்ளன. கண்காணிப்புக் குழுவினருக்கு நிம்மதி அளிக்கிறது.
கொழும்பில் கடந்த வாரம் நோர்வே சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்த போது யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார்.
அமைதி முயற்சிகளின் அடுத்த நகர்வுக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையாக ஜெனீவா பேச்சுகள் அமையும் என்று நம்புகிறோம்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது முதல் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வன்முறைகள் குறைந்துவிட்டன என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளதாவது:
ஒரு மாதத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம் இது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் முழு அளவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் 2002 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த பின்னர் கடந்த டிசம்பர் மாதம்தான் மோசமான வன்முறைகள் ஏற்பட்டன. நூற்றுக்கும் அதிகமான பொதுமக்களும் அரச படையினரும் விடுதலைப் புலிகளும் உயிரிழந்தனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையே கேள்விக்குறியாக்கியிருந்தது.
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் சிறிலங்கா அரசாங்கமும் ஜெனீவாவில் அடுத்த மாதம் பேச்சுகள் நடத்துவதாக அறிவித்த நிலையில் வன்முறைகள் முடிவுக்கு வந்துள்ளன. கண்காணிப்புக் குழுவினருக்கு நிம்மதி அளிக்கிறது.
கொழும்பில் கடந்த வாரம் நோர்வே சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்த போது யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார்.
அமைதி முயற்சிகளின் அடுத்த நகர்வுக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையாக ஜெனீவா பேச்சுகள் அமையும் என்று நம்புகிறோம்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

