01-29-2006, 10:54 AM
<i><b>பேச்சுவார்த்தையில் பங்கேற்பது தொடர்பாக ஜே.வி.பி. இன்னமும் தீர்மானிக்கவில்லை</b></i>
ஜெனீவாவில் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் ஜே.வி.பி. கலந்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக எதுவிதத் தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க அழைப்பு விடுக்கப்பட்டால் அத் தருணத்தில் தீர்மானிப்போமென்றும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்
ஜெனீவாவில் இடம்பெறப்போகும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து எதுவித அழைப்பும் இதுவரையில் விடுக்கப்படவில்லை. அது தவிர ஜே.வி.பி. இது தொடர்பாக தீர்மானிக்கவும் இல்லை.
அவ்வாறு அழைப்பு விடுக்கப்படும் சூழலில் அந்த நேரம் என்ன தீர்மானம் எடுக்க வேண்டுமோ அதனை எடுப்போமெனத் தெரிவித்த அநுர திஸாநாயக்க எம்.பி. புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்தையும் இவ்வாறு உதாரணம் காட்டினார்.
புலிகளுக்கு எதிராக செயற்படும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையுமாறு அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். அதனை அரசாங்கம் செய்யத் தவறினால் அதற்கு என்ன பதில் என்பதை அச்சந்தர்ப்பத்தில் தீர்மானிப்போம் என்றார்' இதனையே நானும் நினைவுபடுத்த விரும்புகிறேனென்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
<b>ஜாதிக ஹெல உறுமய</b>
இலங்கையிலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டுமென்ற ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை. எனவே ஜெனீவாவில் இடம்பெறப்போகும் பேச்சுவார்த்தைகளிலும் எமது பிரசன்னம் கிடையாது. ஜனாதிபதி அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்க மாட்டோம். நிராகரிப்போமென்றும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது
<b>தினக்குரல்</b>
ஜெனீவாவில் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் ஜே.வி.பி. கலந்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக எதுவிதத் தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க அழைப்பு விடுக்கப்பட்டால் அத் தருணத்தில் தீர்மானிப்போமென்றும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்
ஜெனீவாவில் இடம்பெறப்போகும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து எதுவித அழைப்பும் இதுவரையில் விடுக்கப்படவில்லை. அது தவிர ஜே.வி.பி. இது தொடர்பாக தீர்மானிக்கவும் இல்லை.
அவ்வாறு அழைப்பு விடுக்கப்படும் சூழலில் அந்த நேரம் என்ன தீர்மானம் எடுக்க வேண்டுமோ அதனை எடுப்போமெனத் தெரிவித்த அநுர திஸாநாயக்க எம்.பி. புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்தையும் இவ்வாறு உதாரணம் காட்டினார்.
புலிகளுக்கு எதிராக செயற்படும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையுமாறு அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். அதனை அரசாங்கம் செய்யத் தவறினால் அதற்கு என்ன பதில் என்பதை அச்சந்தர்ப்பத்தில் தீர்மானிப்போம் என்றார்' இதனையே நானும் நினைவுபடுத்த விரும்புகிறேனென்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
<b>ஜாதிக ஹெல உறுமய</b>
இலங்கையிலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டுமென்ற ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை. எனவே ஜெனீவாவில் இடம்பெறப்போகும் பேச்சுவார்த்தைகளிலும் எமது பிரசன்னம் கிடையாது. ஜனாதிபதி அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்க மாட்டோம். நிராகரிப்போமென்றும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது
<b>தினக்குரல்</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

