01-29-2006, 08:49 AM
<b>யுத்த நிறுத்த அமுலாக்கம் குறித்து மட்டுமே பேச்சுகள்: விடுதலைப் புலிகள் </b>
ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்துடன் யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாக மட்டுமே பேச்சுகள் நடத்தப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ஆங்கில ஊடகமான த சண்டே லீடருக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் அளித்த நேர்காணல்:
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரச படையினர் மீறியுள்ளனர். இதைத் தவிர வேறு எதுவும் பேசுவதற்கு இல்லை. ஆகவே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாகத்தான் பேசப்படும்.
மட்டக்களப்பு - பொலன்னறுவ எல்லையில் வெலிக்கந்த பகுதியில் வடமுனையில் விடுதலைப் புலிகளின் மேஜர் கபிலன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் நாம் கவலை கொள்கிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கத்தைத் தவிர்த்த வேறு எந்த விடயங்களையும் பேச நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருத்துவது தொடர்பான பேச்சுகளுக்கு நாங்கள் தயாராக இல்லை. சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் முதலில் ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்றார் தயா மாஸ்டர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்துடன் யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாக மட்டுமே பேச்சுகள் நடத்தப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ஆங்கில ஊடகமான த சண்டே லீடருக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் அளித்த நேர்காணல்:
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரச படையினர் மீறியுள்ளனர். இதைத் தவிர வேறு எதுவும் பேசுவதற்கு இல்லை. ஆகவே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாகத்தான் பேசப்படும்.
மட்டக்களப்பு - பொலன்னறுவ எல்லையில் வெலிக்கந்த பகுதியில் வடமுனையில் விடுதலைப் புலிகளின் மேஜர் கபிலன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் நாம் கவலை கொள்கிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கத்தைத் தவிர்த்த வேறு எந்த விடயங்களையும் பேச நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருத்துவது தொடர்பான பேச்சுகளுக்கு நாங்கள் தயாராக இல்லை. சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் முதலில் ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்றார் தயா மாஸ்டர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

