01-29-2006, 01:29 AM
<b>ஜெனீவா பேச்சு: சிறிலங்கா அரசாங்க குழுவில் 5 பேர்? </b>
[சனிக்கிழமை, 28 சனவரி 2006, 21:01 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் 5 பேர் கொண்ட குழு அறிவிக்கப்படக் கூடும் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலோசகர் ஜயந்த தனபால, சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ஜோன் குணரத்ன ஆகியோர் இடம்பெறக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றிய அறிவிப்பு வெளியான பின்னர் அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படக் கூடும்.
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடம் பற்றி நோர்வே அரசாங்கம், சுவிற்சர்லாந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் பேச்சுவார்த்தைக்கான நாள் நிர்ணயிக்கப்படும் என அரசாங்கப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
பெப்ரவரி மாதம் 14 ஆம் நாளுக்கும் 21 ஆம் நாளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் விடுதலைப் புலிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
3 நாட்களுக்கு இந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதே சரியானதாக இருக்கும் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட எந்த அரசியல்வாதியும் இந்த அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் எரிக் சொல்ஹெய்மிடம் விடுதலைப் புலிகள் கூறியிருப்பதாகவும் நோர்வே தூதரகத்தை மேற்கோள் காட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
[சனிக்கிழமை, 28 சனவரி 2006, 21:01 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் 5 பேர் கொண்ட குழு அறிவிக்கப்படக் கூடும் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலோசகர் ஜயந்த தனபால, சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ஜோன் குணரத்ன ஆகியோர் இடம்பெறக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றிய அறிவிப்பு வெளியான பின்னர் அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படக் கூடும்.
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடம் பற்றி நோர்வே அரசாங்கம், சுவிற்சர்லாந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் பேச்சுவார்த்தைக்கான நாள் நிர்ணயிக்கப்படும் என அரசாங்கப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
பெப்ரவரி மாதம் 14 ஆம் நாளுக்கும் 21 ஆம் நாளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் விடுதலைப் புலிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
3 நாட்களுக்கு இந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதே சரியானதாக இருக்கும் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட எந்த அரசியல்வாதியும் இந்த அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் எரிக் சொல்ஹெய்மிடம் விடுதலைப் புலிகள் கூறியிருப்பதாகவும் நோர்வே தூதரகத்தை மேற்கோள் காட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

