01-28-2006, 11:58 PM
முழுப்பூசனிக்காயை சோற்றில புதைப்பம் என்று பகல் கனவு கண்கின்ற எதிரணியினரே நடுவர்களே எனதணியினரே என்று வணக்கத்துடன் ஆரம்பிக்க்கின்றார் நிதர்சன். தொடர்ந்து என்ன தான் சொல்கிறார் பார்ப்போம். (என்ன இன்னும் இந்த முழுப் பூசனிக்காய்க்கதை வரவில்லையே என்று யோசிச்சிட்டிருந்தன் வந்திட்டு..)
இணைய ஊடகத்தால் புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தலைப்பின் கீழ் வாதாடுவோருக்கு நன்மை என்பதன் வரைவிலக்கணம் புரியவில்லை அப்படி என்கிறார். நன்மையின் வரைவிலக்கணத்தை அவராவது சொன்னாரா..?? பார்ப்போம்.
இணையமானது தேடலற்ற தன்மையை உருவாக்குகின்றது என்கிறார். இணையத்தில் இருப்பவற்றை பிரதி செய்து கொடுப்பதால் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் இடைநிறுத்தப்படுகிறார்கள். இது வாசிப்புப்பழக்கத்தை தடுக்கிறது என்கிறார். இது நன்மையா என்று கேக்கிறார்.
இணையமானது புதியதொரு கலாச்சார சூழலை உருவாக்குகிறது என்கிறார். எப்படி என்றால்.. இலங்கையில் இருக்கும் தங்கையை அல்லது அக்காவை கனடாவில் இருக்கும் அண்ணன் அல்லது தம்பி முகம் தெரியாது சரியான அறிமுகம் இல்லாது காதலிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது என்கிறார். எதிர் முனையில் இருப்பவர் யார் என்று தெரியாமலே இந்த கலாச்சார சீரழிவு நடக்கிறது என்கிறார்.
இன்னொன்றைச் சொல்கிறார் பெண்களை அவர்களுக்கு தெரியமல் கவர்ச்சியாக படமெடுத்து இணையத்தில் இணைப்பவர் யார்?அவற்றை இரசித்து பார்ப்பவர்கள் யார்? எல்லாம் இளையோர்கள் தான் என்கிறார்.
மற்றொரு முக்கிய கருத்தைச்சொல்கிறார் ஈழ விடுதலை போரின் மாற்றுக்கருத்தாளர் என்றபோர்வைக்குள் எத்தனை இளைஞர்கள் இணையத்தில் அரசியல் செய்கின்றனர்? இது ஈழத்துக்கும் இளைஞருக்கும் நல்ல சமிக்கையா? இது தான் சீரழிவு சீரழிவிலிருந்து பிறக்கும் எந்த நன்மையும் தீமையே! அப்படி என்று அறிதியிட்டுக்கூறுகிறார்.
இந்த இணையமானது இளையோரின் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறது என்கிறார் பள்ளிகளில் பாடங்களிற்கு மட்டம் போட்டு நூல் நிலையங்களிலல் எம் எஸ் என்னில் அரட்டை அடித்ததாக தனது அனுபவத்தை பகிர்ந்து செல்கிறார். இது இளையோருக்கு நன்மையா என்றும் கேக்கிறார். இன்ரர் நெட் இணைப்பு பெற பணம் செலவழியுது... அது இல்லாதவர்கள் இன்ரர் நெட் கபேக்கு போக பணம் செலவழியுது என்கிறார்.
எதிரணியினர் வைத்த கருத்துக்களை வெட்டும் விதமாக வந்த கருத்துக்களை பார்ப்போம்.
இணையத்திற்கு அடிமையாவதற்கு மனக்கட்டுப்பாடின்மையே காரணம் என்று வைக்கப்பட்ட வாதத்திற்கு பதில் வைக்கிறார். எவ்வளவு தான் மனக்கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் அதை உடைக்க விளம்பரங்கள் செய்து சீரழிவுப்பாதையை நோக்கி இணையம் இழுக்கிறது இளையோரை என்கிறார்.
இணையம் இளையோரை சென்றடைய முன்னர் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா. என்ற கேள்விக்கு பதில் தருகிறார். முதல் காதல் இருந்தது அதற்குப்பெயர் தான் காதல். இப்போது இணையம் நல்லிரவு 12 மணிக்கு வெப்காமில் குடும்பம் நடத்தும் காதலர்களை உருவாக்கியுள்ளது என்கிறார்.? இது காதலா என்கிறார்..?? வெப்காமிலையும் குடும்பம் நடத்தலாமா.. :wink:
காகங்கள் கறுப்பானவை - ஆகவே
கறுப்பானவை எல்லாம் காகங்கள் !!
( எங்காவது லோப்புத்தகத்தில இது இருக்கா..)
தொடர்ந்து சொல்கிறார்.. உங்களுக்கு இணையம் தருகின்ற நன்மைகளை மட்டும் தெரிந்ததால் இணையம் புலத்து இளையோருக்கு நன்மை பயக்கிறது என்று ஆகிவிடுமா..?? என்று கேக்கிறார். எதிரணியினரை..
தொடர்ந்து இணைய ஊடகம் கருத்தை சுதந்திரமாக வைக்க உதவுகிறது என்ற கேள்விக்கு பதில் வைக்கையில்் இதற்கு முதல் பத்திரிக்கையில் சுதந்திரமாக நீங்கள் எழுதியதில்லையா? என்று கேக்கிறார். இல்லையாயின் நீங்கள் இருந்த சூழல் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்கு தராவிட்டால் அனைவருக்கும் அப்படியா என்று கேக்கிறார்.
இலங்கையில் சுதந்திரமாய் கருத்து வைத்து காணாமல் போன பல பத்திரிகையாளர் இருக்கிறார்கள். இணையத்தில் கருத்து வைத்து பாதிக்கப்பட்டவர்கள் உண்டா என்று கேக்கிறார்களா எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்.
இணையத்தை புரிந்து கொண்ட எவருக்கும் இணையம் இளையோரை சீரழிக்கிறது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது என்று கூறும் நிதர்சன்.
<b>ஆக்க நினைப்பவர்க்கு இணையம் என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்.</b>
என்ற வரியை மேற்கோளாக ஏடுத்து சிறு துரும்பும் சீரழிக்கிற நிலையில் தான் இளையோர்கள் இருக்கிறார்கள். அவர்களை இணையம் சீரழிக்கிறது என்று கூறி தனது கருத்தை நிறைவு செய்கிறார்...
இணைய ஊடகத்தால் புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனதணிக்கு பலம் சேர்க்கும் பல கருத்துக்களை வைத்து பல கருத்துக்களை வெட்டிப்பேசிச் செல்லும் நிதர்சன் அவர்களைத் தொடர்ந்து புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடத்தால் நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
இணைய ஊடகத்தால் புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தலைப்பின் கீழ் வாதாடுவோருக்கு நன்மை என்பதன் வரைவிலக்கணம் புரியவில்லை அப்படி என்கிறார். நன்மையின் வரைவிலக்கணத்தை அவராவது சொன்னாரா..?? பார்ப்போம்.
இணையமானது தேடலற்ற தன்மையை உருவாக்குகின்றது என்கிறார். இணையத்தில் இருப்பவற்றை பிரதி செய்து கொடுப்பதால் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் இடைநிறுத்தப்படுகிறார்கள். இது வாசிப்புப்பழக்கத்தை தடுக்கிறது என்கிறார். இது நன்மையா என்று கேக்கிறார்.
இணையமானது புதியதொரு கலாச்சார சூழலை உருவாக்குகிறது என்கிறார். எப்படி என்றால்.. இலங்கையில் இருக்கும் தங்கையை அல்லது அக்காவை கனடாவில் இருக்கும் அண்ணன் அல்லது தம்பி முகம் தெரியாது சரியான அறிமுகம் இல்லாது காதலிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது என்கிறார். எதிர் முனையில் இருப்பவர் யார் என்று தெரியாமலே இந்த கலாச்சார சீரழிவு நடக்கிறது என்கிறார்.
இன்னொன்றைச் சொல்கிறார் பெண்களை அவர்களுக்கு தெரியமல் கவர்ச்சியாக படமெடுத்து இணையத்தில் இணைப்பவர் யார்?அவற்றை இரசித்து பார்ப்பவர்கள் யார்? எல்லாம் இளையோர்கள் தான் என்கிறார்.
மற்றொரு முக்கிய கருத்தைச்சொல்கிறார் ஈழ விடுதலை போரின் மாற்றுக்கருத்தாளர் என்றபோர்வைக்குள் எத்தனை இளைஞர்கள் இணையத்தில் அரசியல் செய்கின்றனர்? இது ஈழத்துக்கும் இளைஞருக்கும் நல்ல சமிக்கையா? இது தான் சீரழிவு சீரழிவிலிருந்து பிறக்கும் எந்த நன்மையும் தீமையே! அப்படி என்று அறிதியிட்டுக்கூறுகிறார்.
இந்த இணையமானது இளையோரின் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறது என்கிறார் பள்ளிகளில் பாடங்களிற்கு மட்டம் போட்டு நூல் நிலையங்களிலல் எம் எஸ் என்னில் அரட்டை அடித்ததாக தனது அனுபவத்தை பகிர்ந்து செல்கிறார். இது இளையோருக்கு நன்மையா என்றும் கேக்கிறார். இன்ரர் நெட் இணைப்பு பெற பணம் செலவழியுது... அது இல்லாதவர்கள் இன்ரர் நெட் கபேக்கு போக பணம் செலவழியுது என்கிறார்.
எதிரணியினர் வைத்த கருத்துக்களை வெட்டும் விதமாக வந்த கருத்துக்களை பார்ப்போம்.
இணையத்திற்கு அடிமையாவதற்கு மனக்கட்டுப்பாடின்மையே காரணம் என்று வைக்கப்பட்ட வாதத்திற்கு பதில் வைக்கிறார். எவ்வளவு தான் மனக்கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் அதை உடைக்க விளம்பரங்கள் செய்து சீரழிவுப்பாதையை நோக்கி இணையம் இழுக்கிறது இளையோரை என்கிறார்.
இணையம் இளையோரை சென்றடைய முன்னர் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா. என்ற கேள்விக்கு பதில் தருகிறார். முதல் காதல் இருந்தது அதற்குப்பெயர் தான் காதல். இப்போது இணையம் நல்லிரவு 12 மணிக்கு வெப்காமில் குடும்பம் நடத்தும் காதலர்களை உருவாக்கியுள்ளது என்கிறார்.? இது காதலா என்கிறார்..?? வெப்காமிலையும் குடும்பம் நடத்தலாமா.. :wink:
காகங்கள் கறுப்பானவை - ஆகவே
கறுப்பானவை எல்லாம் காகங்கள் !!
( எங்காவது லோப்புத்தகத்தில இது இருக்கா..)
தொடர்ந்து சொல்கிறார்.. உங்களுக்கு இணையம் தருகின்ற நன்மைகளை மட்டும் தெரிந்ததால் இணையம் புலத்து இளையோருக்கு நன்மை பயக்கிறது என்று ஆகிவிடுமா..?? என்று கேக்கிறார். எதிரணியினரை..
தொடர்ந்து இணைய ஊடகம் கருத்தை சுதந்திரமாக வைக்க உதவுகிறது என்ற கேள்விக்கு பதில் வைக்கையில்் இதற்கு முதல் பத்திரிக்கையில் சுதந்திரமாக நீங்கள் எழுதியதில்லையா? என்று கேக்கிறார். இல்லையாயின் நீங்கள் இருந்த சூழல் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்கு தராவிட்டால் அனைவருக்கும் அப்படியா என்று கேக்கிறார்.
இலங்கையில் சுதந்திரமாய் கருத்து வைத்து காணாமல் போன பல பத்திரிகையாளர் இருக்கிறார்கள். இணையத்தில் கருத்து வைத்து பாதிக்கப்பட்டவர்கள் உண்டா என்று கேக்கிறார்களா எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்.
இணையத்தை புரிந்து கொண்ட எவருக்கும் இணையம் இளையோரை சீரழிக்கிறது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது என்று கூறும் நிதர்சன்.
<b>ஆக்க நினைப்பவர்க்கு இணையம் என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்.</b>
என்ற வரியை மேற்கோளாக ஏடுத்து சிறு துரும்பும் சீரழிக்கிற நிலையில் தான் இளையோர்கள் இருக்கிறார்கள். அவர்களை இணையம் சீரழிக்கிறது என்று கூறி தனது கருத்தை நிறைவு செய்கிறார்...
இணைய ஊடகத்தால் புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனதணிக்கு பலம் சேர்க்கும் பல கருத்துக்களை வைத்து பல கருத்துக்களை வெட்டிப்பேசிச் செல்லும் நிதர்சன் அவர்களைத் தொடர்ந்து புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடத்தால் நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

