Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#46
(மக் ரெஸ்ட் 1 2 3 அட என்ர மக்கின்ர சவுண்ட எதிரணியினர் சார்பான ஒலியமைப்பாளர் குறைச்சு வச்சிருக்கிறார்...இதை முதல் நிறுத்தனும்... :evilSmile

பட்டிமன்றத்தை மீள நினைவுக்கு கொண்டு வந்து அதை ஒழுங்கமைத்து சிறப்புற நெறிப்படுத்தும் இரசிகை அவர்களே! நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்ற மாதிரி பேச வெளிக்கிட்டம் ஏதாவது பேசி முழுப்பூசனிக்காயை சோற்றில புதைப்பம் என்று பகல் கனவு கண்டுகொண்டு எதிரணியில் இருக்கும் நண்பர்களே! ஐயோ எல்லா வேலையும் முடிச்சு இணையத்தில அரட்டை அடிப்பம் என்று சொல்லி வந்தால் அதில நடுவர் என்று சொல்லி என்ர நேரத்தை விரையமாக்கு கின்றனரே என்ற ஏக்கத்துடன் எதிரணிக்கும் எமதணிக்கும் இடையே நோர்வே மாதிரி திரியும் நடுவர்களே! உண்மை இது தான் யாதார்த்தம் இது தான் புரியாத அறிவிலிகளே! புரிந்து கொள்ளுங்கள் இணையத்தால் இளைஞர்கள் சீரழிது கொள்கிறது என்று ஆணித்தரமாகவும் ஆழமாகவும் வாதாட வந்திருக்கும் எனதணி நண்பர்களே!
எங்கள் சமூகத்தின் தொன்று தொட்ட பழக்கத்தில் ஒன்றான புதினம் பார்க்கிறது (புதினம் இணையத்தை பார்த்தே தான் தீரணும் என்று முணுமுணுக்காதீங்க, அது வேற இது வேற) அந்த வகையில் யாழ் களத்தை சுற்றி வரும் வாசகர்களே! அனைவருக்கும் இனிய இந்நேர வணக்கங்கள்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?
அருமையான தொரு தலைப்பு நன்மையடைகின்றனரா? அல்லது சீரழிந்து போகின்றார்களா? நன்மையடைகின்றனர் என்று பலர் இங்கே வாதாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு நன்மை என்பதன் வரைவிலக்கனம் புரியவில்லை. இணைய ஊடகத்துக்குள் பல பிரிவுகள் உண்டு அதனடிப்படையில் இளைஞர்கள் பெரும்பாலும் அறிந்திருப்பது என்ன? இளைஞர்களை சோம்பொறி ஆக்கி இளைஞர்களை சீரழிக்கும் ஒரு வித கிருமியே இணைய ஊடகமாகும். நோய் பிடிக்கும் முதல் தான் இதற்க்கு சிகிச்சையளிக்க முடியும் வந்த பின் எந்த சிகிச்சையும் பலனளிக்காது. இதற்க்கு இணைய நிலையங்களிலும்..வேலைக்கு போன இடத்தில் வேலை மறந்து தகவல் பரிமாறியில் அலவளாவுவோரையும் குறிப்பிடலாம். இணையம் இளைஞரை சீரழிக்கிறது என்றால் அது மிகையாகாது. எந்த அளவுக்கு இணையம் நன்மையை தருகின்றதோ அதை விட இரு மடங்கு தீமையை இணையம் இளைஞர்களுக்கு வழங்கி அவர்களை சீரழிக்கின்றது. குறிப்பிட்டு சொல்வதானால்..

<b>தேடலற்ற தன்மையை உருவாக்குகின்றது</b>
பள்ளியில் பாடத்திட்டத்தின் படி ஒப்படைகளை வழங்கும் போது புத்தகத்தை வாசி அல்லது பத்திரிகையை படி என்று சொன்னால் மாணவன் இங்கே என்ன செய்கிறான்? இணையத்தில் ஒட்டி விடுகிறான் இது அவனது தேடலை குறைக்க வில்லையா? ஆராயும் வாசித்து அறியும் பழக்கத்தை தடுக்கவில்லையா? இந்த பிரதி செய்து ஒட்டுவதால் பல்கலைக்கழககங்களில் இருந்தும் கல்லூரிகளில் இருந்தும் பல மாணவர்கள் இடை நிறுத்தப்படுகின்றனர். தேடலற்ற ஆக்கங்களால் மாணவர்களை சோம்பொறியாக்கி அவர்களை சுயமாக சிந்திக இந்த இணைய ஊடகங்கள் அனுமதிப்பதில்லை. ஒரு புத்தகத்தின் சுருக்கத்தை எழுதச் சொன்னால் அதனை இணையத்தில் இருந்து பெற்று ஆசிரியரிடம் வழங்குகின்றனர் இந்த இணையம் அந்த மாணவர்களை எவ்வளவு சீரழிக்கிறது பாருங்கள்.
<b>புதிய தொரு கலாச்சார சூழலை உருவாக்குகின்றது</b>
இணையத்தில் தற்போது புதிய கலாச்சார புற நிலை ஒன்று உருவாகியிருக்கின்றது. எங்கள் அணித்தலைவர் சொன்னது போல தமிழில் கருத்தாடுபவர்கள் மிக மிக குறைவாக உள்ளனர். அப்படியிருக்கையில் உலகலவிய ரீதியில் தமிழ் மொழி இணையப்பாவனையில் இரண்டாவது மொழியாக இருந்து என்ன பலன்? சீரழிவு என்பதை எல்லோரும் குறுகிய வட்டத்துக்குள் பார்க்கிறீர்கள். சீரழிவு என்பது அவன் நடையுடை பாவனை வரை இணையத்தால் மாற்றப்படுகின்றது. தகவல் பரிமாறியில் ஸ்ரீலங்காவில் இருக்கும் தங்கையை / அக்காவை காதல் புரிகின்றான்...கனடாவில் இருக்கும் அண்ணன்/தம்பி இந்த கலாச்சாரம் தான் நன்மையா? இது தான் இளைஞர்களுக்கு இணையம் வழங்கும் நன்மையா? முகம் தெரிய முகவரி தெரிய உறவுகளை உறவாக்கி கொண்டுள்ளோம் என்று யாழில் நீங்கள் பெருமை கொள்கின்றீர்களே இங்கு களத்தில் இருக்கும் எத்தினை பேரது உண்மை விபரம் தெரியும்? அந்த நம்பிக்கை ஏன் இன்னும் வளரவில்லை? இணையம் சீரழிக்கவில்லை என்றால் உங்கள் சொந்த பெயர்களில் உங்கள் சொந்த படத்தை இட்டு கருத்து வைப்பதில் என்ன தயக்கம்? உங்களுக்கே தெரிகின்றது. இந்த இணையம் ஒரு விஷம் என்று பின் எதற்க்கு வாதட வருகின்றீர்கள் அது நன்மையளிக்கின்றது என்று? யாகூ குழுக்களில் பல தமிழ் குழுக்களை பார்த்தேன் மகிழ்ச்சி தான் ஆனால் அவற்றில் அரை வாசி ஆபசங்களுக்கு முன்னூரிமை கொடுத்திருப்பது வெட்க கேடல்லவா? எமது சமூகத்துக்கு கேவலமல்லவா? ( இதை இல்லை என்று வாதாடும் கூட்டம் யாழ் களத்தில் இருக்கின்றது என்று எனக்கு தெரியும் ஏன் எதிரணி தலைவர் கூட வாதாடாலாம் ஆனால் யாதார்தம் எதுவோ அது தான் வெளிப்படும்) பெண்களை அவர்களுக்கு தெரியமல் கவர்ச்சியாக படமெடுத்து இணையத்தில் இணைப்பவர் யார்?அவற்றை இரசித்து பார்ப்பவர்கள் யார்? இது தான் இணையத்தின் நன்மையா? உங்கள் உற்றவருக்கு இப்படியோரு நிலை ஏற்ப்பட்டால் நீங்கள் அதை நன்மை என்பீர்களா? (அதற்காய் எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்தது என்று கருதாதீர்கள்) அண்மையில் கூட ஒரு செய்தியை இணையத்தில படித்தேன் ஒரு உயர் கல்வி நிலைய மாணவர்கள் மற்ற மாணவர்களின் நிழற்ப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் இணையத்தில் பல்வேறு வடிவத்தில் போட்டுள்ளனர். அது அந்த மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காதா? இது தான் இணையம் இளையவருக்கு தந்த நன்மையா? நிழற்ப்படங்களை கிராபிக்ஸ் செய்து அவற்றை இணையத்தில் போடும் புதிய கலாச்சாரம் இளைஞர்களுக்கு நன்மையா? சினிமா நடிகைகளின் படங்களை நிர்வாணமாக இணையங்களில் போடுவதும் இளைஞர்களுக்கு நன்மையா? ஈழ விடுதலை போரின் மாற்றுக்கருத்தாளர் என்றபோர்வைக்குள் எத்தனை இளைஞர்கள் இணையத்தில் அரசியல் செய்கின்றனர்? இது ஈழத்துக்கும் இளைஞருக்கும் நல்ல சமிக்கையா? இது தான் சீரழிவு சீரழிவிலிருந்து பிறக்கும் எந்த நன்மையும் தீமையே!
<b>பணத்தை/நேரத்தை விரையமரக்குகின்றது</b>
பள்ளியில் கொடுக்கப்படும் பாடங்களை செய்யாது தகவல் பரிமாறியில் நேரத்தை செலவு செய்யும் எத்தனை மாணவர்கள் உள்ளனர். இது அவர்களின் எதிர் காலத்துக்கு நன்மையா? வீட்டில் இணையதொடுப்பு இல்லை எனில் நெற்கபேகளுக்கு காசு கொடுத்து இணையத்தை பாவிக்கும் எத்தனை இளைஞரை கண்டிடுக்கின்றேன். ஏன் பள்ளியில் வகுப்புக்களை புறக்கணித்து விட்டு நூலகங்களில் எம்.எஸ்.என் பாவிக்கும் எத்தனை தமிழ் மாணவர்களை கனடிய பள்ளி களில் கண்டிருக்கின்றேன். இவற்றிற்க்கு நானும் விதிவிலக்கல்ல. இது இளைஞர்களுக்கு நன்மையா? புதிய கண்டுபிடிப்புக்களை அதாவது மென் பொருட்களை கண்டு பிடிக்கும் இளைஞர்களுக்கு அதனூடாக வருமானத்தை பெற இந்த இணையம் அனுமதிப்பில்லை. காரணம் அதற்க்குரிய சீரியல் இலக்கங்கள் இணையத்தில தாராளமாக பெற்றுக் கொள்ளலாம். இது அதை உருவாக்கிய இளைஞனை பாதிக்காதா?


<b>விஸ்னு எழுதியதிலிருந்து.....
நடுவர் அவர்களே... நாம் ஒரு விடயத்துக்கு அடிமையாவதுக்கு எமது மனக்கட்டுப்பாடின்மை தான் காரணம்.</b>
நடுவர் அவர்களே! மனக்கட்டுப்பாடு எங்கிருந்து வருகின்றது? ஒரு பொருளை விற்பதற்க்கு ஏன் விளம்பரம் செய்கின்றனர்? அப்படி விளம்பரம் செய்வதால் மனக்கட்டுப்பாட்டை உடைத்து அதை வாங்கு வார்கள் என்று தெரிந்து தானே!..விளம்பரத்தை பார்த்து பொருட்களை வாங்குவதில்லை என்று எந்த புலத்தவராவது கூறுவார்களா? அப்படி தான் இந்த இணைமும் நீங்கள் ஒரு இணையத்துக்கு போகும் போது அந்த இணையத்தில் எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கும் விளம்பரமே உங்கள் மனக்கட்டுப்பாட்டை உடைத்து சீரழிக்கின்றது. மனக்கட்டுப்பாட்டை இணையம் உடைக்கின்றது. என்பதை விஸ்னு அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
<b>அஜீவன் அவர்கள் எழுதியதிலிருந்து...
எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும்,
அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி! </b>
நடுவர் அவர்களே! இது எழுதப்படாத விதியல்ல ,ஒரு முயற்ச்சி செய்தால்....அதில் தீமையிருந்தால்.. அதை சுட்டிக்காட்ட வேண்டியது கடமை இது குறையல்ல பிழைகளை தவறுகளை சீரழிவுகளை சுட்டிக்காட்டுகின்றோம்... முடிந்தால் எதிர்த்து வாதாடுங்கள் மாற்று வழியை சொல்லுங்கள்...முடியவில்லையா மன்னிக்க தவறாய் சொல்லி விட்டோம் என்று பாதையை விட்டு நகருங்கள்.... இப்படி சொல்லி சொல்லியே பலரது கருத்துக்களை எமது சமூகம் ஏளனமாய் பார்க்கின்றது. இணையம் சீரழிக்கின்றது என்று நாங்கள் சொல்கின்றோம். இல்லை நீ கண்டாயா என்று கேட்டால்...நாம் என்ன செய்ய முடியும்.. சீரழிக்கின்றதா..? என்று ஆராய வேண்டாமா? அதை ஆரய விடாமல் அந்த நேரத்தை யாருடனாவது சற் பண்ண செலவழிக்கின்றனர் போல எதிரணியினர்.

<b>வர்னன் அவர்களது கருத்திலிருந்து...
நீங்க சொன்ன 2 வது வகை தமிங்கிலம் பேசுபவர்கள்தான் கனடாவின் சரித்திரம் கண்டிராத ஒரு பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி முடித்தார்கள்! </b>
வர்னன் அது இன உணர்வு... இதற்க்கும் இணையத்துக்கும் என்ன தொடர்பு? இணையம் இளையவரை சீரழிக்கின்றது என்று தானே சொன்னோம். எத்தினை போர் சற்றூமில் ஒரு மாதிரியும் நேரே ஒரு மாதிரியும் இருக்கின்றனர். அப்படி ஏன் இவர்கள் இருக்க கூடாது? நீங்கள் கூட வர்னன் என்று புனைபெயரில் இங்கும், சொந்தமாக மற்ற பெயரில் இதற்க்கு நேர் எதிரான கருத்துடன் இருக்க மாட்டீர்கள் என்பதற்க்கு என்ன உத்தரவாதம்? கணனி என்ற அழகிய பெட்டியை மட்டும் பார்ப்பவராக நீங்கள் இருக்கின்றீர்கள். ஆனால் நாமோ.. கணனியில் இருக்கும் இணையத்துக்குள் இறைந்து கிடக்கும் தீமைகளை பார்க்கின்றோம்..

* <b>இணயதளங்கள் என்பது இளையோரை சென்றடையும் முன் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா? </b>
நல்லதொரு வினா வர்னன் இணையம் தொடங்க முதல் காதல் இருந்தது. ஆனால்..அதற்க்கு பேர் தான் காதல் இப்போது இணையத்தில் வருவது காதலல்ல.. காமத்திலிருந்து காதல் வருகின்றது என்று இணையத்தில் காதல் செய்கின்றனர் பலர். நள்ளிரவில் 12 மணிக்கு வெப்காமில குடும்பம் நடத்தும் காதலர்களை யார் உருவாக்கினார்கள்?

*<b>இணையதளங்கள் என்ற ஒன்று வரும்முன் மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு எந்த மார்க்கங்களும் இருந்ததில்லையா? </b>
சத்தியமாக உங்கள் கருத்தை ஏற்க்கின்றேன். அப்படியான காலத்தில் நண்பர்களோடு அதைப்பற்றி பேசினார்கள். ஆனால் இணையம் வந்தவுடன் நண்பாகளின்றி அவற்றை நேரடியாக அறிகின்றனர்...அவற்றில் நேரடியாக ஈடுபடுகின்றனர்...

<b>
*இந்த சாட்ரூம்கள் வருமுன் எத்தனையோ கண்காணிப்பர்கள் .. பெற்றோர் ..உறவுகள்..தெரிந்தமுகம்கள் இருந்தத காலகட்டத்திலும் இவை எல்லாம் தாண்டி அந்த குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா?</b>
<i>வர்னன் நாற்றத்துக்கும் வாசனைக்கும் வித்தியாசத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்...</i>

<b>காகங்கள் கறுப்பானவை-ஆகவே
கறுப்பானவை எல்லாம் காகங்கள்!!
என்பது போல் உள்ளது! </b>
அட அட என்ன தத்துவம்... உங்களுக்கு நன்மை மட்டும் தெரிந்தால் இணையம் புலத்து தமிழ் இளையோருக்கு நன்மை பயக்கிறது என்று ஆகிவிடுவா?

<b>உண்ணும் உணவில் இருந்து - ஒரு சிலரின் உயிர்வாழ்வு வரை சில அம்சங்கள் பிறருக்கு தீங்காய் இருக்கிறது! அதனால் உணவே கூடாது என்று ஒதுக்கி வைக்கிறோமா?</b>
வர்னன் உணவை உண்டால் மரணம் நிச்சயம் என்றால் நீங்கள் உணவருந்து வீர்களா? இல்லை தானே அதே போல தான் இணையத்தில் தீங்கு இருக்கிறது அவற்றை தவிருங்கள் என்கின்றோம் இல்லை அவையேல்லாம் எமக்கு நன்மை என்று நீங்கள் வாதாடுகின்றீர் அப்படியாயின் நாங்கள் சீரழிவு என்பது உங்கள் அணியினருக்கு நன்மையாய் தெரிகின்றதா? அந்த அளவிற்க்கு இணையம் உங்களை சீரழித்து விட்டதா?
<b>ஆனால்... ஒரு வேளை உங்கள் முடிவு இளையோர்க்கு இணையதளங்கள் சீரழிவுதான் என்று அமைந்தால்-- புதுயுகத்துடன் போட்டி போட்டு ஓடும் இளையவர்களின் கால்களுக்கு குறுக்கே தடையாய் அது அமைந்துவிடுமோ- அவர்கள் ஆற்றலை முடக்கி போட்டுவிடுமோ?என்ற ஒரு சந்தேகத்தைஎன்னுள் நானே எழுப்பி -</b>இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள்? சீரழிக்கின்றது என்று தீர்ப்பு வழங்கி இளையோரை திருத்தி விடாதீர்கள் என்றா?

மேகநாதன் அவர்களது கருத்திலிருந்து...
<b>பாவம்,"வாழைப்பழத்தை உரித்துத் தந்தால்தான் சாப்பிடுவோம்" என அடம் பிடிக்கும் மிகச் சிலருக்காக தொடர்ந்து பார்ப்போம்....</b>
நீங்கள் இப்பவும் உரித்து கொடுபதில் நிற்க்கின்றீர்கள் ஆனால் இணையமோ வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்து விடுவது போல தீயவற்றை இளையவர்கள் முன் கொண்டு செல்கின்றது....

<b>எதிரணியினரை கேட்கிறார் வாய் கிழிய பேசும் உங்களுக்கு கருத்தை சுதந்திரமாக வைக்க உதவிய ஊடகம் எது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். . ??</b>
ஐயா மேகநாதன் அவர்களே! நடுவர் அவர்களே! நீங்கள் இணையத்தில் கருத்தெழுத முதல் வேறு எந்த ஊடகத்திலும் கருத்து வைக்கவில்லையா? பத்திரிகையில் சுகந்திரமாக நீங்கள் எழுதியது இல்லையா? ஏன் வானலைகளில் நீங்கள் சுகந்திரமாக பேசியதில்லையா? மேக நாதன் எந் உலகத்தில் இருக்கிறார். இந்த இணையம் வரமுதல் நீங்கள் உங்கள் ஆக்கங்களை கருத்துக்களை வெளியே சொல்லவில்லையா? அப்படியாயின் அது உங்கள் அறியாமை. நீங்கள் இருந்த சூழல் உங்களுக்கு அப்படியா சந்தர்ப்பத்தை வழங்கா விட்டால் அனைவருக்கும் அப்படியா?

இறுதியாக... கண்மூடிக்கொண்டு பூனை பால் குடித்தால் அது இருட்டாகாது என்பதை எதிரணியினர் புரிந்து கொள்ள வேண்டும். இணையம் புலத்து தமிழ் இஞைர்களை சீரழிக்கிறது என்பதில் இணையத்தை புரிந்து கொண்ட எவருக்கும் இரண்டு கருத்து இருக்காது. நிறைகுடம் ஒரு போது தளம்பாது ... இணையத்தை முழுமையாக அறியாத எதிரணியினரின் அதை அறிந்து விட்டு வாதாட வருமாறு அன்போடு வேண்டி...

<b>ஆக்க நினைப்பவர்க்கு இணையம் என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்.</b>
நல்ல கண்டு பிடிப்பை இளைஞன் அவர்கள் கண்டு பிடித்திருக்கின்றார்..அதையே நானும் சொல்கின்றேன். துரும்பும் சீரழிக்க கூடிய நிலையிலே எங்கள் இளைஞர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களை இணையம் இலகுவில் சீரழிக்கின்றது. எனவே உங்கள் பழமொழியும் இணையம் இளையவரை சீரழிக்கிறது என்றே சொல்கிறது.
என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்..
நன்றி
வணக்கம்...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)