01-28-2006, 12:25 PM
இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் நன்மை அடைகிறார்கள் என்ற தனது அணிக்காக கருத்து வைக்க வந்த மேகநாதன். எதிரணியினர் வெளிப்படை உண்மைகளைக்கூட வெளிச்சம் போட்டுக் காட்டினால் தான் ஏற்றுக்கொள்வார்கள் அப்படி என்று ஆரம்பிக்கிறார். எங்கே தொடர்ந்து தான் பார்ப்போமே.. என்னத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் என்பதை....
சொல்கிறார் இந்தப்பட்டி மன்றமானது கற்பில் சிறந்தவள் சீதையா கண்ணகியா என்றது அல்ல.. (இப்ப பலரும் கற்பென்றா என்ன என்று கேக்கிறாங்க நீங்க வேறை ) தொழில் நுட்பப்பாய்ச்சலோட இயந்த உறவுகளை கட்டி எழுப்ப நற்களம் தந்த யாழ் ஒரு இணையம் தானே இதற்கு மேல் நன்மையை விளக்க வேண்டுமா என்கிறார்
இணைய ஊடகத்தால் புலம் வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் அப்படி என்று வாதாடுபவர்கள் தவறான கண்ணோட்டத்துடன் இணையத்தை குற்றம் சாட்டுகிறார்கள் அவர்களை மதித்து சமூக அக்கறையுடன் சரியான பார்வையைக்காட்டுவது எது அப்படி என்று கேக்கிறார்..?? நீங்கள் குற்றம் சாட்டும் இணையம் தானாம் காட்டுது அப்படி என்கிறார். சே சே என்ன பழக்கம் இது நன்மையை அனுபவிச்சுக் கொண்டும் குற்றம் சாட்டலாமோ அப்படி என்று கேக்கிறார் மேகநாதன். பார்ப்போமே என்ன பதில் வருகிறது என்று...
ம் எதிரணியினரை கேட்கிறார் வாய் கிழிய பேசும் உங்களுக்கு கருத்தை சுதந்திரமாக வைக்க உதவிய ஊடகம் எது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். என்ன பதில் சொல்கிறீர்கள். ?? பார்ப்போமே..
இவ்வளவு உண்மைகளை வைத்த பின்னும் ஏன் விதண்டா வாதம் பேசி நேரத்தை வீணடிக்கிறீர்கள் அப்படி என்று கேக்கிறார். (இதே கேள்வியை அடுத்த அணியினரும் கேக்கிறார்கள் போலிருக்கே)
தொடர்ந்து தல அவர்களது பெயர் பற்றிக்கேக்கிறார். (அது அவர் சொந்த விருப்பம் விட்டு விடலாம்). தொடர்ந்து கேக்கிறார்.. அமெரிக்காவை துணைக்கு இழுத்து பயம் காட்டி தங்களது வாதத்திற்கு பலம் சேத்து தங்களது வாதம் அநீதியானது பலவீனமானது என்பதை உணர்த்திவிட்டார் அப்படி என்கிறார். (அமெரிக்கா என்றால் அநீதி என்று அர்த்தமா என்ன?? சரி சரி இரண்டு அணியினரும் அமெரிக்கா இணையத்தை உருவாக்கியது அப்படி என்று கூறியதாக நினைவு)
மதவடி நினைவுகள் சுகமாய் கூறினார்கள் சிலர்.. இவர் அதை பண்பாட்டுச் சீரழிவு என்று கூறிவிட்டார். இந்த மதவடி தானே.. பயிற்சி நிலையம் எதுக்கு என்று கேக்றியளா.. தம்.. சைட் இப்படி பலவற்றிற்கு அப்படியா..?? அதைத்தான் சொல்கிறார் போல..
இணையத்தால் இளையோர் சோம்பேறி ஆகிறார்கள் என்ற கருத்துக்கு பதில் வைக்கையில்.. உங்கட சோம்பேறித்தனத்தை பொதுப்படையாக எடுத்துக்கொள்வது சின்னப்பிள்ளைத்தனமானது அப்படி என்கிறார். உங்கட அனுபவத்தை ஏன் எல்லா இளையோருக்கும் பிரதியிடுறியள் என்று கேக்கிறார் போல.
இணையமானது எங்கள் நேரத்தை மிச்சப்படுத்த.. அறிவுப்பரப்பை விசாலப்படுத்த.. என்று இணையம் பலவழிகளில் உதவுகிறது.. இணையத்தால் கருத்து மயக்கம் உள்ளவர்களை தெளிவுபடுத்தக்கூட முடிகிறது என்கிறார்...
இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் இதை அழுத்தி உரைக்கிறோம் என்று கூறி அமரும் மேகநாதனைத் தொடர்ந்து புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தால் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
சொல்கிறார் இந்தப்பட்டி மன்றமானது கற்பில் சிறந்தவள் சீதையா கண்ணகியா என்றது அல்ல.. (இப்ப பலரும் கற்பென்றா என்ன என்று கேக்கிறாங்க நீங்க வேறை ) தொழில் நுட்பப்பாய்ச்சலோட இயந்த உறவுகளை கட்டி எழுப்ப நற்களம் தந்த யாழ் ஒரு இணையம் தானே இதற்கு மேல் நன்மையை விளக்க வேண்டுமா என்கிறார்
இணைய ஊடகத்தால் புலம் வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் அப்படி என்று வாதாடுபவர்கள் தவறான கண்ணோட்டத்துடன் இணையத்தை குற்றம் சாட்டுகிறார்கள் அவர்களை மதித்து சமூக அக்கறையுடன் சரியான பார்வையைக்காட்டுவது எது அப்படி என்று கேக்கிறார்..?? நீங்கள் குற்றம் சாட்டும் இணையம் தானாம் காட்டுது அப்படி என்கிறார். சே சே என்ன பழக்கம் இது நன்மையை அனுபவிச்சுக் கொண்டும் குற்றம் சாட்டலாமோ அப்படி என்று கேக்கிறார் மேகநாதன். பார்ப்போமே என்ன பதில் வருகிறது என்று...
ம் எதிரணியினரை கேட்கிறார் வாய் கிழிய பேசும் உங்களுக்கு கருத்தை சுதந்திரமாக வைக்க உதவிய ஊடகம் எது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். என்ன பதில் சொல்கிறீர்கள். ?? பார்ப்போமே..
இவ்வளவு உண்மைகளை வைத்த பின்னும் ஏன் விதண்டா வாதம் பேசி நேரத்தை வீணடிக்கிறீர்கள் அப்படி என்று கேக்கிறார். (இதே கேள்வியை அடுத்த அணியினரும் கேக்கிறார்கள் போலிருக்கே)
தொடர்ந்து தல அவர்களது பெயர் பற்றிக்கேக்கிறார். (அது அவர் சொந்த விருப்பம் விட்டு விடலாம்). தொடர்ந்து கேக்கிறார்.. அமெரிக்காவை துணைக்கு இழுத்து பயம் காட்டி தங்களது வாதத்திற்கு பலம் சேத்து தங்களது வாதம் அநீதியானது பலவீனமானது என்பதை உணர்த்திவிட்டார் அப்படி என்கிறார். (அமெரிக்கா என்றால் அநீதி என்று அர்த்தமா என்ன?? சரி சரி இரண்டு அணியினரும் அமெரிக்கா இணையத்தை உருவாக்கியது அப்படி என்று கூறியதாக நினைவு)
மதவடி நினைவுகள் சுகமாய் கூறினார்கள் சிலர்.. இவர் அதை பண்பாட்டுச் சீரழிவு என்று கூறிவிட்டார். இந்த மதவடி தானே.. பயிற்சி நிலையம் எதுக்கு என்று கேக்றியளா.. தம்.. சைட் இப்படி பலவற்றிற்கு அப்படியா..?? அதைத்தான் சொல்கிறார் போல..
இணையத்தால் இளையோர் சோம்பேறி ஆகிறார்கள் என்ற கருத்துக்கு பதில் வைக்கையில்.. உங்கட சோம்பேறித்தனத்தை பொதுப்படையாக எடுத்துக்கொள்வது சின்னப்பிள்ளைத்தனமானது அப்படி என்கிறார். உங்கட அனுபவத்தை ஏன் எல்லா இளையோருக்கும் பிரதியிடுறியள் என்று கேக்கிறார் போல.
இணையமானது எங்கள் நேரத்தை மிச்சப்படுத்த.. அறிவுப்பரப்பை விசாலப்படுத்த.. என்று இணையம் பலவழிகளில் உதவுகிறது.. இணையத்தால் கருத்து மயக்கம் உள்ளவர்களை தெளிவுபடுத்தக்கூட முடிகிறது என்கிறார்...
இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் இதை அழுத்தி உரைக்கிறோம் என்று கூறி அமரும் மேகநாதனைத் தொடர்ந்து புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தால் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

