Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்
#19
[size=18]<b>நிகழ்வுகள் தரப்போகும் விடைகள் </b>

""அமைதிப் பேச்சு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண் பதில் தமக்குள்ள பற்றுறுதியை திடசங்கற்பத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயலில் வெளிக்காட்டி உறுதிப்படுத்து வதற்கு இது ஒரு பரீட்சைக் காலம். அதில் அவர் தேறுவாரா என்பது அடுத்துவரும் நாள்களிலும் வாரங்களிலும் தெளிவாகி விடும்.'' என்று நேற்று இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

அதை எழுதிய மை காய்வதற்குள் பரீட்சையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோட்டை விடப்போகின்றாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.
மட்டக்களப்பு வடமுனையில் விடுதலைப் புலிகள் மீது நடத் தப்பட்ட ஆர்.பி.ஜி. தாக்குதலும், அதில் மேஜர் கபிலன் என்ற போராளி கொல்லப்பட்டமையும் பரீட்சைக் களத்தை காலத்தை ஆரம்ப தினங்களிலேயே கோட்டை விட ஜனாதிபதியும் அவ ரது அரசினரும் தயாராகிவிட்டனர் என்ற எண்ணத்தையே தமிழர் தரப்புக்கு ஏற்படுத்தியிருக்கின்றன.

""இந்தத் தாக்குதல் சம்பவம் விடுதலைப் புலிகளின் கட் டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடந்துள்ளது. எங்களுக்கும் அதற் கும் தொடர்பு ஏதுமில்லை.'' என்று இராணுவப் பேச்சாளர் கூறும் விட்டேத்தியான பதிலைத் தெரிவித்தபடி, இத்தகைய அசம்பாவிதங்கள் தொடர அரசுத் தரப்பு அனுமதிக்குமானால்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மட்டக்களப்பு வடமுனையில் நடைபெற்ற தாக்குதல் போல அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் இத்தகைய தாக்குதல்கள் அரசுப் படை களுக்கு எதிராக நடக்கவும், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் அவை நடப்பதால் அதற்கும் தமக்கும், தொடர்பு ஏதுமில்லை என்று புலிகள் தரப்பு "ஸிம்பிளாக' கூறி விலக்கவும் அவை வழிகாட் டும் என்பதை அரசுத் தலைமை புரிந்துகெள்ளவேண்டும்.

கடந்த புதனன்று எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான நோர்வே அனுசரணைக் குழுவினரைத் தலைவர் பிரபாகரன் சந்தித்த பின்னர், அவர் சார்பில் புலிகளின் மதியுரைஞர் அன் ரன் பாலசிங்கம் ஓர் அறிவிப்பை விடுத்தார்.
""அரச படைகளுக்கு எதிரான சகல வன்செயல்களையும் புலிகள் இயக்கம் நிறுத்துவதாகத் தலைவர் வே.பிரபாகரன் நோர்வே அனுசரணைத் தரப்புக்கும் அதன் ஊடாக இலங்கை அரசுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றார். '' என்று பாலசிங் கம் ஊடகவியலாளர்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவித்தார்.

அந்த அறிவிப்பு வெளியான கணத்திலிருந்து அந்த வாக்குறுதியில் புலிகள் அமைப்பு உறுதியாக இருப்பதைக் களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான உத்தரவுகள் தலைவர் பிரபா கரனிடமிருந்து பிராந்தியத் தளபதிகளுக்கு பறந்ததை அடுத்து அந்த உறுதிமொழி புலிகள் தரப்பினால் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஆனால், புலிகளின் அந்த அறிவிப்புக்கு ஏற்ப தனது அர சுப் பக்கத்திலிருந்தும் வன்முறைகள் இடம்பெறாமல் தடுப்ப தற்கு ஜனாதிபதியும் அவரது அரசும் தயாரா என்பதே கேள்வி.

மட்டு. வடமுனைத் தாக்குதல் இது விடயத்தில் அரசின் நிலைப்பாடு குறித்துப் பல்வேறு சந்தேகங்களைத் தமிழர் தரப் புக்கு எழுப்பியிருக்கின்றது.
வன்முறைகளை நிறுத்துவதில் புலிகள் உறுதியான முடிவு ஒன்றை எடுத்துள்ளனர் என்ற அறிவிப்பு புலிகள் தரப்பிலிருந்து வெளியாகி 48 மணி நேரம் கடந்த பின்னரும், அத்தகைய முடிவை வரவேற்று அதேபோன்ற தீர்மானத்தை ஜனாதிபதியும் எடுத் துத் தமது படைகளுக்கு கடும் உத்தரவு விடுத்திருக்கிறார் என்ற பிரகடனம் அரசுத் தரப்பிலிருந்து வரவில்லை. அத்தகைய அறி விப்பு நேற்று மாலையே அரசுத்தரப்பிலிருந்து வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டது.

அப்படி அறிவிப்பு வெளியானால் மட்டும் போதாது. அந்த அறிவிப்பில் உள்ள நிலைப்பாடு களத்தில் முழு அளவில் நடை முறைப்படுத்தப்படவும் வேண்டும்.
இத்தகைய முடிவு ஒன்றை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதில் விடுதலைப் புலிகளுக்கு உள்ள வலிமை அரசுத் தலைமைக்கு உண்டா என்பதும் சந்தேகத்திற்குரியதே.

வன்முறைகளை முழு அளவில் நிறுத்துவதன் மூலம் அமை திப் பேச்சுகளை முன்னெடுப்பதற்கான புறச்சூழ் நிலையை உருவாக்குவதில் அரசு,புலிகள் ஆகிய இரண்டு தரப்புக்குமே பொறுப்பு கடப்பாடு உண்டு.
அதற்கு, முதலில் இரு தரப்புத் தலைவர்களும் இதய சுத்தி யாக முழு மனதுடன் அத்தகைய தீர்மானத்துக்கு வர வேண் டும்.
அப்படி வந்துவிட்டாலும் அந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்துவதில் இரு தலைவர்களுக்கும் உள்ள இயலும் தன்மை வேறுபாடானது என்பதும் கவனிக்கத்தக்கது.
புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரை தனது இசைவின்றி இயக்கத்தில் அணுவும் அசையாது என்ற கடுமையான கட்டுப்பாட்டு அதிகாரத்தை வைத்திருப்பவர்; பேணுப வர்.

எனவே, தீர்மானத்தை எடுத்தார், உறுதியாக நடைமுறைப்படுத்துகிறார் என்பதை செயலில் அவரால் முழு அளவில் காட்ட முடிகிறது.
ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்த வரை அரச படைகளின் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் உறுதியான மனப்பாங்கு இதயசுத்தி அவருக்கு உண்டா என்பது முதல் கேள்வி.

அத்தகைய இதய சுத்தியான தீர்மானம் அவரிடம் இருந்தா லும் நாட்டின் முப்படைகள் மற்றும் பொலீஸின் தளகர்த்த ராக அவர் இருந்தாலும் அரச படைகளினதும், அவற்றின் புல னாய்வுத் துறைகளினதும், அந்தப் புலனாய்வுத்துறையின் வழி காட்டல்களில் இயங்குவதாகக் கருதப்படும் ஒட்டுப்படைகளி னதும் வன்முறை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, ஒடுக்கி தனது கைக்குள் அடக்கிவைத்திருக்கும் வலிமை அவருக்கு உண்டா என்பது இரண்டாவது கேள்வி.

அடுத்துவரும் நாள்களில் களத்தில் இடம்பெறக் கூடிய சம்பவங்கள் இந்த இரண்டு கேள்விகளுக்கும் தீர்க்கமான பதி லைத் தரக்கூடும்.

<i><b>ஆசிரியர் தலையங்கம்-உதயன் (28/01/06)</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 02:40 AM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 02:57 AM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:22 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:23 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:27 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:28 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 09:09 PM
[No subject] - by DV THAMILAN - 01-26-2006, 09:39 PM
[No subject] - by DV THAMILAN - 01-26-2006, 09:42 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:40 AM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:42 AM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 08:03 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 04:53 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 04:55 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 05:19 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 05:21 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 06:07 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 06:13 AM
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 01:29 AM
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 08:49 AM
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 08:50 AM
[No subject] - by MUGATHTHAR - 01-29-2006, 10:54 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 07:23 AM
[No subject] - by MUGATHTHAR - 01-30-2006, 07:31 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 08:46 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 08:52 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 08:02 AM
[No subject] - by மேகநாதன் - 02-01-2006, 08:05 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:26 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 11:50 PM
[No subject] - by மேகநாதன் - 02-03-2006, 07:45 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 01:36 PM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 10:43 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 08:18 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:41 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:07 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:18 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:25 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:33 AM
[No subject] - by Shankarlaal - 02-07-2006, 09:33 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:44 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:31 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:33 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:35 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:38 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:40 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 08:23 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:46 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:58 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 08:37 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 08:39 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 04:49 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 04:55 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 04:59 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 05:30 AM
[No subject] - by malu - 02-10-2006, 06:14 AM
[No subject] - by மேகநாதன் - 02-12-2006, 06:07 AM
[No subject] - by மேகநாதன் - 02-12-2006, 06:10 AM
[No subject] - by MUGATHTHAR - 02-12-2006, 11:50 AM
[No subject] - by Niththila - 02-12-2006, 12:03 PM
[No subject] - by I.V.Sasi - 02-12-2006, 01:21 PM
[No subject] - by MUGATHTHAR - 02-14-2006, 10:43 AM
[No subject] - by sinnakuddy - 02-15-2006, 12:50 PM
[No subject] - by paandiyan - 02-16-2006, 03:46 AM
[No subject] - by I.V.Sasi - 02-17-2006, 12:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)