01-28-2006, 05:21 AM
<b>தனது இலங்கை பயணம் குறித்து இந்திய அதிகாரிகளிற்கு சொல்ஹெய்ம் விளக்கம் </b>
ஸ்ரீலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும், பேச்சுவார்த்தைகளை மீளவும் தொடங்க முன்வந்துள்ளமை குறித்து நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், ஸ்ரீலங்காவின் சமாதான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரண் மற்றும், இந்திய தேசிய பாதுகாப்பு அலோசகர் எம். நூராயணன் ஆகியோரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடில்லியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்புகளை அடுத்து செய்தியாளர்களிடம் கருத்த வெளியிட்ட எரிக் சொல்ஹெய்ம், இலங்கையின் அனைத்துத்தர மக்களின் உரிமைகளுக்கும் மதிப்பளித்து இறுதித்திர்வு ஒன்று காணப்படவெண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அமைதி முயற்சிகள் குறித்து இந்தியா தன்னிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போர் மூலம் ஒருபோதும் இனப்பிரச்சினைக்குத் திர்வுகாண முடியாது என்று இரண்டு தரப்பினரும் உணர்ந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் ஜெனிவாவில் பெப்ரவரி மாத மத்தியிலே பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
ஸ்ரீலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும், பேச்சுவார்த்தைகளை மீளவும் தொடங்க முன்வந்துள்ளமை குறித்து நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், ஸ்ரீலங்காவின் சமாதான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரண் மற்றும், இந்திய தேசிய பாதுகாப்பு அலோசகர் எம். நூராயணன் ஆகியோரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடில்லியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்புகளை அடுத்து செய்தியாளர்களிடம் கருத்த வெளியிட்ட எரிக் சொல்ஹெய்ம், இலங்கையின் அனைத்துத்தர மக்களின் உரிமைகளுக்கும் மதிப்பளித்து இறுதித்திர்வு ஒன்று காணப்படவெண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அமைதி முயற்சிகள் குறித்து இந்தியா தன்னிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போர் மூலம் ஒருபோதும் இனப்பிரச்சினைக்குத் திர்வுகாண முடியாது என்று இரண்டு தரப்பினரும் உணர்ந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் ஜெனிவாவில் பெப்ரவரி மாத மத்தியிலே பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

