01-28-2006, 05:19 AM
<b>நம்பிக்கைச் சூழலை ஏற்படுத்த பல சுற்றுக்கள் பேச வேண்டும். </b>
போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தி ஒரு நம்பிக்கையான சூழலை ஏற்படுத்துவதானால் பல சுற்றுக்கள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிச்சொ ல்ஹெய்ம் அவர்கள். தமிழீழ விடுதலைப்புலிகளுடனும், சிறிலங்கா அரசுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியாவிற்கு விளக்கமளிக்கும் முகமாக புதுடெல்லி சென்றிருந்த சொல்ஹெய்ம் அவர்கள் நேற்று செய்தியாளர்ளிடம் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.
பொருளாதார விவகாரங்களோடு சுனாமி மீள் கட்டமைப்பு குறித்த விடயங்களோ பேச்சுவார்த்தைப் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த சொல்ஹெய்ம் இரு தரப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதானால் நிறையப் பேச வேண்டியிருக்கிறது. என்றார்.
அதே சமயம் போர் நிறுத்தக் கண்கணிப்புக் குழு வடக்குக் கிழக்கில் தமது பணிகளைச் செய்வதற்கு அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமே உரியது. இதனை அண்மையில் இரு தரப்பினரை யும் சந்தித்த போது வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
ஜெனீவா பேச்சு குறித்து கருத்துத் தெரிவித்த சொல்ஹெய்ம் எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் அல்லது இறுதிப் பகுதியில் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்படுமென்றார். இதேவேளை ஒன்றுபட்ட இ லங்கைக்குள் சகல இன மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான தீர்வுக்கு இந்தியா தமது ஆதரவை வழங்கும் என சொல்ஹெய்மிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தி ஒரு நம்பிக்கையான சூழலை ஏற்படுத்துவதானால் பல சுற்றுக்கள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிச்சொ ல்ஹெய்ம் அவர்கள். தமிழீழ விடுதலைப்புலிகளுடனும், சிறிலங்கா அரசுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியாவிற்கு விளக்கமளிக்கும் முகமாக புதுடெல்லி சென்றிருந்த சொல்ஹெய்ம் அவர்கள் நேற்று செய்தியாளர்ளிடம் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.
பொருளாதார விவகாரங்களோடு சுனாமி மீள் கட்டமைப்பு குறித்த விடயங்களோ பேச்சுவார்த்தைப் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த சொல்ஹெய்ம் இரு தரப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதானால் நிறையப் பேச வேண்டியிருக்கிறது. என்றார்.
அதே சமயம் போர் நிறுத்தக் கண்கணிப்புக் குழு வடக்குக் கிழக்கில் தமது பணிகளைச் செய்வதற்கு அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமே உரியது. இதனை அண்மையில் இரு தரப்பினரை யும் சந்தித்த போது வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
ஜெனீவா பேச்சு குறித்து கருத்துத் தெரிவித்த சொல்ஹெய்ம் எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் அல்லது இறுதிப் பகுதியில் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்படுமென்றார். இதேவேளை ஒன்றுபட்ட இ லங்கைக்குள் சகல இன மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான தீர்வுக்கு இந்தியா தமது ஆதரவை வழங்கும் என சொல்ஹெய்மிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"

