01-28-2006, 04:55 AM
<b>யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுகள்: இங்கிலாந்து மகிழ்ச்சி </b>
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே ஜெனீவாவில் யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுகள் நடைபெறுவதை இங்கிலாந்து அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இங்கிலாந்தின் வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய அமைச்சு அலுவலகத்தின் கிம் ஹெளவெல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் சந்தித்துப் பேச உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்கள் நடத்த உள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
இது மிக முக்கியமான நடவடிக்கை. இலங்கை மக்கள் அமைதிக்கான சந்தர்ப்பத்தை விரும்புகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செயற்படுத்தி வன்முறைகளை முடிவுக்குக்கொண்டு வருவதன் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான சரியான சூழலை உருவாக்க முடியும்.
இது தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டு வரும் அனுசரணைப் பணிகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தமது முழுமையான ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே ஜெனீவாவில் யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுகள் நடைபெறுவதை இங்கிலாந்து அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இங்கிலாந்தின் வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய அமைச்சு அலுவலகத்தின் கிம் ஹெளவெல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் சந்தித்துப் பேச உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்கள் நடத்த உள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
இது மிக முக்கியமான நடவடிக்கை. இலங்கை மக்கள் அமைதிக்கான சந்தர்ப்பத்தை விரும்புகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செயற்படுத்தி வன்முறைகளை முடிவுக்குக்கொண்டு வருவதன் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான சரியான சூழலை உருவாக்க முடியும்.
இது தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டு வரும் அனுசரணைப் பணிகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தமது முழுமையான ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
"

