01-27-2006, 07:03 PM
<b>இந்த இணையப் பட்டி மன்றத்தின் நடுவர்களே,எதிரணியினரே,எமதணியினரே,கள உறவுகளே அனைவருக்கும் பணிவன்பான வணக்கங்கள்..</b>
அன்புக்குரியோரே,
சில வெளிப்படை உண்மைகளைக் கூட
"வெளிச்சம் போட்டுக் காட்டினால்தான்" சிலர் ஏற்றுக்கொள்வோம் என்று, இக் களத்திலும் இருப்பது அவலமானது;வேதனையானது;
யாரைச் சொல்கிறேன் என்பது இணைய உரையாடல்கள்/கருத்தாடல்கள் மூலம் நற்றமிழ் சொல்லடல்கள் கண்டுணர்ந்த உங்களுக்குப் புரிந்து இருக்கும்.
நண்பர்களே,
இப் பட்டி மன்றம் நடந்து கொண்டிருப்பது
"கற்பில் சிறந்தவள் சீதையா கண்ணகியா" என்று "மணித் துளிகளால் காசளந்த களம்" அல்ல;
புலம் பெயர்ந்த இளையர் சமூகத்தினிடையே
"தொழினுட்ப பாய்ச்சலுடன்" இயைந்த நல் உறவைக் கட்டியெழுப்ப பல் பரிமானங்களோடு நற்களம் திறந்த யாழ் களம்...
இதுக்கு மேலும் "நன்மையை" விளக்க வேண்டுமா....
பாவம்,"வாழைப்பழத்தை உரித்துத் தந்தால்தான் சாப்பிடுவோம்" என அடம் பிடிக்கும் மிகச் சிலருக்காக தொடர்ந்து பார்ப்போம்....
சரி,சரி..புலம் பெயரந்த இளையர் இணையத்தால் நன்மையே பெற்றாலும்,"இல்லை இல்லை சீரழிகிறார்கள்" என்ற "தவறான கண்ணோட்டத்துடன்" இருக்கும் அன்பு உறவுகளை மதித்து, அவர்களுக்குச் "சரியான பார்வையைக் காட்ட" சமூக அக்கறையோடு காட்டும் ஊடகம் அச் சிலர் "குற்றம் சாட்டும்" இணைய ஊடகமே என்பதை அவர்கள் தங்களைத் தாங்களே "கிள்ளியேனும்" உணர்ந்து கொள்ளட்டும்.....
{இவ்வாறான கருத்தாடலை பிற ஊடகங்களில் செய்வதானால் புவியல் எல்லைகளின் வரையரை,தொடர்பாடல் செலவீனங்கள்,நேர விரயங்கள்,ஏனையோரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாமை...என பல்வேறு "சீரழிவுகளை" இணையம் என்ற ஊடகமே "சுத்தப் படுத்தி" இலாவகமாக்கிவிடுகிறது என்பதை "நடுவு நிலைமையோடு" கவனியுங்கள் எங்கள் அன்புக்குரியோரே}
"இணைய ஊடகத்தால் புலம்பெயர்ந்த இளையர் சமூகம் சீரழிகிறது" என்று வாய்கிழியப் "பயங்கரவாதக் கூச்சல் போடும்" எதிரணிப் பண்பாளர்கள்(?) தாம் தமது கருத்தைக் "கருத்துச் சுதந்திரத்துடன்" முன்வைக்கும் ஊடகம் என்ன என்பதை உங்களுக்கு "ஆமாப் போடும்' அன்பர்களிடம் கேட்டேனும் அடிக்கடி நினைவுபடுத்துங்கள்.
அத்தகு இணைய ஊடகமா புலம் பெயர்ந்த இளையரைச் சீரழிக்கிறது என்கிறீர்கள்..?
நீதியை மறைத்து அநீதியை ஏத்தும் உங்களை "அலரி மாளிகைகளும்" " றா றா" க்களும் "வரவேற்கக்கூடும்.ஆனால்,சதா "விழிப்புணர்ச்சியோடும்" அரசியல் முதிர்ச்சியோடும் இருக்கும் யாழ் கள உறவுகள் "தக்கது அறிவார்கள்"....
சரி,
இவ்வளவு உண்மைகளை முன்வைத்த பின்பும் "வெற்று வேக்காட்டு" "விதண்டா வாதங்களை" வைத்து எல்லோரது நேரங்களையும் "வன்கவர்வு" செய்யப் போகிறீர்களா...???
தனது "கருத்து" என்று சொல்லிக் கொண்டு வந்த தல{இப்படியான "அர்தமான" பெயர்களையும்,"அரிதர"(மேக்கப்) படங்களைத் தமது கருத்தாடல் பெயர்களில் போடும் "இரசனை"க்கெல்லாம் "சிந்தனைக் குருடாக்கும்" தென்னிந்திய சினிமாதான் காரணமே ஒழிய இணையம் அல்ல என்பதை "இணையம் சீரழிக்கிறது" என்று "விதண்டா வாதம்" செயும் "பண்பாளர்கள்" உணர்வார்கள்}
மேலும், வாதப் பலவீனத்தை மறைக்க
"வஞ்சப் புகழ்ச்சி"இலும் இறங்கிவிட்டார் என்பதை
எமது அணி உறுப்பினர் மீதான "தனி நபர் துதி பாடல்" காட்டுகிறது.குறிப்பாக, "சலுகைகளால்" விலை பேசும் "அவலமான துன்பியல் வரலாற்றை" தனது "வாதத்தில்"(?) ஆரம்பதிலே முன்வைத்து, தமது அணியின் தோல்விக்கான "கட்டியம்" கூறுகிறார்.
"மதவடி கலாசாரத்தை" மீளப் போட்டு "பண்பாட்டுச் சிரழிவுக்கு" ஆலாபணை செய்கிறார்....நடுவர்கள் உறவுகள் இவ்வாவறானவற்றை நுணுக்கமாக கவனிப்பார்கள் என்பதை அவர் அறியார் போலும்.சீரழிவைக் கதைக்க வந்தவராகத் தன்னை இனம் காட்டியவரே அச் சீரழிவை ஊக்குவிப்பது "அமைதி காப்பதாக சொல்லி வந்தவர்(கள்) ஆக்கிரமிப்புக்குத் துணை போவது போல" அபாய சமிக்கை காட்டுகிறது...
வெளிப் பார்வையாளராக நிற்கும் மூத்தோர்(மோகன் அண்ணா)இனைக் கூடத் தமது "விதண்டா வாதங்கள்"க்காக, அவர்து நற் பணிகளுக்குக் கூட "சாயம்" பூசும் எதிரணி நண்பர் வாதத்தை திசை திருப்புவது எமது அணியின் வெற்றியின் உறுதியை மெறுகேற்றுகிறது.
தத்தமது 'சோம்பேறித் தனங்களுக்கு" எல்லோரையும் "பொதுப்படையாக" எடுத்துக் கொள்வது சினப்பிளைத்தனம்;கருத்தாளரின் "கருத்தாடலின் சோம்பேறித்தனத்தை" காட்டுகிறது என்பதை நடுவர்களும், சிந்தனைமிக்க உறவுகளும் இனங்கண்டிருப்பார்கள் என்பது உறுதி.
"தல" அவர்கள் குழப்பியடிகிறார் என்பதற்கு மேலும் எடுத்துக்காட்டுத்தான் இணையத்தால் நேரம் விரையம் ஆகிறது என்பது.தலைகீழாய்ப் பார்த்துக் குழப்புகிறார்;குழம்புகிறார்.
இணையம் மூலம் தான் நேரம் மிகவும் சேமிக்கப் படுகிறது...எம்முடைய அறிவுப்பரப்பை விசாலப் படுத்த "அறிவுத் தேடல்" பரப்பு சர்வதேச வியாபகம் பெறுகிறது...கருத்து மயக்கம் உளவர்களைத் தெளிவு படுத்த முடிகிறது..
{தல கூறிய பல "ஊதிப் பெருப்பித்த" அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எமது சில வரிகளூடகவே பொய்ப்பிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்}
"கண்ணியம்" என்பது
"நேரத்திற்கும் இடத்திற்கும் மாறுபடும்" என்பதை உங்கள் வாதத்தின்(?) மூலம்தான் நாம் அறிந்தோம்...
அட,இவ்வளவு காலமும் எதிரணி நண்பர்களை எவ்வளவு கண்ணியமிக்கவர்களாக எண்ணியிருந்தோம்....
இதை மேலும் விளக்க எமது கண்ணியம் இடங்கொடுக்கவில்லை உறவுகளே..
ஆக மொத்தத்தில்,
வெளிப்படை உண்மையை மேலும் மேலும் "உண்மை" என்று நீருபிக்க / வாதாட வேண்டியிருப்பதை எண்ணி என்ன மேலும் சொல்ல இருக்கிறது....
என்றாலும் உண்மையை உண்மை என்றே அழுத்தி உரைக்கிறோம்....என்பதை ஆணித்தரமாகக் கூறி,
"சத்தியம் வெல்லும்" என்ற எதிர்பார்ப்புடன்,
வரவேற்ற ரசிகை மற்றும் ஏனைய உறவுகளுக்கு நன்றி கூறி,
நீதியை நம்பி விடை பெறுகிறேன்[/color].
அன்புக்குரியோரே,
சில வெளிப்படை உண்மைகளைக் கூட
"வெளிச்சம் போட்டுக் காட்டினால்தான்" சிலர் ஏற்றுக்கொள்வோம் என்று, இக் களத்திலும் இருப்பது அவலமானது;வேதனையானது;
யாரைச் சொல்கிறேன் என்பது இணைய உரையாடல்கள்/கருத்தாடல்கள் மூலம் நற்றமிழ் சொல்லடல்கள் கண்டுணர்ந்த உங்களுக்குப் புரிந்து இருக்கும்.
நண்பர்களே,
இப் பட்டி மன்றம் நடந்து கொண்டிருப்பது
"கற்பில் சிறந்தவள் சீதையா கண்ணகியா" என்று "மணித் துளிகளால் காசளந்த களம்" அல்ல;
புலம் பெயர்ந்த இளையர் சமூகத்தினிடையே
"தொழினுட்ப பாய்ச்சலுடன்" இயைந்த நல் உறவைக் கட்டியெழுப்ப பல் பரிமானங்களோடு நற்களம் திறந்த யாழ் களம்...
இதுக்கு மேலும் "நன்மையை" விளக்க வேண்டுமா....
பாவம்,"வாழைப்பழத்தை உரித்துத் தந்தால்தான் சாப்பிடுவோம்" என அடம் பிடிக்கும் மிகச் சிலருக்காக தொடர்ந்து பார்ப்போம்....
சரி,சரி..புலம் பெயரந்த இளையர் இணையத்தால் நன்மையே பெற்றாலும்,"இல்லை இல்லை சீரழிகிறார்கள்" என்ற "தவறான கண்ணோட்டத்துடன்" இருக்கும் அன்பு உறவுகளை மதித்து, அவர்களுக்குச் "சரியான பார்வையைக் காட்ட" சமூக அக்கறையோடு காட்டும் ஊடகம் அச் சிலர் "குற்றம் சாட்டும்" இணைய ஊடகமே என்பதை அவர்கள் தங்களைத் தாங்களே "கிள்ளியேனும்" உணர்ந்து கொள்ளட்டும்.....
{இவ்வாறான கருத்தாடலை பிற ஊடகங்களில் செய்வதானால் புவியல் எல்லைகளின் வரையரை,தொடர்பாடல் செலவீனங்கள்,நேர விரயங்கள்,ஏனையோரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாமை...என பல்வேறு "சீரழிவுகளை" இணையம் என்ற ஊடகமே "சுத்தப் படுத்தி" இலாவகமாக்கிவிடுகிறது என்பதை "நடுவு நிலைமையோடு" கவனியுங்கள் எங்கள் அன்புக்குரியோரே}
"இணைய ஊடகத்தால் புலம்பெயர்ந்த இளையர் சமூகம் சீரழிகிறது" என்று வாய்கிழியப் "பயங்கரவாதக் கூச்சல் போடும்" எதிரணிப் பண்பாளர்கள்(?) தாம் தமது கருத்தைக் "கருத்துச் சுதந்திரத்துடன்" முன்வைக்கும் ஊடகம் என்ன என்பதை உங்களுக்கு "ஆமாப் போடும்' அன்பர்களிடம் கேட்டேனும் அடிக்கடி நினைவுபடுத்துங்கள்.
அத்தகு இணைய ஊடகமா புலம் பெயர்ந்த இளையரைச் சீரழிக்கிறது என்கிறீர்கள்..?
நீதியை மறைத்து அநீதியை ஏத்தும் உங்களை "அலரி மாளிகைகளும்" " றா றா" க்களும் "வரவேற்கக்கூடும்.ஆனால்,சதா "விழிப்புணர்ச்சியோடும்" அரசியல் முதிர்ச்சியோடும் இருக்கும் யாழ் கள உறவுகள் "தக்கது அறிவார்கள்"....
சரி,
இவ்வளவு உண்மைகளை முன்வைத்த பின்பும் "வெற்று வேக்காட்டு" "விதண்டா வாதங்களை" வைத்து எல்லோரது நேரங்களையும் "வன்கவர்வு" செய்யப் போகிறீர்களா...???
தனது "கருத்து" என்று சொல்லிக் கொண்டு வந்த தல{இப்படியான "அர்தமான" பெயர்களையும்,"அரிதர"(மேக்கப்) படங்களைத் தமது கருத்தாடல் பெயர்களில் போடும் "இரசனை"க்கெல்லாம் "சிந்தனைக் குருடாக்கும்" தென்னிந்திய சினிமாதான் காரணமே ஒழிய இணையம் அல்ல என்பதை "இணையம் சீரழிக்கிறது" என்று "விதண்டா வாதம்" செயும் "பண்பாளர்கள்" உணர்வார்கள்}
மேலும், வாதப் பலவீனத்தை மறைக்க
"வஞ்சப் புகழ்ச்சி"இலும் இறங்கிவிட்டார் என்பதை
எமது அணி உறுப்பினர் மீதான "தனி நபர் துதி பாடல்" காட்டுகிறது.குறிப்பாக, "சலுகைகளால்" விலை பேசும் "அவலமான துன்பியல் வரலாற்றை" தனது "வாதத்தில்"(?) ஆரம்பதிலே முன்வைத்து, தமது அணியின் தோல்விக்கான "கட்டியம்" கூறுகிறார்.
"மதவடி கலாசாரத்தை" மீளப் போட்டு "பண்பாட்டுச் சிரழிவுக்கு" ஆலாபணை செய்கிறார்....நடுவர்கள் உறவுகள் இவ்வாவறானவற்றை நுணுக்கமாக கவனிப்பார்கள் என்பதை அவர் அறியார் போலும்.சீரழிவைக் கதைக்க வந்தவராகத் தன்னை இனம் காட்டியவரே அச் சீரழிவை ஊக்குவிப்பது "அமைதி காப்பதாக சொல்லி வந்தவர்(கள்) ஆக்கிரமிப்புக்குத் துணை போவது போல" அபாய சமிக்கை காட்டுகிறது...
வெளிப் பார்வையாளராக நிற்கும் மூத்தோர்(மோகன் அண்ணா)இனைக் கூடத் தமது "விதண்டா வாதங்கள்"க்காக, அவர்து நற் பணிகளுக்குக் கூட "சாயம்" பூசும் எதிரணி நண்பர் வாதத்தை திசை திருப்புவது எமது அணியின் வெற்றியின் உறுதியை மெறுகேற்றுகிறது.
தத்தமது 'சோம்பேறித் தனங்களுக்கு" எல்லோரையும் "பொதுப்படையாக" எடுத்துக் கொள்வது சினப்பிளைத்தனம்;கருத்தாளரின் "கருத்தாடலின் சோம்பேறித்தனத்தை" காட்டுகிறது என்பதை நடுவர்களும், சிந்தனைமிக்க உறவுகளும் இனங்கண்டிருப்பார்கள் என்பது உறுதி.
"தல" அவர்கள் குழப்பியடிகிறார் என்பதற்கு மேலும் எடுத்துக்காட்டுத்தான் இணையத்தால் நேரம் விரையம் ஆகிறது என்பது.தலைகீழாய்ப் பார்த்துக் குழப்புகிறார்;குழம்புகிறார்.
இணையம் மூலம் தான் நேரம் மிகவும் சேமிக்கப் படுகிறது...எம்முடைய அறிவுப்பரப்பை விசாலப் படுத்த "அறிவுத் தேடல்" பரப்பு சர்வதேச வியாபகம் பெறுகிறது...கருத்து மயக்கம் உளவர்களைத் தெளிவு படுத்த முடிகிறது..
{தல கூறிய பல "ஊதிப் பெருப்பித்த" அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எமது சில வரிகளூடகவே பொய்ப்பிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்}
"கண்ணியம்" என்பது
"நேரத்திற்கும் இடத்திற்கும் மாறுபடும்" என்பதை உங்கள் வாதத்தின்(?) மூலம்தான் நாம் அறிந்தோம்...
அட,இவ்வளவு காலமும் எதிரணி நண்பர்களை எவ்வளவு கண்ணியமிக்கவர்களாக எண்ணியிருந்தோம்....
இதை மேலும் விளக்க எமது கண்ணியம் இடங்கொடுக்கவில்லை உறவுகளே..
ஆக மொத்தத்தில்,
வெளிப்படை உண்மையை மேலும் மேலும் "உண்மை" என்று நீருபிக்க / வாதாட வேண்டியிருப்பதை எண்ணி என்ன மேலும் சொல்ல இருக்கிறது....
என்றாலும் உண்மையை உண்மை என்றே அழுத்தி உரைக்கிறோம்....என்பதை ஆணித்தரமாகக் கூறி,
"சத்தியம் வெல்லும்" என்ற எதிர்பார்ப்புடன்,
வரவேற்ற ரசிகை மற்றும் ஏனைய உறவுகளுக்கு நன்றி கூறி,
நீதியை நம்பி விடை பெறுகிறேன்[/color].
"
"
"

