01-27-2006, 07:42 AM
<b>ஜெனீவா பேச்சுக்கள்: தமிழ்க் கட்சிகள் வரவேற்பு </b>
லங்கை யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான ஜெனீவா பேச்சுக்களை தமிழ்க் கட்சிகள் வரவேற்றுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா:
நோர்வே தலைநகரில் ஓஸ்லோவில் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுதலைப் புலிகள் விட்டுக்கொடுத்து அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இப்பேச்சுகள் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் தொடங்கப்பட வேண்டும். பேச்சுக்களுக்கு முன்பாக தமிழர் தாயகத்தில் அனைத்து வடிவிலான படுகொலைகளும் நிறுத்தப்பட்டு இயல்புநிலை உருவாக்கப்பட வேண்டும்.
அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இடம்பெயர்ந்த மீளக் குடியேற உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும்.
மீனவர்களும் விவசாயிகளும் இன்னமும் தங்களது தொழிலுக்குத் திரும்ப இயலாத நிலை உள்ளது. தமிழர் தாயகத்தில் இராணுவ ஒடுக்குமுறைகள் நீடித்து வருகின்றன. 15 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிமுகாம்களில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆகையால் இந்த உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும்.
யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்து 1.8-இன் கீழ் அனைத்து துணை ஆயுதக்குழுக்களினது ஆயுதங்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். புலனாய்வுத் துறையினரது செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும் என்றார் அவர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முத்து சிவலிங்கம்:
பல ஆண்டுகளாக அமைதிப் பேச்சுகள் மீளத் தொடங்குமா என்ற கேள்வி இருந்தது. இந்த அசாதாரண நிலை முடிவுக்கு வந்துள்ளது.
இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம் இது. அனைத்துக் கட்சிகளைப் போலவே இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம்.
அமைதிப் பேச்சுகளுக்கு முன்னதாக அனைத்துப் படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், கொள்ளைச் சம்பவங்கள் நிறுத்தபட வேண்டியது அவசியம் என்றார் அவர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
லங்கை யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான ஜெனீவா பேச்சுக்களை தமிழ்க் கட்சிகள் வரவேற்றுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா:
நோர்வே தலைநகரில் ஓஸ்லோவில் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுதலைப் புலிகள் விட்டுக்கொடுத்து அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இப்பேச்சுகள் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் தொடங்கப்பட வேண்டும். பேச்சுக்களுக்கு முன்பாக தமிழர் தாயகத்தில் அனைத்து வடிவிலான படுகொலைகளும் நிறுத்தப்பட்டு இயல்புநிலை உருவாக்கப்பட வேண்டும்.
அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இடம்பெயர்ந்த மீளக் குடியேற உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும்.
மீனவர்களும் விவசாயிகளும் இன்னமும் தங்களது தொழிலுக்குத் திரும்ப இயலாத நிலை உள்ளது. தமிழர் தாயகத்தில் இராணுவ ஒடுக்குமுறைகள் நீடித்து வருகின்றன. 15 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிமுகாம்களில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆகையால் இந்த உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும்.
யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்து 1.8-இன் கீழ் அனைத்து துணை ஆயுதக்குழுக்களினது ஆயுதங்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். புலனாய்வுத் துறையினரது செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும் என்றார் அவர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முத்து சிவலிங்கம்:
பல ஆண்டுகளாக அமைதிப் பேச்சுகள் மீளத் தொடங்குமா என்ற கேள்வி இருந்தது. இந்த அசாதாரண நிலை முடிவுக்கு வந்துள்ளது.
இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம் இது. அனைத்துக் கட்சிகளைப் போலவே இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம்.
அமைதிப் பேச்சுகளுக்கு முன்னதாக அனைத்துப் படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், கொள்ளைச் சம்பவங்கள் நிறுத்தபட வேண்டியது அவசியம் என்றார் அவர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

