01-27-2006, 12:29 AM
நடுவர்கள் தமிழினி அவர்களே செல்வமுத்து அவர்களே... எமதணித் தலைவர் அவர்களுக்கும் எமது அணியினருக்கும் எனது மகிழ்ச்சியான வணக்கங்கள்... எதிரணியில் தோல்வியின் விளிம்பில் விளிபிதுங்க இருப்பவர்களுக்கும் என் அண்பான வணக்கம்......
அமெரிக்க ராணுவத்தால் தகவல் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்டு பின் வெகுசனப்பாவனைக்கு விடப்பட்ட இணையஊடகத்தால் <b>புலம் பெயர் இளைஞர்கள் நன்மைஅடைகிறார்களா அல்லது சீரளிந்து போகிறார்களா..??</b>
எதிரணித் தலைவர் இளைஞன் உழைப்பாளியாய் ஒரு கவிஞனாய் உயர்ந்த இந்த சஞ்சீவ் என்கின்ற இளையோன்... இணையத்தால் உயரவில்லை சொந்த உழைப்பால் போற்றப்படுகிறார்... என்பதுதானே உண்மை...
தலைவர் அவர்களே...! இளையோருக்கு இந்த இணையங்கள் புதிதாக ஓண்றையும் செய்துவிடவில்லை... வானொலிகளும்,தொலைக்காட்ச்சிகளிலும், பத்திரிகையிலும், நூல்நிலையங்களிலும் நாங்கள் பெற்றுக் கொண்டதை இப்போ இணையத்தில் பெறுகின்றனர்... அதனால் இளைஞருக்கு எந்தப்பயனும் இல்லை வேண்டுமானால் சோம்பேறித்தனத்தை பெற்று சீரளிக்கப் படுகிறார்கள்.......
ஆனாலும் எங்கும் அலைவதற்கு அவசியமில்லாமல் முதியவர்களிற்கு இணையம் உதவியும் செய்யலாம்.... உடல் தளர்ந்து நடமாட கடினமான முதியவர்களால் ஒரே இடத்தில் இருந்து பெறப்படும் தகவல்களானது அவர்களிற்கு உதவியும் ஆகும்...
வேண்டுமானால் இணைய ஊடக தொழில் நுட்பங்கள் ஒரு வளர்ந்த முதிர்ந்த புலம்பெயர் வியாபாரிக்கு உதவலாம், தொழில் உதவியாளருக்கு, உத்தியோகத்தர்களுக்கு அல்லது பொறியியலாளருக்கு உதவுகிறது.... அதனால் வளர்ந்துவரும் இளைஞன் பயன் அடைகிறார்களா எண்றால் இல்லை என்பதே பதிலாக வருகிறது......
<b>புலம்பெயர் நாட்டில் புலம் பெயர்ந்ததால் கணனி அறிவற்ற பெற்றோர் அல்லது இணைய அறிவில் போதிய தகமை இல்லாத பெற்றோராய் இருப்பவர்களால் பிள்ளைகளின் நடவடிக்கைகள் அறியப்படாமலேயே இருக்கிறது.... இது புலம் பெயர் இளைஞர் இணைய உலாவில் என்ன செய்கிறாய் எண்று கேள்வி கேட்கப்படாதவர்களாய் உலாவர உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..... [u]இது ஒரு கட்டாக்காலி மாட்டின் நிலைமைக்கு ஒப்பானது.... அவர்களால்(இளையோரால்) எங்கு வேண்டுமானாலும் மேயலாம்... அசைபோடலாம்.... எது வேண்டுமானாலும் செய்யலாம்....</b>
இளைஞருக்கு உதவாத அல்லது உதவுவதாய் சொல்லப்படும் இணையம்.... இளையோரை சோம்பேறிகள் ஆக்குகின்றது நடுவர் அவர்களே.....!.. ஊர் எல்லாம் திரிந்து ஆசிரியர்கள் நூல் நிலையங்கள் எல்லாம் அலைந்து பெறவேண்டிய இந்த தகவல்கள் விரல்நுணியில் பெறப்படுவதாலும்... வெட்டி ஒட்டுவதாலும்... படித்தபாடம் மனதில் நிற்பதும் இல்லை... இலகுவாய் பெற்ற தகவலின் பெறுமதி தெரிவதும் இல்லை... அதுவே அந்த இளைஞனைச் சீரளிக்கிறது... புதிதாய் அந்த இளைஞன் தன்னம்பிக்கையை வளர்க்கவில்லை இணையத்தை நம்பியே வாழ்க்கை நடாத்தி சீரளிகிறான்....!
நேரங்களைச் செலவளிக்காமல் வினாடிகளில் கல்வித்தகவல்களைப் பெற்ற மாணவர், மிகுதி நேரங்களை வீணாகச் செலவளிக்கப் புறப்படுகிறார்கள்... குறிக்கோள் இல்லாத பயணங்களை ஆரம்பிக்கிறார்கள்...... இதோடு ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்......
<b>சும்மா இருக்கும் மனமே சாத்தானின் ஊறைவிடம்...</b> எண்ற வகையில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபட வளிவகுத்தது இணையங்களே....! அவர்களைச் சீரளிக்கிறது...
தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புக்களின் முடிவில்.... மதகுகளில் இருந்து அல்லது விளையாட்டுத் திடல்களில், தோழிவீடுகளில், உறவாடி விளையாடி தங்களின் பொழுது போக்கி அளவளாவிக் கூடிக்களித்த இளைஞர் புலம் பெயர் நாட்டில் தனியான இணைய சற் ரூம் களில். காலத்தைப் போக்குகிறார்கள். மதகுகளில், தோழிவீடுகளில் இருந்த இளைஞர் பெற்ற பயன் சற்றூம்கள் தருவதில்லை அங்கு அவர்கள் பெற்ற வாழ்வாதாரத்துடன் கூடிய புரிந்துணர்வை, தலைமைப்பண்பை, நட்புணர்வை மனிதநேயத்தை, இணையங்கள் தருவதில்லை அதவிட வக்கிரங்களையே தோற்றுவிக்கிறது என்பதுதான் உண்மை. [u]நேரிடையாய் கண்ணியவானாய் இருக்கும் இளைஞர்கள் முகம் தெரியாமல் கண்ணியமாய் இருப்பதிலை என்பதை மறுக்க முடியுமா என்ன...????
எனது அணியின் உறுப்பினர் ப்ரியசகி சொன்னது போல இணையம் அந்த இளைஞருக்கு ஒரு போதைப் பொருள் ஆகிவிட்டது.... விடுபட முடியாமல் தவிக்கிறார்கள்... எப்போதும் அதன் சிந்தனையாய் அலையும் துன்பத்துக்கும் உள்ளாகிறான்... இந்த துன்பம் இனையத்தால் வந்ததே...
இது இளையசமுதாயத்தின் சீரளிவின் ஆரம்பம்தான்... இன்னும் முடியவில்லை தொடர்கிறது......
நடுவர் அவர்களே இதற்க்குமுன் எதிரணி உருப்பினர் சினேகிதி அவர்களின் வாதத்தைப் பற்றி கொஞ்சம் கேலிசெய்தேன்.... அவர் இளையோர் தாய் தந்தை எல்லாரையும் கணனி படிக்கச் சொல்லி அறிவுரை வளங்கினார் அது சாத்தியமா எண்று...! அப்போ அவர் ஒரு விடயம் கேட்டார்
<b>எதிரணி உறுப்பினர் சினேகிதியின் கூற்று:-</b> என் பெற்றோருக்கு கணனி தெரியாதுதான் ஆனால் நான் யாழுக்கு வாறதால கெட்டுப்போகேல்லத்தானே.
<b>கொட்டுப் போகவில்லை எண்று, யார் சொன்னார்கள்...... ????</b>
இராவணன் அண்ணா வெட்டிய வெட்டுக்கள் சொல்லும்..... இளையோர் கட்டுப்பாடானவர்களா எண்று... அவர்களோடு சேர்வதால் வெட்டு வாங்கிய முதியோரைக் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் இளையோரைப்பற்றி... ஆனி 29, 2005 11:50 am தொடங்கிவைக்கப்பட்டு இதுவரை 21 பக்கங்கள் தாண்டி விட்ட கருத்துக்களில் மாற்றம் பகுதி சொல்லும்... யாழில் நீங்கள் செய்யும் குழப்படிகள். ... இணையத்தில் அதுவும் யாழில் நீங்கள் யாரும் கெட்டுப்போகக் கூடாது எண்ற நல்ல நோக்கில் அமைக்கப்பட்ட மட்டுறுத்தினர்கள் சொல்வார்கள் இளையோரைக்காக்க எவ்வளவு கடினப்படுகிறோம் எண்று.....
<b>இணைய உலாவுக்காய் வரும் இளையோர் தறிகெடாமல் இருக்க தடை போட்டு மட்டுறுத்தினர்களை நிறுத்தி சீரளியாமல் தடுத்த, தடுக்கும், யாழ்கள நிறுவுனர் மோகன் அண்ணாவிற்கு எமது அணிசார்பாக நண்றிகள்....! </b>
என் அணிக்கு வலுச்சேர்க்க என்னை அழைத்த ரசிகைக்கும் உற்று நோக்கும் நடுவர்களுக்கும்... ஊக்கமளித்த என் அணியினருக்கும் நண்றி கூறி முடிக்கிறேன்.... வணக்கம்... !
அமெரிக்க ராணுவத்தால் தகவல் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்டு பின் வெகுசனப்பாவனைக்கு விடப்பட்ட இணையஊடகத்தால் <b>புலம் பெயர் இளைஞர்கள் நன்மைஅடைகிறார்களா அல்லது சீரளிந்து போகிறார்களா..??</b>
எதிரணித் தலைவர் இளைஞன் உழைப்பாளியாய் ஒரு கவிஞனாய் உயர்ந்த இந்த சஞ்சீவ் என்கின்ற இளையோன்... இணையத்தால் உயரவில்லை சொந்த உழைப்பால் போற்றப்படுகிறார்... என்பதுதானே உண்மை...
தலைவர் அவர்களே...! இளையோருக்கு இந்த இணையங்கள் புதிதாக ஓண்றையும் செய்துவிடவில்லை... வானொலிகளும்,தொலைக்காட்ச்சிகளிலும், பத்திரிகையிலும், நூல்நிலையங்களிலும் நாங்கள் பெற்றுக் கொண்டதை இப்போ இணையத்தில் பெறுகின்றனர்... அதனால் இளைஞருக்கு எந்தப்பயனும் இல்லை வேண்டுமானால் சோம்பேறித்தனத்தை பெற்று சீரளிக்கப் படுகிறார்கள்.......
ஆனாலும் எங்கும் அலைவதற்கு அவசியமில்லாமல் முதியவர்களிற்கு இணையம் உதவியும் செய்யலாம்.... உடல் தளர்ந்து நடமாட கடினமான முதியவர்களால் ஒரே இடத்தில் இருந்து பெறப்படும் தகவல்களானது அவர்களிற்கு உதவியும் ஆகும்...
வேண்டுமானால் இணைய ஊடக தொழில் நுட்பங்கள் ஒரு வளர்ந்த முதிர்ந்த புலம்பெயர் வியாபாரிக்கு உதவலாம், தொழில் உதவியாளருக்கு, உத்தியோகத்தர்களுக்கு அல்லது பொறியியலாளருக்கு உதவுகிறது.... அதனால் வளர்ந்துவரும் இளைஞன் பயன் அடைகிறார்களா எண்றால் இல்லை என்பதே பதிலாக வருகிறது......
<b>புலம்பெயர் நாட்டில் புலம் பெயர்ந்ததால் கணனி அறிவற்ற பெற்றோர் அல்லது இணைய அறிவில் போதிய தகமை இல்லாத பெற்றோராய் இருப்பவர்களால் பிள்ளைகளின் நடவடிக்கைகள் அறியப்படாமலேயே இருக்கிறது.... இது புலம் பெயர் இளைஞர் இணைய உலாவில் என்ன செய்கிறாய் எண்று கேள்வி கேட்கப்படாதவர்களாய் உலாவர உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..... [u]இது ஒரு கட்டாக்காலி மாட்டின் நிலைமைக்கு ஒப்பானது.... அவர்களால்(இளையோரால்) எங்கு வேண்டுமானாலும் மேயலாம்... அசைபோடலாம்.... எது வேண்டுமானாலும் செய்யலாம்....</b>
இளைஞருக்கு உதவாத அல்லது உதவுவதாய் சொல்லப்படும் இணையம்.... இளையோரை சோம்பேறிகள் ஆக்குகின்றது நடுவர் அவர்களே.....!.. ஊர் எல்லாம் திரிந்து ஆசிரியர்கள் நூல் நிலையங்கள் எல்லாம் அலைந்து பெறவேண்டிய இந்த தகவல்கள் விரல்நுணியில் பெறப்படுவதாலும்... வெட்டி ஒட்டுவதாலும்... படித்தபாடம் மனதில் நிற்பதும் இல்லை... இலகுவாய் பெற்ற தகவலின் பெறுமதி தெரிவதும் இல்லை... அதுவே அந்த இளைஞனைச் சீரளிக்கிறது... புதிதாய் அந்த இளைஞன் தன்னம்பிக்கையை வளர்க்கவில்லை இணையத்தை நம்பியே வாழ்க்கை நடாத்தி சீரளிகிறான்....!
நேரங்களைச் செலவளிக்காமல் வினாடிகளில் கல்வித்தகவல்களைப் பெற்ற மாணவர், மிகுதி நேரங்களை வீணாகச் செலவளிக்கப் புறப்படுகிறார்கள்... குறிக்கோள் இல்லாத பயணங்களை ஆரம்பிக்கிறார்கள்...... இதோடு ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்......
<b>சும்மா இருக்கும் மனமே சாத்தானின் ஊறைவிடம்...</b> எண்ற வகையில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபட வளிவகுத்தது இணையங்களே....! அவர்களைச் சீரளிக்கிறது...
தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புக்களின் முடிவில்.... மதகுகளில் இருந்து அல்லது விளையாட்டுத் திடல்களில், தோழிவீடுகளில், உறவாடி விளையாடி தங்களின் பொழுது போக்கி அளவளாவிக் கூடிக்களித்த இளைஞர் புலம் பெயர் நாட்டில் தனியான இணைய சற் ரூம் களில். காலத்தைப் போக்குகிறார்கள். மதகுகளில், தோழிவீடுகளில் இருந்த இளைஞர் பெற்ற பயன் சற்றூம்கள் தருவதில்லை அங்கு அவர்கள் பெற்ற வாழ்வாதாரத்துடன் கூடிய புரிந்துணர்வை, தலைமைப்பண்பை, நட்புணர்வை மனிதநேயத்தை, இணையங்கள் தருவதில்லை அதவிட வக்கிரங்களையே தோற்றுவிக்கிறது என்பதுதான் உண்மை. [u]நேரிடையாய் கண்ணியவானாய் இருக்கும் இளைஞர்கள் முகம் தெரியாமல் கண்ணியமாய் இருப்பதிலை என்பதை மறுக்க முடியுமா என்ன...????
எனது அணியின் உறுப்பினர் ப்ரியசகி சொன்னது போல இணையம் அந்த இளைஞருக்கு ஒரு போதைப் பொருள் ஆகிவிட்டது.... விடுபட முடியாமல் தவிக்கிறார்கள்... எப்போதும் அதன் சிந்தனையாய் அலையும் துன்பத்துக்கும் உள்ளாகிறான்... இந்த துன்பம் இனையத்தால் வந்ததே...
இது இளையசமுதாயத்தின் சீரளிவின் ஆரம்பம்தான்... இன்னும் முடியவில்லை தொடர்கிறது......
நடுவர் அவர்களே இதற்க்குமுன் எதிரணி உருப்பினர் சினேகிதி அவர்களின் வாதத்தைப் பற்றி கொஞ்சம் கேலிசெய்தேன்.... அவர் இளையோர் தாய் தந்தை எல்லாரையும் கணனி படிக்கச் சொல்லி அறிவுரை வளங்கினார் அது சாத்தியமா எண்று...! அப்போ அவர் ஒரு விடயம் கேட்டார்
<b>எதிரணி உறுப்பினர் சினேகிதியின் கூற்று:-</b> என் பெற்றோருக்கு கணனி தெரியாதுதான் ஆனால் நான் யாழுக்கு வாறதால கெட்டுப்போகேல்லத்தானே.
<b>கொட்டுப் போகவில்லை எண்று, யார் சொன்னார்கள்...... ????</b>
இராவணன் அண்ணா வெட்டிய வெட்டுக்கள் சொல்லும்..... இளையோர் கட்டுப்பாடானவர்களா எண்று... அவர்களோடு சேர்வதால் வெட்டு வாங்கிய முதியோரைக் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் இளையோரைப்பற்றி... ஆனி 29, 2005 11:50 am தொடங்கிவைக்கப்பட்டு இதுவரை 21 பக்கங்கள் தாண்டி விட்ட கருத்துக்களில் மாற்றம் பகுதி சொல்லும்... யாழில் நீங்கள் செய்யும் குழப்படிகள். ... இணையத்தில் அதுவும் யாழில் நீங்கள் யாரும் கெட்டுப்போகக் கூடாது எண்ற நல்ல நோக்கில் அமைக்கப்பட்ட மட்டுறுத்தினர்கள் சொல்வார்கள் இளையோரைக்காக்க எவ்வளவு கடினப்படுகிறோம் எண்று.....
<b>இணைய உலாவுக்காய் வரும் இளையோர் தறிகெடாமல் இருக்க தடை போட்டு மட்டுறுத்தினர்களை நிறுத்தி சீரளியாமல் தடுத்த, தடுக்கும், யாழ்கள நிறுவுனர் மோகன் அண்ணாவிற்கு எமது அணிசார்பாக நண்றிகள்....! </b>
என் அணிக்கு வலுச்சேர்க்க என்னை அழைத்த ரசிகைக்கும் உற்று நோக்கும் நடுவர்களுக்கும்... ஊக்கமளித்த என் அணியினருக்கும் நண்றி கூறி முடிக்கிறேன்.... வணக்கம்... !
::

