Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்
#10
பேச்சுவார்த்தையின் முன்
தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கும், நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பில் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கும், சுவிற்சர்லாந்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளை நீக்க புலிகள் இயக்கம் தன்னாலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது என்றே கூறலாம். அதாவது, விடுதலைப் புலிகள் இயக்கம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டதினால் பேச்சுக்கள் ஆரம்ப மாவதற்குரிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதெனலாம்.

ஆனால், நேற்றைய சந்திப்பில் விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்பதாகவும், பேச்சுவார்த்தையின் போதும் ஆட்சியாளர்கள் கைக்கொள்ள வேண்டியதான சில நடவடிக்கைகளே பேச்சுவார்த்தையைத் தீர்மானிக்கும் என்பதை தெளிவாகவே சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது, தமிழர் தாயகத்தில் சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பாலும், ஒட்டுக்குழுக்களாலும் நிகழ்த்தப்படும் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது இதில் முதன்மையானதாகும். வேறுவிதமாகக் கூறுவதானால், விடுதலைப் புலிகள் இயக்கம் விட்டுக்கொடுப்புடன் பேச்சுவார்த்தைகளை சுவிஸில் நடத்த முன்வந்துள்ளமைக்கே தமிழ் மக்கள் மீதான அராஜகம் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

மறுவளமாகக் கூறுவதானால், தமிழர் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெறும் என்பதே புலிகளின் நிலைப்பாடாகும். அதனை அரசாங்கத் தரப்பு உடனடியாக - அதாவது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்து அரசாங்கத் தரப்புக்கு எரிக் சூல்ஹெய்ம் தெரிவிக்கும் வேளையில் இருந்து உடனடியாக தெளிவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படாதுவிட்டால் சமாதானப் பேச்சு வார்த்தைகள் என்பது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குரியதே.

அதாவது, தமிழர் தாயகத்தில் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்பது எரிக் சூல்ஹெய்ம் மூலமாகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டதொன்றாகியுள்ளது. இதனைத் தடுக்க மகிந்த ராஜபக்ஷ உறுதியுடன் மேற்கொள்ளாத வரை சமாதானப் பேச்சுக்கள் சாத்தியமாகமாட்டாது.

இதற்கு அடுத்ததாக, சுவிற்ஸசர்லாந்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படினும், பேச்சுவார்த்தையில் யுத்த நிறுத்த உடன்பாட்டின் விதிகள் அமுலாக்கமே பேசப்படும் விடயமாக இருக்கும் என்பதையும் விடுதலைப்புலிகள் வலியுறுத்தியுள்ளனர். அதாவது, போர் நிறுத்தத்தை அமுலாக்க அரசாங்கம் தவறியமையே இன்றைய நிலைக்குக் காரணம் என்பது புலிகளின் உறுதியான நிலைப்பாடாகும்.

ஆனால், போர் நிறுத்த உடன்பாடு சீராக அமுல்படுத்தப்படுதல் வேண்டும் என்பது விடுதலைப் புலிகளால் தற்பொழுதுதான் வலியுறுத்தப்படும் ஒன்றல்ல. யுத்த நிறுத்த உடன்பாடு மிகவும் நெருக்கடியானதொரு கட்டத்தை அடைந்ததற்கு யுத்தநிறுத்த உடன்பாட்டு அமுலாக்கம் அரசால் சீராகச் செய்யப்படாமையே காரணம் என்பது உலகின் பொதுவான அபிப்பிராயமாகும்.

அதிலும் குறிப்பாக, போர் நிறுத்த உடன்பாட்டு விதிகளின்படி ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு, அவர்கள் வடக்கு-கிழக்கிற்கு வெளியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற விதி அமுல் செய்யப்படாமையே யுத்த நிறுத்த உடன்பாடு கேள்விக்குறியாகியமைக்குக் காரணம் என்பது வெளிப்படையானது.

இதனைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து மேற்குலக நாடுகள் வரை உணர்ந்திருந்தன. இதன் காரணமாகவே அவை ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் எனவும், அவர்களை வடக்கு-கிழக்கில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வற்புறுத்தியிருந்தன. அதாவது, அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன.

ஆகையினால், விடுதலைப்புலிகளுக்கும், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை அரசாங் கத்தின் நடவடிக்கைகளே தீர்மானிப்பவையாக இருக்கும். ஒரு புறத்தில் இனப்படுகொலையை நடத்திக்கொண்டும் இன்னொரு புறத்தில் யுத்த நிறுத்த உடன்பாட்டை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கையில் பேச்சு வார்த்தைகள் சாத்தியமாகப்போவதில்லை. அதிலும் குறிப்பாக பேச்சுவார்த்தை என்பது இனப்படுகொலைகள் நிறுத்தப்படுவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனின் மிகையாகாது.

நன்றி: ஈழநாதம்

http://www.tamilnaatham.com/editorial/eela...2006_JAN/26.htm
! ! !!
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 02:40 AM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 02:57 AM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:22 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:23 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:27 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:28 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 09:09 PM
[No subject] - by DV THAMILAN - 01-26-2006, 09:39 PM
[No subject] - by DV THAMILAN - 01-26-2006, 09:42 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:40 AM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:42 AM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 08:03 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 04:53 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 04:55 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 05:19 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 05:21 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 06:07 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 06:13 AM
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 01:29 AM
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 08:49 AM
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 08:50 AM
[No subject] - by MUGATHTHAR - 01-29-2006, 10:54 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 07:23 AM
[No subject] - by MUGATHTHAR - 01-30-2006, 07:31 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 08:46 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 08:52 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 08:02 AM
[No subject] - by மேகநாதன் - 02-01-2006, 08:05 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:26 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 11:50 PM
[No subject] - by மேகநாதன் - 02-03-2006, 07:45 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 01:36 PM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 10:43 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 08:18 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:41 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:07 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:18 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:25 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:33 AM
[No subject] - by Shankarlaal - 02-07-2006, 09:33 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:44 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:31 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:33 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:35 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:38 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:40 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 08:23 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:46 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:58 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 08:37 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 08:39 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 04:49 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 04:55 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 04:59 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 05:30 AM
[No subject] - by malu - 02-10-2006, 06:14 AM
[No subject] - by மேகநாதன் - 02-12-2006, 06:07 AM
[No subject] - by மேகநாதன் - 02-12-2006, 06:10 AM
[No subject] - by MUGATHTHAR - 02-12-2006, 11:50 AM
[No subject] - by Niththila - 02-12-2006, 12:03 PM
[No subject] - by I.V.Sasi - 02-12-2006, 01:21 PM
[No subject] - by MUGATHTHAR - 02-14-2006, 10:43 AM
[No subject] - by sinnakuddy - 02-15-2006, 12:50 PM
[No subject] - by paandiyan - 02-16-2006, 03:46 AM
[No subject] - by I.V.Sasi - 02-17-2006, 12:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)