01-26-2006, 09:39 PM
சிறீலங்கா அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற இருப்பதையிட்டு சுவிஸர்லாந்து மகிழ்வடைவதுடன் இரண்டு தரப்பினரும் ஜெனிவாவில் பேசுவதாக முடிவெடுத்ததையிட்டு அவர்களை வரவேற்பதாகவும் சுவிஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நோர்வேயின் அனுசரணைப்பணிகளை வெகுவாக பராட்டியுள்ள சுவிஸர்லாந்து அரசாங்கம், நோர்வே அனுசரணையின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகின்றமைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை சுவிஸ் அரசு இலங்கை மக்களுக்கு சுபீட்சமான வாழ்வு கிடைக்க முழுமையாக ஒத்துழைக்கும் எனவும், அதேவேளை மனித உரிமைகள், அபிவிருத்திகள் என்பவற்றுக்கு உதவ தாம் பின்னிற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நோர்வேயின் அனுசரணைப்பணிகளை வெகுவாக பராட்டியுள்ள சுவிஸர்லாந்து அரசாங்கம், நோர்வே அனுசரணையின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகின்றமைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை சுவிஸ் அரசு இலங்கை மக்களுக்கு சுபீட்சமான வாழ்வு கிடைக்க முழுமையாக ஒத்துழைக்கும் எனவும், அதேவேளை மனித உரிமைகள், அபிவிருத்திகள் என்பவற்றுக்கு உதவ தாம் பின்னிற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
! ! !!

