01-26-2006, 08:27 PM
<b>ஜெனீவாவில் பேச்சு: சுவிஸ் அரசாங்கம் வரவேற்பு </b>
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுக்கள் சுவிசின் ஜெனீவாவில் நடத்தப்படுவதை சுவிஸ் அரசாங்கம் வரவேற்றுள்ளது.
சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தப் பேச்சுக்களை சுவிசில் நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்த முடிவை சுவிஸ் அரசாங்கம் வரவேற்கிறது. தற்போதைய பிரச்சனைகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோர்வே மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தப் பேச்சுக்கள் விரைவில் நடைபெறவும் சுவிஸ் அரசாங்கம் முழுமையான ஆதரவளிக்கும்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் கடந்த 2 மாதங்களில் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் அதிகரித்து நிலைமை மோசமடைந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதின் மூலம் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் முறிவடைந்துள்ள அமைதிப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படக் கூடும்.
நோர்வே அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகளை சுவிஸ் அரசாங்கம் ஆதரிக்கிறது. ஆதலால்தான் சுவிஸ் நாட்டில் பேச்சுகளை நடத்தலாம் என்று நோர்வே தானாகவே அறிவித்தது. அமைதி முயற்சிகளில் சுவிஸ் அரசாங்கம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் இலங்கையில் மேற்கொள்ளப்படவும் இது நல்ல சந்தர்ப்பம் என்றும் சுவிஸ் அரசாங்கத்தினது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுக்கள் சுவிசின் ஜெனீவாவில் நடத்தப்படுவதை சுவிஸ் அரசாங்கம் வரவேற்றுள்ளது.
சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தப் பேச்சுக்களை சுவிசில் நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்த முடிவை சுவிஸ் அரசாங்கம் வரவேற்கிறது. தற்போதைய பிரச்சனைகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோர்வே மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தப் பேச்சுக்கள் விரைவில் நடைபெறவும் சுவிஸ் அரசாங்கம் முழுமையான ஆதரவளிக்கும்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் கடந்த 2 மாதங்களில் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் அதிகரித்து நிலைமை மோசமடைந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதின் மூலம் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் முறிவடைந்துள்ள அமைதிப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படக் கூடும்.
நோர்வே அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகளை சுவிஸ் அரசாங்கம் ஆதரிக்கிறது. ஆதலால்தான் சுவிஸ் நாட்டில் பேச்சுகளை நடத்தலாம் என்று நோர்வே தானாகவே அறிவித்தது. அமைதி முயற்சிகளில் சுவிஸ் அரசாங்கம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் இலங்கையில் மேற்கொள்ளப்படவும் இது நல்ல சந்தர்ப்பம் என்றும் சுவிஸ் அரசாங்கத்தினது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

