01-26-2006, 08:23 PM
<b>இரண்டு தரப்பும் பேச்சுக்கு இணங்கியதற்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரும் வரவேற்பு!</b>
தமிழீழ விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்கா அரசாங்கமும், போர்நிறுத்த உடன்பாடு தொடர்பா க பேச்சுகளை நடத்த முன்வந்ததை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்ரீலங்காவுக்கான போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில்,
பேச்சுகளை நடத்த தமிழீழ விடுதலைப்புலிகளும், ஸ்ரீ லங்கா அரசாங்கமும் முன்வந்துள்ளதையிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்றே நாம் வலியுறுத்தி வந்தோம். பேச்சுகள் அரம்பிக்காது விடின் மீண்டும் ஓர் போர் வெடிக்கும் என்பது பெரும் உண்மையே. எனினும் தற்போது இரண்டு தரப்பினரும் பேச்சுக்களுக்கு உடன்பட்டிருப்பது சகல தரப்பினருக்கும் மன ஆறுதலை அளிக்கின்றது.
எனினும் இதற்கு மேலும் பல்வேறு விடயங்களை இரண்டு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு மிகவும் பொறுமை காக்கவேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
தமிழீழ விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்கா அரசாங்கமும், போர்நிறுத்த உடன்பாடு தொடர்பா க பேச்சுகளை நடத்த முன்வந்ததை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்ரீலங்காவுக்கான போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில்,
பேச்சுகளை நடத்த தமிழீழ விடுதலைப்புலிகளும், ஸ்ரீ லங்கா அரசாங்கமும் முன்வந்துள்ளதையிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்றே நாம் வலியுறுத்தி வந்தோம். பேச்சுகள் அரம்பிக்காது விடின் மீண்டும் ஓர் போர் வெடிக்கும் என்பது பெரும் உண்மையே. எனினும் தற்போது இரண்டு தரப்பினரும் பேச்சுக்களுக்கு உடன்பட்டிருப்பது சகல தரப்பினருக்கும் மன ஆறுதலை அளிக்கின்றது.
எனினும் இதற்கு மேலும் பல்வேறு விடயங்களை இரண்டு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு மிகவும் பொறுமை காக்கவேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

