01-26-2006, 08:22 PM
<b>ஜெனீவா பேச்சுக்களைத் தவறவிட்டால் அதன்பிறகு பேச்சுக்கள் சாத்தியமேயில்லை - மத்தியகிழக்கு ஊடகம் </b>
நோர்வே ஏற்பாட்டாளரின் அணுசரணையில் ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையை மத்திய கிழக்கின் முதன்மை ஆங்கில இதழான அரப் நியூஸ் வரவேற்று அசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்தி;ற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது வரவேற்ககூடியது ஆனாலும் அது இலகுவில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயமல்ல.
கடந்த ஒரு மாதக்காலப்பகுதியில் நூறுக்கும் அதிகமான படைத்தரப்பினரும் அதேநேரம் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திய நிலையிலேயெ தற்சமயம் ஜெனீவா செல்ல இணங்கியுள்ளனர். படையினருக்கு எதிரான தாக்குதல்களை தாம் நடத்தவில்லை மக்கள் படையினரே நடத்துவதாக தமிழிழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் அரசாங்கத்திற்கு தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சர்வதேச அழுத்தத்தை பிரயோகிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.. இவ்வாறான நிலையிலேயே நோர்வேயின் சமாதான தூதர் எரிக்சொல்ஹெய்ம் சமாதான பணியாற்ற வேண்டியுள்ளது.
எனவே அவரை யாரும் குற்றம் கூறமுடியாது. ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இனி ஒருதடவை இரண்டு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு உடன்படவைப்பது இயலாத காரியமாகும் எனத் தெரிவித்துள்ள அரப் நியூஸ் ஊடக இதழ் தமிழிழ விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் ஒருமித்த கருத்து ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இரண்டு தரப்பில் எந்த தரப்பும் போர் ஒன்றில் வெற்றிபெறப்போவதில்லை என்றும் மத்திய கிழக்கின் முதன்மை ஆங்கில இதழான அரப் நியூஸ் எதிர்வுகூறியுள்ளது
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>[/b]
நோர்வே ஏற்பாட்டாளரின் அணுசரணையில் ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையை மத்திய கிழக்கின் முதன்மை ஆங்கில இதழான அரப் நியூஸ் வரவேற்று அசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்தி;ற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது வரவேற்ககூடியது ஆனாலும் அது இலகுவில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயமல்ல.
கடந்த ஒரு மாதக்காலப்பகுதியில் நூறுக்கும் அதிகமான படைத்தரப்பினரும் அதேநேரம் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திய நிலையிலேயெ தற்சமயம் ஜெனீவா செல்ல இணங்கியுள்ளனர். படையினருக்கு எதிரான தாக்குதல்களை தாம் நடத்தவில்லை மக்கள் படையினரே நடத்துவதாக தமிழிழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் அரசாங்கத்திற்கு தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சர்வதேச அழுத்தத்தை பிரயோகிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.. இவ்வாறான நிலையிலேயே நோர்வேயின் சமாதான தூதர் எரிக்சொல்ஹெய்ம் சமாதான பணியாற்ற வேண்டியுள்ளது.
எனவே அவரை யாரும் குற்றம் கூறமுடியாது. ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இனி ஒருதடவை இரண்டு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு உடன்படவைப்பது இயலாத காரியமாகும் எனத் தெரிவித்துள்ள அரப் நியூஸ் ஊடக இதழ் தமிழிழ விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் ஒருமித்த கருத்து ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இரண்டு தரப்பில் எந்த தரப்பும் போர் ஒன்றில் வெற்றிபெறப்போவதில்லை என்றும் மத்திய கிழக்கின் முதன்மை ஆங்கில இதழான அரப் நியூஸ் எதிர்வுகூறியுள்ளது
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>[/b]
"
"
"

