01-26-2006, 02:57 AM
<b>விடுதலைப் புலிகளின் முடிவை ஸ்ரீலங்கா அரசாங்கம் முழுமனத்துடன் வரவேற்கின்றதாம் - நிமால் சிறிபால டி சில்வா </b>
சமாதான முன்னெடுப்பு பேச்சுக்களை சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடத்துவதென்ற அரசாங்கத்தின் முன்மொழிவினை தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளதை அரசாங்கம் முழுமனதுடன் வரவேற்கின்றது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நிமால் சிறிபாத டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேநேரம் சமாதானப் பேச்சுக்களை உடனடியாக காலதாமதமின்றி தொடங்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும். தற்போதைய சூழ்நிலையில் சமாதான முன்னெடுப்புகள் விரைவாக முன்னெடுக்கவேண்டிய தேவை நாட்டுக்கு எற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே நேரம் முன்னதாக நோர்வே நாட்டின் அபிவிருத்தி அமைச்சரும், சிறப்புத் தூதவருமான எரிக் சொல்ஹெய்மை அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ சந்தித்துப் பேசியபோதே அவர் ஜெனிவாவில் சமாதான பேச்சகளை அரம்பிக்கலாம் என தெரிவித்ததாகவும் அதனைத் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசு தலைவர் செயலகத்தில நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டிலேயே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத்தெரிவித்துள்ளார்
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
சமாதான முன்னெடுப்பு பேச்சுக்களை சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடத்துவதென்ற அரசாங்கத்தின் முன்மொழிவினை தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளதை அரசாங்கம் முழுமனதுடன் வரவேற்கின்றது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நிமால் சிறிபாத டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேநேரம் சமாதானப் பேச்சுக்களை உடனடியாக காலதாமதமின்றி தொடங்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும். தற்போதைய சூழ்நிலையில் சமாதான முன்னெடுப்புகள் விரைவாக முன்னெடுக்கவேண்டிய தேவை நாட்டுக்கு எற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே நேரம் முன்னதாக நோர்வே நாட்டின் அபிவிருத்தி அமைச்சரும், சிறப்புத் தூதவருமான எரிக் சொல்ஹெய்மை அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ சந்தித்துப் பேசியபோதே அவர் ஜெனிவாவில் சமாதான பேச்சகளை அரம்பிக்கலாம் என தெரிவித்ததாகவும் அதனைத் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசு தலைவர் செயலகத்தில நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டிலேயே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத்தெரிவித்துள்ளார்
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

