01-26-2006, 02:40 AM
<b>ஜெனீவாவில் பேச்சுக்களை ஏற்கிறோம்: மகிந்த ராஜபக்ச </b>
யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுக்களை சுவிஸ் ஜெனீவாவில் நடத்துவதை நாம் ஏற்கிறோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த பிறகு மகிந்த ராஜபக்சவை சந்தித்த நோர்வே எரிக் சொல்ஹெய்ம், புலிகளின் நிலைப்பாட்டை விளக்கினார்.
எரிக் சொல்ஹெய்முடனான சந்திப்புக்குப் பின்னர் சர்வதேச செய்தி ஸ்தாபனமான ஏ.பி. நிறுவனத்துக்கு மகிந்த அளித்த நேர்காணலில், பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்காக தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனையை நாம் ஏற்கிறோம் என்றார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய எரிக் சொல்ஹெய்ம், தற்போதைய சிக்கலான நிலைமைகளை இருதரப்பினரும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் சுவிஸ் அரசாங்கத்துடனான ஆலோசனைகளுக்குப் பின்னர் பேச்சுகளுக்கான நாள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
மகிந்தவுடனான எரிக் சொல்ஹெய்மின் நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் அரசாங்கப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:
நோர்வேயின் முயற்சியில் தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினர் விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்கான எமது நகர்வுகளுக்கு ஆதரவளித்தனர்.
இலங்கை மக்களுக்கு தற்போது பாரிய நிம்மதி ஏற்பட்டுள்ளது. படுகொலைகள் தற்போது நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. அமைதி முயற்சிகள் தற்போது சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றன.
முதல் கட்டப் பேச்சுகளில் யுத்த நிறுத்த அமலாக்கம் தொடர்பாகவும் படுகொலைகளை நிறுத்துதல் தொடர்பாகவும் விவாதிக்கப்படும். பேச்சுக்கான இடத்தையும் நாளையும் சுவிஸ் அரசுடனான ஆலோசனைக்குப் பின்னர் நோர்வே வெளியிடும் என்றார் நிமல சிறிபால டி சில்வா.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுக்களை சுவிஸ் ஜெனீவாவில் நடத்துவதை நாம் ஏற்கிறோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த பிறகு மகிந்த ராஜபக்சவை சந்தித்த நோர்வே எரிக் சொல்ஹெய்ம், புலிகளின் நிலைப்பாட்டை விளக்கினார்.
எரிக் சொல்ஹெய்முடனான சந்திப்புக்குப் பின்னர் சர்வதேச செய்தி ஸ்தாபனமான ஏ.பி. நிறுவனத்துக்கு மகிந்த அளித்த நேர்காணலில், பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்காக தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனையை நாம் ஏற்கிறோம் என்றார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய எரிக் சொல்ஹெய்ம், தற்போதைய சிக்கலான நிலைமைகளை இருதரப்பினரும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் சுவிஸ் அரசாங்கத்துடனான ஆலோசனைகளுக்குப் பின்னர் பேச்சுகளுக்கான நாள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
மகிந்தவுடனான எரிக் சொல்ஹெய்மின் நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் அரசாங்கப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:
நோர்வேயின் முயற்சியில் தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினர் விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்கான எமது நகர்வுகளுக்கு ஆதரவளித்தனர்.
இலங்கை மக்களுக்கு தற்போது பாரிய நிம்மதி ஏற்பட்டுள்ளது. படுகொலைகள் தற்போது நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. அமைதி முயற்சிகள் தற்போது சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றன.
முதல் கட்டப் பேச்சுகளில் யுத்த நிறுத்த அமலாக்கம் தொடர்பாகவும் படுகொலைகளை நிறுத்துதல் தொடர்பாகவும் விவாதிக்கப்படும். பேச்சுக்கான இடத்தையும் நாளையும் சுவிஸ் அரசுடனான ஆலோசனைக்குப் பின்னர் நோர்வே வெளியிடும் என்றார் நிமல சிறிபால டி சில்வா.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

