01-26-2006, 02:37 AM
<b>மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்: ஐ.நா. செயலாளர் நாயகம் வரவேற்பு </b>
இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்கப்படுவதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோபி அனான் வரவேற்றுள்ளார்.
நியூயோர்க்கில் கோபி அனானின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜர்ரிக் வெளியிட்ட அறிக்கை:
நோர்வே அரசாங்கத்தின் முயற்சியால் பெப்ரவரி மத்தியில் இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்க உள்ளன. 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்பு நடத்தப்படுகிற முதலாவது நேரடிப் பேச்சுக்கள் இவை.
தற்போது மேற்கொள்ளப்படும் விரைவான அமைதி முயற்சிகள் இலங்கையின் வடக்கு - கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் முழு அளவில் செயற்படுத்தப்படும்.
இலங்கையின் அமைதித் தீர்வு ஏற்படும் என்ற புதிய நம்பிக்கை அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கோபி அனான் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்கப்படுவதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோபி அனான் வரவேற்றுள்ளார்.
நியூயோர்க்கில் கோபி அனானின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜர்ரிக் வெளியிட்ட அறிக்கை:
நோர்வே அரசாங்கத்தின் முயற்சியால் பெப்ரவரி மத்தியில் இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்க உள்ளன. 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்பு நடத்தப்படுகிற முதலாவது நேரடிப் பேச்சுக்கள் இவை.
தற்போது மேற்கொள்ளப்படும் விரைவான அமைதி முயற்சிகள் இலங்கையின் வடக்கு - கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் முழு அளவில் செயற்படுத்தப்படும்.
இலங்கையின் அமைதித் தீர்வு ஏற்படும் என்ற புதிய நம்பிக்கை அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கோபி அனான் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

