01-25-2006, 02:33 PM
இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனது அணிக்காக பல அரிய கருத்துக்களை வைத்துச்சொன்ற ஈஸ்வர்.. சீரழிவுகளை புரியாத(அறியாத) அப்பாவிகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கூறிச்செல்கிறார். தனது காலத்து அனுபவங்கள் பலவற்றையும் பகிர்ந்து செல்கிறார். எங்கே பார்ப்போமே...
உண்மை செருப்புப்போட்டு வீதியில் இறங்கமுதல் பொய் பல்லக்கில் ஏறி ஊரையே சுற்றி வந்துவிடும் என்று
கூறிச்செல்கிறார். கடைசியாய் வெளியுலகம் காணப்போவது உண்மையைத்தானே ஈஸ்வர்..?? :wink:
உலகத்து மக்களை இருவகையாகப்பிரிக்கும் ஈஸ்வர்..
1) தாங்கள் சீரழிகிறோம் என்பது கூடத்தெரியாமல் சீரழிந்து கொண்டிருப்பவர்கள்.
2) தங்களுக்கு சீரழிவு வருவதை புரிந்து கொண்டு சுதாகரித்துக்கொள்பவர்கள்
என்கிறார்.. அப்ப தாம் சீரழிகிறோம் என்று தெரிந்தும் சீரழிபவர்கள் உலகத்தில் இல்லையா என்ன..??
மனக்கட்டுப்பாடு இருந்தா சீரழியாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற கேள்வியை எழுப்புகிறார் ஈஸ்வர்.. பெரியவர்களே மனக்கட்டுப்பாடு இல்லாமல் அல்லாடிக்கிடக்கிறோம் இதில்
இளைஞருக்கு எப்படி இருக்கும் என்று கேட்கிறார்..?? எங்கே பார்ப்போம் எதிரணியினர் என்ன பதில் வைக்கிறார்கள் என்று.
மனம் ஒரு குரங்கு அனுபவப்பட்ட பெரியவர்களே அதை அடக்கமுடியாமல் திண்டாடுறார்கள். இளையோரால்
முடியுமா என்று கேட்கிறார்..?? எங்கே எடுத்துவிடுங்கள் உங்கள் பதிலை எதிரணியினர்.
எதிரணியில் இருப்பவர்களில் ஓரீருவரைத்தவிர மற்றவர்கள் இளையோரே அது தான் அவர்களுக்கு தாங்கள் சீரழிந்து கொண்டிருப்பது தெரியவில்லை என்கிறார். அவர்களது நலன்களில் அக்கறை உள்ள ஈஸ்வர் கவலைப்படுகிறாராம்.. இளையோரை அந்தப்பாட்டன் உங்களுக்காக கவலைப்படுகிறார் ஒரு கணம் செவி சாயுங்களேன்.
பாத்துப்பாத்து ஈஸ்வர்.. இந்தக்காலத்தில புத்திமதியை எல்லாம் நம் இளையோர் எங்க கேக்கிறாங்க..?? :wink:
உலகத்தில் பகுத்தறிவு கொண்ட மிருகம் மனிதன் தான் என்று சொல்லும் ஈஸ்வர்.. இங்கு எத்தனைபேர் ஒரு
விடையத்தை அலசி ஆராய்ந்து சரியான முடிவை எடுக்கிறீர்கள்...? என்று கேள்வியை எழுப்பியதோடு.. நாம்
எடுத்த முடிவு பிழையென பின்னர் வருந்தாதவர் யாராவது இருக்கிறீர்களா என்ற கேள்வியையும் எழுப்புகிறார்..
யாராவது இருக்கிறீர்களா..?? ஒரு தடவையேனும் பிழையான முடிவு எடுக்காதவர்கள் இருக்கிறீர்களா??
ம் இல்லாத்தையும் விட.. பட்டிமன்றத்தில் ஈஸ்வர் விதி என்ற ஒரு விதியை வேறு உருவாக்கிச் செல்கிறார். அதாவது "கவரும் தன்மை கொண்ட பொருள் எப்போதுமே தனக்குள் மறைமுகமாக பொறிகளைக்கொண்டிருக்கும்" என்று
கூறுகிறார். இதை ஏற்கனவே யாரும் சொல்லியிருக்காவிட்டால் யாழ் சார்பாக.. அறிமுகப்படுத்திவிடுவம். :wink:
அந்த விதியை நிறுவுவதற்கு பல உதாரணத்தை காட்டமுடியும் என்று கூறும் ஈஸ்வர். அந்த மறைமுக பொறியிற்குள் மாட்டிக்கொண்டு நாம் இழப்பது எதுவாகவும் இருக்கலாம் நேரம், பணம், பொருள், ஆரோக்கியம், உடல். ஏன் உயிரைக்கூட என்று கூறிச்செல்கிறார். என்ன சொல்கிறார்கள் எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்.. ஏதாவது ஒருவகையிலாவது இந்த பொறியிற் சிக்கியிருக்கிறீர்களா..??
எதிரணியினர் பலரும் வைத்த கருத்தின் சாராம்சத்தை நோக்க வெளிக்கிட்ட ஈஸ்வர். அவர்கள் இணையத்தின்
பலாபலன்களை பக்கம் பக்கமாய் கூறியிருக்கிறார்கள் என்கிறார். இந்த பலாபலன்களிற்குள் கிடக்கின்ற சீரழிவுகளை புரிய மறுக்கிறார்கள் எதிரணியினர் என்று கவலைப்படிற மாதிரியிருக்கு. இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்கிறார்.. இணையத்தின் பலன்களை வைத்துச் சென்றவர்கள். புலம் பெயர் வாழ் இளையோருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை பட்டியல் இட மறந்துவிட்டார்கள் என்கிறார்.. எங்கே தகுந்த விளக்கம் கொடுக்கிறார்களா எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்... அந்த பலா பலன்கள் தமிழ் இளையோருக்கு
பொருந்தாதா என்ன..? அப்படி என்று கேக்கிறாங்க எதிரணியினர்.
இணையத்தின் பயன்கள் பலவற்றை தானும் எடுத்து விட முடியும்.. என்று கூறி பல நன்மைகளை எடுத்து
விட்டிருக்கிறார். கழிப்பறைக்கு மட்டும் கதிரையை விட்டு எழுந்தால் போதும். அதுவும் மடிக்கணணி வைத்திருந்தால்
அங்கும் கூட இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறி.. நன்மைகளை சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த நன்மைகளால் இளையோருக்கு கிடைக்காது போகும் பலவற்றையும் விளக்கியிருக்கிறார்..
இணையக்காதலில் காதலுக்காய் அலையும் சுகம் உண்டா..?? என்று கேட்கிறார். துணையை பத்திரமாய் வீடு
சேர்க்க வழி உண்டா கேட்கிறார். இந்த நாடுகளில தான் உந்த பிளாக் கற் வேலை அவசியம்.. :wink:
இணையத்தில் நூல் நிலையம் இருக்கலாம் ஆனால் வாசிகசாலை சென்று படிச்சு நாலு மனிசரை சந்திச்சு..
அறிஞ்சதைப்பகிர்ந்து பிறர் அறிஞ்சதைப்பெற்று.. காற்றோட்டமாய் இருந்து பேசமுடியுமா அப்படி என்று கேக்கிறார்.. நாலு சுவற்றுக்குள் சுவாசித்த காற்றையே சுவாசிக்கிறீர்கள் என்கிறார்.
இன்னொன்றை சொல்கிறார்.
<b>உங்களுக்குத் தெரியாததா, தமிழ்சமூகம் தங்கட பிள்ளைகளை பொத்திபொத்தி வளர்க்கிற சமூகம். தோளுக்கு
மேல வளர்ந்த பையன் எண்டாலும் சரிதான், வயதுக்கு வந்த பெண் எண்டாலும் சரிதான் முடிவுகள் அப்பா
அம்மாதான் எடுக்க வேணும். பிள்ளைகளுக்கு சுயமா முடிவு எடுக்கத் தெரியாது என்பது பெற்றோரது கணிப்பு</b>
அவர்களது இந்த எண்ணம் சரியா..?? பிள்ளைக்கு சுயமா முடிவை எடுக்கத்தெரியாது என்று முடக்கி வைக்கலாமா..??
பாவம் ஈஸ்வர் ஒரு திருட்டு தம் அடிக்க எவ்வளவு கஸ்டப் பட்டிருககிறார் என்றது இப்பான் தெரியுது. பெற்றார்
மட்டும் அல்ல ஊரே கண்ணுக்க எண்ணையை விட்டுக்கொண்டு திரிஞ்சிருக்குது என்றால் பாருங்களேன். அப்படி வளர்ந்ததால் பிள்ளையள் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டார்களா?? பெற்றோருக்காய் வெளியில் நடித்து பள்ளிக்கூட கழிவறை வழிய தம்மடிச்ச அனுபவங்கள் பலருக்கு இருக்குமே..?? :wink:
ஒரு நாட்டுப்பத்திரிகையையும் தொலைக்காட்டிசியையும் இன்னொரு நாட்டைச்சேர்ந்தவர்கள் பார்க்க முடியாது என்று
கூறும் ஈஸ்வர் ஆனால் எல்லா நாட்டைச் சேந்தர்வகளும் இணையம் பார்க்கலாமே என்று மதனது கருத்திற்கு தனது
கருத்தை வைத்திருக்கிறார். பத்திரிகையும் தொலைக்காட்சியும் பத்துப் பேரைக் கெடுத்தா, இணையம் நூறு பேரைக் கெடுத்த மாதிரி. என்கிறார் எங்கே என்ன சொல்கிறார்கள் பார்ப்போமே..
தனது கருத்தில் தொடர்ந்து.. கணணியை பாவிப்பதால் ஏற்படுகின்ற நோய்கள் பற்றி தெரிவித்து அளவுக்கு
மிஞ்சினா இணையமும் நஞ்சே என்று கூறிச்செல்கிறார் ஈஸ்வர்..இணையம் எம்மைக் கட்டுப்படுத்தக்கூடாது அது சீரழிவை நோக்கிய பாதை என்று கூறிச் செல்லும் ஈஸ்வரைத்தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற
அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
உண்மை செருப்புப்போட்டு வீதியில் இறங்கமுதல் பொய் பல்லக்கில் ஏறி ஊரையே சுற்றி வந்துவிடும் என்று
கூறிச்செல்கிறார். கடைசியாய் வெளியுலகம் காணப்போவது உண்மையைத்தானே ஈஸ்வர்..?? :wink:
உலகத்து மக்களை இருவகையாகப்பிரிக்கும் ஈஸ்வர்..
1) தாங்கள் சீரழிகிறோம் என்பது கூடத்தெரியாமல் சீரழிந்து கொண்டிருப்பவர்கள்.
2) தங்களுக்கு சீரழிவு வருவதை புரிந்து கொண்டு சுதாகரித்துக்கொள்பவர்கள்
என்கிறார்.. அப்ப தாம் சீரழிகிறோம் என்று தெரிந்தும் சீரழிபவர்கள் உலகத்தில் இல்லையா என்ன..??
மனக்கட்டுப்பாடு இருந்தா சீரழியாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற கேள்வியை எழுப்புகிறார் ஈஸ்வர்.. பெரியவர்களே மனக்கட்டுப்பாடு இல்லாமல் அல்லாடிக்கிடக்கிறோம் இதில்
இளைஞருக்கு எப்படி இருக்கும் என்று கேட்கிறார்..?? எங்கே பார்ப்போம் எதிரணியினர் என்ன பதில் வைக்கிறார்கள் என்று.
மனம் ஒரு குரங்கு அனுபவப்பட்ட பெரியவர்களே அதை அடக்கமுடியாமல் திண்டாடுறார்கள். இளையோரால்
முடியுமா என்று கேட்கிறார்..?? எங்கே எடுத்துவிடுங்கள் உங்கள் பதிலை எதிரணியினர்.
எதிரணியில் இருப்பவர்களில் ஓரீருவரைத்தவிர மற்றவர்கள் இளையோரே அது தான் அவர்களுக்கு தாங்கள் சீரழிந்து கொண்டிருப்பது தெரியவில்லை என்கிறார். அவர்களது நலன்களில் அக்கறை உள்ள ஈஸ்வர் கவலைப்படுகிறாராம்.. இளையோரை அந்தப்பாட்டன் உங்களுக்காக கவலைப்படுகிறார் ஒரு கணம் செவி சாயுங்களேன்.
பாத்துப்பாத்து ஈஸ்வர்.. இந்தக்காலத்தில புத்திமதியை எல்லாம் நம் இளையோர் எங்க கேக்கிறாங்க..?? :wink:
உலகத்தில் பகுத்தறிவு கொண்ட மிருகம் மனிதன் தான் என்று சொல்லும் ஈஸ்வர்.. இங்கு எத்தனைபேர் ஒரு
விடையத்தை அலசி ஆராய்ந்து சரியான முடிவை எடுக்கிறீர்கள்...? என்று கேள்வியை எழுப்பியதோடு.. நாம்
எடுத்த முடிவு பிழையென பின்னர் வருந்தாதவர் யாராவது இருக்கிறீர்களா என்ற கேள்வியையும் எழுப்புகிறார்..
யாராவது இருக்கிறீர்களா..?? ஒரு தடவையேனும் பிழையான முடிவு எடுக்காதவர்கள் இருக்கிறீர்களா??
ம் இல்லாத்தையும் விட.. பட்டிமன்றத்தில் ஈஸ்வர் விதி என்ற ஒரு விதியை வேறு உருவாக்கிச் செல்கிறார். அதாவது "கவரும் தன்மை கொண்ட பொருள் எப்போதுமே தனக்குள் மறைமுகமாக பொறிகளைக்கொண்டிருக்கும்" என்று
கூறுகிறார். இதை ஏற்கனவே யாரும் சொல்லியிருக்காவிட்டால் யாழ் சார்பாக.. அறிமுகப்படுத்திவிடுவம். :wink:
அந்த விதியை நிறுவுவதற்கு பல உதாரணத்தை காட்டமுடியும் என்று கூறும் ஈஸ்வர். அந்த மறைமுக பொறியிற்குள் மாட்டிக்கொண்டு நாம் இழப்பது எதுவாகவும் இருக்கலாம் நேரம், பணம், பொருள், ஆரோக்கியம், உடல். ஏன் உயிரைக்கூட என்று கூறிச்செல்கிறார். என்ன சொல்கிறார்கள் எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்.. ஏதாவது ஒருவகையிலாவது இந்த பொறியிற் சிக்கியிருக்கிறீர்களா..??
எதிரணியினர் பலரும் வைத்த கருத்தின் சாராம்சத்தை நோக்க வெளிக்கிட்ட ஈஸ்வர். அவர்கள் இணையத்தின்
பலாபலன்களை பக்கம் பக்கமாய் கூறியிருக்கிறார்கள் என்கிறார். இந்த பலாபலன்களிற்குள் கிடக்கின்ற சீரழிவுகளை புரிய மறுக்கிறார்கள் எதிரணியினர் என்று கவலைப்படிற மாதிரியிருக்கு. இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்கிறார்.. இணையத்தின் பலன்களை வைத்துச் சென்றவர்கள். புலம் பெயர் வாழ் இளையோருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை பட்டியல் இட மறந்துவிட்டார்கள் என்கிறார்.. எங்கே தகுந்த விளக்கம் கொடுக்கிறார்களா எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்... அந்த பலா பலன்கள் தமிழ் இளையோருக்கு
பொருந்தாதா என்ன..? அப்படி என்று கேக்கிறாங்க எதிரணியினர்.
இணையத்தின் பயன்கள் பலவற்றை தானும் எடுத்து விட முடியும்.. என்று கூறி பல நன்மைகளை எடுத்து
விட்டிருக்கிறார். கழிப்பறைக்கு மட்டும் கதிரையை விட்டு எழுந்தால் போதும். அதுவும் மடிக்கணணி வைத்திருந்தால்
அங்கும் கூட இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறி.. நன்மைகளை சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த நன்மைகளால் இளையோருக்கு கிடைக்காது போகும் பலவற்றையும் விளக்கியிருக்கிறார்..
இணையக்காதலில் காதலுக்காய் அலையும் சுகம் உண்டா..?? என்று கேட்கிறார். துணையை பத்திரமாய் வீடு
சேர்க்க வழி உண்டா கேட்கிறார். இந்த நாடுகளில தான் உந்த பிளாக் கற் வேலை அவசியம்.. :wink:
இணையத்தில் நூல் நிலையம் இருக்கலாம் ஆனால் வாசிகசாலை சென்று படிச்சு நாலு மனிசரை சந்திச்சு..
அறிஞ்சதைப்பகிர்ந்து பிறர் அறிஞ்சதைப்பெற்று.. காற்றோட்டமாய் இருந்து பேசமுடியுமா அப்படி என்று கேக்கிறார்.. நாலு சுவற்றுக்குள் சுவாசித்த காற்றையே சுவாசிக்கிறீர்கள் என்கிறார்.
இன்னொன்றை சொல்கிறார்.
<b>உங்களுக்குத் தெரியாததா, தமிழ்சமூகம் தங்கட பிள்ளைகளை பொத்திபொத்தி வளர்க்கிற சமூகம். தோளுக்கு
மேல வளர்ந்த பையன் எண்டாலும் சரிதான், வயதுக்கு வந்த பெண் எண்டாலும் சரிதான் முடிவுகள் அப்பா
அம்மாதான் எடுக்க வேணும். பிள்ளைகளுக்கு சுயமா முடிவு எடுக்கத் தெரியாது என்பது பெற்றோரது கணிப்பு</b>
அவர்களது இந்த எண்ணம் சரியா..?? பிள்ளைக்கு சுயமா முடிவை எடுக்கத்தெரியாது என்று முடக்கி வைக்கலாமா..??
பாவம் ஈஸ்வர் ஒரு திருட்டு தம் அடிக்க எவ்வளவு கஸ்டப் பட்டிருககிறார் என்றது இப்பான் தெரியுது. பெற்றார்
மட்டும் அல்ல ஊரே கண்ணுக்க எண்ணையை விட்டுக்கொண்டு திரிஞ்சிருக்குது என்றால் பாருங்களேன். அப்படி வளர்ந்ததால் பிள்ளையள் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டார்களா?? பெற்றோருக்காய் வெளியில் நடித்து பள்ளிக்கூட கழிவறை வழிய தம்மடிச்ச அனுபவங்கள் பலருக்கு இருக்குமே..?? :wink:
ஒரு நாட்டுப்பத்திரிகையையும் தொலைக்காட்டிசியையும் இன்னொரு நாட்டைச்சேர்ந்தவர்கள் பார்க்க முடியாது என்று
கூறும் ஈஸ்வர் ஆனால் எல்லா நாட்டைச் சேந்தர்வகளும் இணையம் பார்க்கலாமே என்று மதனது கருத்திற்கு தனது
கருத்தை வைத்திருக்கிறார். பத்திரிகையும் தொலைக்காட்சியும் பத்துப் பேரைக் கெடுத்தா, இணையம் நூறு பேரைக் கெடுத்த மாதிரி. என்கிறார் எங்கே என்ன சொல்கிறார்கள் பார்ப்போமே..
தனது கருத்தில் தொடர்ந்து.. கணணியை பாவிப்பதால் ஏற்படுகின்ற நோய்கள் பற்றி தெரிவித்து அளவுக்கு
மிஞ்சினா இணையமும் நஞ்சே என்று கூறிச்செல்கிறார் ஈஸ்வர்..இணையம் எம்மைக் கட்டுப்படுத்தக்கூடாது அது சீரழிவை நோக்கிய பாதை என்று கூறிச் செல்லும் ஈஸ்வரைத்தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற
அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

