01-24-2006, 03:51 PM
இன்னொரு மொழியில் வணக்கம் கூறி, ஒருங்கிணைப்பாளரை வன்மையாகக் கண்டித்து தன் வாதத்தை முன்வைத்தார் குருக்காலை..... மன்னிக்கவும் குறுக்காலைபோவான். ஆங்காங்கே சிறிய எழுத்துப்பிழைகள் விட்டிருந்தாலும் ஆணித்தரமாக தன் கருத்துக்களை எழுதியிருக்கின்றார்.
எதிரணியினர் வாதங்களை நன்றாகப் புரிந்துகொள்ளாமல் தங்களைத்தாங்களே குளப்புகிறார்கள் என்று ஆரம்பித்தார். இது உண்மையா?
இலத்திரனியல் தகவல் களஞ்சிங்களை இணைக்கும் பாலம், இதனு}டாக வினைத்திறன் மிக்க தொடர்பாடல் முறைகளை ஏற்படுத்தி வளம்பெறலாம் என்று முன்வந்தோர் உதாரணத்தோடு தந்திருந்தார்கள் என்றார். தனது அடுத்த கருத்தில் இளையவர்கள் முன்னின்று ஒழுங்குபடுத்தும் நிகழ்வுகளில் எதிரணியிலிருந்து கருத்துக்கூறுபவர்களில் சிலர் பங்கெடுப்பதில்லை அதனால்தான் இந்த அறியாமை என்றார். இது உண்மையா?
இணையத்தால் பல நன்மைகள் இருந்தும் சில தீமைகளே அதை ஒரு சீரழிவுக்கருவியாக நோக்க வைக்கிறது என்று கூறி, அதனை கொடிய நஞ்சிற்கு ஒப்பிட்டார். நஞ்சையும் நல்லவழிகளில் பாவிக்கலாம் என்று எமது போராட்டத்தை உதாரணம் காட்டினார். இவைகளுக்கு எதிரணியினர் என்ன பதில் தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
ஆபாசம், ஆபாசம் என்று எதிரணியினர் அரைத்தமாவையே திரும்பத்திரும்ப அரைக்கிறார்கள் என்றார். ஆனால் அவர்களுடைய இந்த மா இன்னும் நன்றாக அரைபடவில்லைப்போல் இருக்கிறது. ஆபாசத்தைத் தேடுபவர் இருக்கும்வரை அது வந்தே தீரும் என்றார். அதுதானே! கூடாது என்று தெரிந்தும் ஏன் தேடுகிறார்கள்? இணையத்தளத்தினு}டாக ஒரு குடும்பப் பெண்ணிற்கு வரவிருந்த ஆபத்து வெளியிலும் ஏற்படலாம் என்று விரிவாக எழுதியிருந்தார்.
இதுவரை எதிர்தரப்பார் சீரழிகிறார்கள் என்பதற்கு உதாரணங்களை அடுக்கினார்களேயன்றி, அவற்றைத் தடுப்பதற்கோ, குறைப்பதற்கோ ஆக்கபுூர்வமான எதனையும் முன் வைக்கவில்லை என்றார். இப்படி ஓலமிட்டு நேரத்தை விரையமாக்க வேண்டாம் என்று உரத்துக் கூறுவதுபோல் எனக்குப்பட்டது. இது எதிரணியினருக்கு நன்றாகவே விளங்கியிருக்கும். என்று நினைக்கிறேன். விரைந்துவந்து உங்கள் வாதங்களை முன்வையுங்கள்.
இணையத்தின் சிறந்த எதிர்காலம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அப்போ, எதிர்காலத்தில் இந்தச் சீரழிவுகள் இன்னும் அதிகரிக்குமா? இல்லை இதனால் ஏற்படும் நன்மைகள் பெருகுமா?
தகவல் தொழில்நுட்பம் தனது புரட்சிப்பாதையில் தொடரத்தான் போகிறது, தொடர்பாடல்களுக்கு புதிய புதிய வினைத்திறன் மிக்க வழிகள் இன்னும் இலகுவாக இருக்கத்தான் போகின்றன, அவற்றை "குரங்கின் கை புூமாலை" போல் ஆக்காது எல்லோருக்கும் பயனுள்ளதாக ஆக்கும் முற்போக்கான சிந்தனையில் எமது நேரத்தைச் செலவிடுவோம் என்று அழகாகக்கூறி அற்புதமாகத் தன் வாதத்ததை முடித்திருந்தார்.
பெயர்தான் குறுக்காலை போவான், அனால் அவர் குறுக்கலை போகாமல் ஓர் உறுதியான நேர்வழியில் செல்வதுபோல் எனக்குப்படுகிறது. அவரது வாதத்திறமை அப்படி இருக்கின்றது. அடுத்து தீமை அணியிலிருந்து வரப்போகும் ஈஸ்வர் காத்திருந்து, காத்திருந்து பொறுமையை இழந்து, டென்சனாகி, பக்கத்திலிருப்பவரைக் கடிக்காமல் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்.
நன்றி.
எதிரணியினர் வாதங்களை நன்றாகப் புரிந்துகொள்ளாமல் தங்களைத்தாங்களே குளப்புகிறார்கள் என்று ஆரம்பித்தார். இது உண்மையா?
இலத்திரனியல் தகவல் களஞ்சிங்களை இணைக்கும் பாலம், இதனு}டாக வினைத்திறன் மிக்க தொடர்பாடல் முறைகளை ஏற்படுத்தி வளம்பெறலாம் என்று முன்வந்தோர் உதாரணத்தோடு தந்திருந்தார்கள் என்றார். தனது அடுத்த கருத்தில் இளையவர்கள் முன்னின்று ஒழுங்குபடுத்தும் நிகழ்வுகளில் எதிரணியிலிருந்து கருத்துக்கூறுபவர்களில் சிலர் பங்கெடுப்பதில்லை அதனால்தான் இந்த அறியாமை என்றார். இது உண்மையா?
இணையத்தால் பல நன்மைகள் இருந்தும் சில தீமைகளே அதை ஒரு சீரழிவுக்கருவியாக நோக்க வைக்கிறது என்று கூறி, அதனை கொடிய நஞ்சிற்கு ஒப்பிட்டார். நஞ்சையும் நல்லவழிகளில் பாவிக்கலாம் என்று எமது போராட்டத்தை உதாரணம் காட்டினார். இவைகளுக்கு எதிரணியினர் என்ன பதில் தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
ஆபாசம், ஆபாசம் என்று எதிரணியினர் அரைத்தமாவையே திரும்பத்திரும்ப அரைக்கிறார்கள் என்றார். ஆனால் அவர்களுடைய இந்த மா இன்னும் நன்றாக அரைபடவில்லைப்போல் இருக்கிறது. ஆபாசத்தைத் தேடுபவர் இருக்கும்வரை அது வந்தே தீரும் என்றார். அதுதானே! கூடாது என்று தெரிந்தும் ஏன் தேடுகிறார்கள்? இணையத்தளத்தினு}டாக ஒரு குடும்பப் பெண்ணிற்கு வரவிருந்த ஆபத்து வெளியிலும் ஏற்படலாம் என்று விரிவாக எழுதியிருந்தார்.
இதுவரை எதிர்தரப்பார் சீரழிகிறார்கள் என்பதற்கு உதாரணங்களை அடுக்கினார்களேயன்றி, அவற்றைத் தடுப்பதற்கோ, குறைப்பதற்கோ ஆக்கபுூர்வமான எதனையும் முன் வைக்கவில்லை என்றார். இப்படி ஓலமிட்டு நேரத்தை விரையமாக்க வேண்டாம் என்று உரத்துக் கூறுவதுபோல் எனக்குப்பட்டது. இது எதிரணியினருக்கு நன்றாகவே விளங்கியிருக்கும். என்று நினைக்கிறேன். விரைந்துவந்து உங்கள் வாதங்களை முன்வையுங்கள்.
இணையத்தின் சிறந்த எதிர்காலம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அப்போ, எதிர்காலத்தில் இந்தச் சீரழிவுகள் இன்னும் அதிகரிக்குமா? இல்லை இதனால் ஏற்படும் நன்மைகள் பெருகுமா?
தகவல் தொழில்நுட்பம் தனது புரட்சிப்பாதையில் தொடரத்தான் போகிறது, தொடர்பாடல்களுக்கு புதிய புதிய வினைத்திறன் மிக்க வழிகள் இன்னும் இலகுவாக இருக்கத்தான் போகின்றன, அவற்றை "குரங்கின் கை புூமாலை" போல் ஆக்காது எல்லோருக்கும் பயனுள்ளதாக ஆக்கும் முற்போக்கான சிந்தனையில் எமது நேரத்தைச் செலவிடுவோம் என்று அழகாகக்கூறி அற்புதமாகத் தன் வாதத்ததை முடித்திருந்தார்.
பெயர்தான் குறுக்காலை போவான், அனால் அவர் குறுக்கலை போகாமல் ஓர் உறுதியான நேர்வழியில் செல்வதுபோல் எனக்குப்படுகிறது. அவரது வாதத்திறமை அப்படி இருக்கின்றது. அடுத்து தீமை அணியிலிருந்து வரப்போகும் ஈஸ்வர் காத்திருந்து, காத்திருந்து பொறுமையை இழந்து, டென்சனாகி, பக்கத்திலிருப்பவரைக் கடிக்காமல் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்.
நன்றி.

