01-21-2006, 01:43 PM
அறிஞர்கள் நிறைந்த அவையிலே, வார்த்தைஐhலம் தெரியாத காக்கைவன்னியன், ஈஸ்வர் வரமுன்னரே வந்து, ஆரம்பிக்கும்போதே அனைவருக்கும் வணக்கம் கூறமறந்து, பயந்து பயந்து தன் வாதத்தினை முன்வைத்தார்.
இவரும் பெரும்பாலான தனது அணியினர் கூறுகின்ற குற்றச்சாட்டையே கூறுகிறார். எதிரணியினர் தலைப்பை விடுத்து நழுவுகிறார்கள் என்றார். தலைப்பைத் தங்களுக்குச் சார்பாக வைத்துக்கொள்கின்றார்கள் என்றார். இவர்கள் இதனைத் திரும்பத்திரும்பக் கூறுவதைப்பார்த்தால் இது உண்மைதான் என்று எதிரணியினர் இனிமேல் ஒத்துக்கொண்டுவிடுவார்களோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. "அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்" என்பதை எதிரணியினர் மெய்யாக்கப்போகிறார்களா? இதற்கு எதிரணியினரின் பதில் என்ன?
இரசிகை தலைப்பை "இளைஞர்களைக் கெடுக்கின்றதா அல்லது வளர்க்கின்றதா" என்று வைக்காமல் "புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகின்றார்களா? அல்லது சீரழிகின்றார்களா?" என்று வைத்துவிட்டார் அதனால்தான் எதிரணியினர் தலைப்பிலிருந்து எல்லோரும் நழுவுகின்றார்கள் என்றும் கூறுகிறார்.
இந்த இடத்தில் நான் இதற்கு முன்னர் வாதாடிய வர்ணன் "எந்தத்தலைப்பிலும் விவாதமேடை வரலாம் என்று கூறி சில உதாரணங்களையும் கொடுத்தார்" என்று முன்பு கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்றைய தலைப்பு இதுதான். இதற்குள் நின்று வாதாடுவதுதான் சிறப்பு. ஆனால் இத்தனை நாட்களுக்குப்பிறகு இது சரியல்ல என்று கூறுவதும் சரியல்ல.
அதிகமானோர் ஆபாசப்படங்களையும், சினிமாவையும், வீணான அரட்டைகளையும் அடிக்கடி ஆதாராமாகக் காட்டுகிறார்கள். விடுதலைக்காக உருவாக்கப்பட்ட இணையங்கள் இளைஞர்களைத் திசைதிருப்ப முயலாது என்றும் மற்றவைகளால் அவர்களைத் திசைதிருப்ப முயலும் என்பதுபோல் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார். இவ்வாதமே பலமுறைகளில் முன்வைக்கப்பட்டது. இதனை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா? எதிரணியினர் தகுந்த பதில் தருவார்கள் என்ற எதிர்பார்க்கிறேன்.
நடுவர்களைத் திசைதிருப்ப முயல்கிறார்கள் என்றார். எம்மைக் குழப்ப நிலையில் வைத்திருப்பதற்காக தலைப்பைவிட்டு நழுவுகின்றார்கள். நீங்கள் தடம்புரளமாட்டீர்கள் என்பதை நன்கறிவேன் என்று எமக்கும் ஓர் எச்சரிக்கை விட்டுச்செல்வதுபோல் படுகின்றது. ஆனால் அது யாராலும் முடியாததொன்று.
"காக்கைவன்னியன்!" எச்சிரிக்கையாக இருக்கவேண்டிய பெயர்தான். களத்துள் நுழையும்போதே கடவுள் (ஈஸ்வர்) என்றும் பாராமல் அவருக்கு முன் வந்து சிறு குழப்பத்தை உண்டாக்கினார். இவரது வாதம் இனிமேல் பெரிய பெரிய குழப்பங்களையே உருவாக்குமா? அவரது அணியினர்கூட இவர் ஆப்பு வைத்துவிட்டார் என்று கூறுகின்றனர். இது தனது வாதத்தை களத்திலே முன்வைக்கவேண்டுமென்ற தீராத ஆவலினாலும் இருக்கலாம் அல்லவா?
எதிரணியினர்தான் இவை எல்லாவற்றிற்கும், அவருக்குப் பின்னால் வரும் மக்கள் படைக்கும் தகுந்த பதிலைத்தரவேண்டும். நன்மை அணியிலிருந்து அடுத்து பிருந்தனை அழைக்கிறேன்.
இவரும் பெரும்பாலான தனது அணியினர் கூறுகின்ற குற்றச்சாட்டையே கூறுகிறார். எதிரணியினர் தலைப்பை விடுத்து நழுவுகிறார்கள் என்றார். தலைப்பைத் தங்களுக்குச் சார்பாக வைத்துக்கொள்கின்றார்கள் என்றார். இவர்கள் இதனைத் திரும்பத்திரும்பக் கூறுவதைப்பார்த்தால் இது உண்மைதான் என்று எதிரணியினர் இனிமேல் ஒத்துக்கொண்டுவிடுவார்களோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. "அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்" என்பதை எதிரணியினர் மெய்யாக்கப்போகிறார்களா? இதற்கு எதிரணியினரின் பதில் என்ன?
இரசிகை தலைப்பை "இளைஞர்களைக் கெடுக்கின்றதா அல்லது வளர்க்கின்றதா" என்று வைக்காமல் "புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகின்றார்களா? அல்லது சீரழிகின்றார்களா?" என்று வைத்துவிட்டார் அதனால்தான் எதிரணியினர் தலைப்பிலிருந்து எல்லோரும் நழுவுகின்றார்கள் என்றும் கூறுகிறார்.
இந்த இடத்தில் நான் இதற்கு முன்னர் வாதாடிய வர்ணன் "எந்தத்தலைப்பிலும் விவாதமேடை வரலாம் என்று கூறி சில உதாரணங்களையும் கொடுத்தார்" என்று முன்பு கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்றைய தலைப்பு இதுதான். இதற்குள் நின்று வாதாடுவதுதான் சிறப்பு. ஆனால் இத்தனை நாட்களுக்குப்பிறகு இது சரியல்ல என்று கூறுவதும் சரியல்ல.
அதிகமானோர் ஆபாசப்படங்களையும், சினிமாவையும், வீணான அரட்டைகளையும் அடிக்கடி ஆதாராமாகக் காட்டுகிறார்கள். விடுதலைக்காக உருவாக்கப்பட்ட இணையங்கள் இளைஞர்களைத் திசைதிருப்ப முயலாது என்றும் மற்றவைகளால் அவர்களைத் திசைதிருப்ப முயலும் என்பதுபோல் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார். இவ்வாதமே பலமுறைகளில் முன்வைக்கப்பட்டது. இதனை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா? எதிரணியினர் தகுந்த பதில் தருவார்கள் என்ற எதிர்பார்க்கிறேன்.
நடுவர்களைத் திசைதிருப்ப முயல்கிறார்கள் என்றார். எம்மைக் குழப்ப நிலையில் வைத்திருப்பதற்காக தலைப்பைவிட்டு நழுவுகின்றார்கள். நீங்கள் தடம்புரளமாட்டீர்கள் என்பதை நன்கறிவேன் என்று எமக்கும் ஓர் எச்சரிக்கை விட்டுச்செல்வதுபோல் படுகின்றது. ஆனால் அது யாராலும் முடியாததொன்று.
"காக்கைவன்னியன்!" எச்சிரிக்கையாக இருக்கவேண்டிய பெயர்தான். களத்துள் நுழையும்போதே கடவுள் (ஈஸ்வர்) என்றும் பாராமல் அவருக்கு முன் வந்து சிறு குழப்பத்தை உண்டாக்கினார். இவரது வாதம் இனிமேல் பெரிய பெரிய குழப்பங்களையே உருவாக்குமா? அவரது அணியினர்கூட இவர் ஆப்பு வைத்துவிட்டார் என்று கூறுகின்றனர். இது தனது வாதத்தை களத்திலே முன்வைக்கவேண்டுமென்ற தீராத ஆவலினாலும் இருக்கலாம் அல்லவா?
எதிரணியினர்தான் இவை எல்லாவற்றிற்கும், அவருக்குப் பின்னால் வரும் மக்கள் படைக்கும் தகுந்த பதிலைத்தரவேண்டும். நன்மை அணியிலிருந்து அடுத்து பிருந்தனை அழைக்கிறேன்.

