01-20-2006, 05:34 PM
ஐயா எனக்குத் தெரியாதையா வார்த்தை ஜாலம் தெரிந்ததை சொல்லுகின்றேன்.
அறிஞர்கள் நிறைந்த அரங்கில் என் கருத்துக்களை வைக்க பயமாக இருக்கின்றது.
பாருங்கோ பயத்திலை உங்களுக்கு வணக்கம்
சொல்ல மறந்திட்டன். தன் துயரத்திலும் இந்த பட்டிமன்றத்தில் முலம் இந்த இளைஞர்களை
திருத்த நல்ல தீர்ப்பு சொல்லவேண்டுமென்று ஆர்வத்துடன் வந்திருக்கும் நடுவர்
செல்வமுத்து ஐயா அவர்களே களத்திலை நல்ல கருத்துக்கள் வரவேண்டுமென்பதற்காக
பலருடைய கருத்துக்களில் வீச்சரிவாளை வீசிய அனுபவத்தில் இந்த பட்டிமன்றத்தை
திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் யாழினி அவர்களே டங் சிலிப்பாகிவிட்டது மன்னித்துக்
கொள்ளுங்கள் தமிழினி அவர்களே
மற்றும் மாண்புமிகு எனதணித்தலைவர் சோழியன்
அண்ணா அவர்களே மற்றும் இணையத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் இணையத்தால்
சீரழிகின்றனர் என்ற உண்மையை எடுத்துரைக்க வந்த நண்பர்களே
ஏதோ இந்த ரசிகை வில்லங்கத்தில் மாட்டிவிட்டா
வந்த நாங்கள் ஒப்புக்காக என்னத்தையாவது சொல்லிவிட்டு போவம் என்று ஒப்புக்காக
வாதாடும் எதிரணி நண்பர்களே
இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக ஒழுங்கு படுத்தி நடாத்தும்
ரசிகை அவர்களே னைவருக்கும் எனது வணக்கங்களை சிரம் தாழ்த்தி கூறிக்கொள்கின்றேன்.
என்னுடைய அணியினர் அனைவரும்
திரும்ப திரும்ப ஒரு விடயத்தை சொல்லவேண்டியிருக்கின்றது. காரணம் எதிரணியினர் தோல்வியை
தவிர்ப்பதற்காக தலைப்பை விடுத்து இணையம் என்று பொதுவாக கருத்தை கூறுவதைப்பார்த்தால்
அவர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். தலைப்பிலிருந்து நழுவி
நடுவர்களை திசைதிருப்பி வெற்றியை தமதாக்குவோம் என்ற நப்பாசைதான்.
நாங்கள் உயரத்தில் ஏறுவதற்காக ஒருவருடைய
தோளில் ஏறி மேலே சென்றுவிட்டபின் ஐயோ நான் கட்டையனுக்கு மேலே மிதிச்சு
மேலே ஏறினனான் என்று குறை கூறுகவர்களல்ல. ஐயா இணையம் நல்லது. இது தகவல்களை
விரைவாக்குகின்றது. உண்மைதான். படத்தை பார்த்தபடி சுவாரசியமாக பேசமுடிகின்றது.
என்ன ஆச்சரியமான வளர்ச்சி. இலவச தொலைபேசிகளை வளங்குகின்றது. அற்புதம்.
பல அரியதகவல்களை நொடியில் பெற்றுக்கொள்ளமுடிகின்றது. இவற்றை நாங்கள்
மறுத்தால் நாங்கள்தான் உலகின் பெரிய பொய்யர்கள். இன்னும் எத்தனையோ நன்மைகள்.
தலைவணங்குகின்றோம். விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் இவற்றை மறுக்க
அஞ்ஞானவாதிகளல்ல. ஆனால் தவறு ரசிகையினுடையது அவர் தலைப்பை இணையம்
இளைஞர்களை கெடுக்கின்றதா அல்லது வளர்க்கின்றதா என்று வைக்காமல்
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால்
நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? என்ற தலைப்பை
வைத்துவிட்டார்.
அதனால்தான் எதிரணியினர் தலைப்பிலிருந்து எல்லோரும்
நழுவுகின்றனர். தலைப்பை தங்களுக்கு சார்பாக வைத்துக்கொள்கின்றனர்.
சுவிஸிலிருந்து சிலகாலத்துக்கு முன்னர் எனக்கு ஒரு துண்டுப்பிரசுரம்
ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இளைஞர்கள் பலர் புகையிரத நிலையங்களில்
நின்று கைத்தொலைபேசி கமாராவூடாக அங்கு செல்லும் தமிழ்பெண்களை
படம்பிடித்து அந்த படத்தை ஆபாச படங்களுடன் இணைத்து அந்த பெண்களை
மிரட்டுவதாக (அதை களத்தில் இணைத்திருக்கின்றேன்.) அவற்றை இணையத்திலும்
சேர்த்துவிடுவார்களாம்.
புலம்பெயர் பெற்றோர்கள் அதிகம்
கணனி அறிவில்லாதவர்கள். அதை பயன்படுத்தி இளைஞர்கள் தங்கள் இச்சைகளை
இணையமூலம் நிறைவேற்றுகின்றனர். இணையம் வருவதற்கு முன்னர் ஆபாச வீடியோக்களை
அதற்குரிய இடங்களில் வாடகைக்கு பெற்றுக்கொள்ளமுடியும். அதனால் சிறுவர்களை அவை
சேருவதை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது இணையத்தில் பலபக்கங்களுக்கு
சென்றால் விளம்பரம் வ¨்து ஆர்வத்தை தூண்டுகின்றது. நீங்கள் சொல்லாம் இணைய
தீச்சுவர் மூலம் தடைசெய்யமுடியுமென்று. ஒருதடவை அந்த இணையத்துக்கு சென்றால்
இளைஞர்கள் தூண்டப்பட்டுவிடுவர். அதன்பிறகு தீச்சுவர் போட்டென்ன போடாமல் விட்டென்ன?
இங்கு ஒருவர் கனடாவில் பொங்கு தமிழ்
இளைஞர்கள் நடாத்தினர் என்றார். சுனாமி நிதிசேர்த்தார்கள் என்றார். கனடாவின் பொங்கு
தமிழுக்கு இளைஞர்கள் பெயர் லேபிளாகப் பயன்பட்டதே ஒழிய அவர்கள முழுவதுமாக நிற்கவில்லை.
சில அரசியல் காரணங்களுக்காக அவர்கள் பெயர்பயன்பட்டது.
மற்றது தமிழ்நெற் யாழ் சங்கதி
என்ற இணையங்களின் பெயர் கூறப்பட்டது. அவை நமது விடுதலைக்காக உருவாக்கபட்ட
இணையங்கள். அவை இளைஞர்களை திசைதிருப்ப முயலாது. இணையத்தினால் இளைஞர்கள்
தெரிந்து கொள்ளமுடியாத அசிங்கங்களை நாலு சுவருக்குள் இணையம் என்ற ஊடகமூலம்
பெற்றுக்கொள்ள வழிசெய்துவிட்டது.
பார்த்துப்பேசுவதற்கு உருவாக்கப்பட்ட நெற்மீற்றிங்கை
பயன்படுத்தி சுயஇன்பம் கற்றுக்கொடுக்கின்றார்கள். எதிரணியினர் கூறலாம் தொலைக்காட்சியில்
ஆபாசபடங்கள் இல்லையா என்று? அதை பெரிதாக இளைஞர்கள் பார்க்கமுடியாது. பெற்றோர்களும்
சேர்ந்திருந்து பார்ப்பதால் தொலைக்காட்சிகளில் ஆபாசங்களை அவர்கள் பார்க்கமுடியாது.
மற்றையது அவை கட்டணமாக இயங்குகின்றன. இணையங்களுக்கு தொலைபேசிமூலமும்
பணம் செலுத்தமுடியுமென்பதால் சுலபமாகிவிடுகின்றது.
எதிரணியினர் இணையத்தால் நன்மை என்கின்றார்கள் ஏதாவது ஒன்றை காட்டினார்களா? பொதுவான இணையத்தை நன்மை என்று
வாதாடாமல் தலைப்புக்கேற்றவாறு உதாரணங்களுடன் வாதாடுங்கள். ஏன் யாழ் களத்திலேயே தேவையில்லாத அரட்டை சினிமா பகுதிகளில் எழுதுபவர்கள் தொகைதான் அதிகம். எதிரணியினர் இங்கு புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் இணையத்தில் ஏதாவது சாதித்திருக்கின்றார்கள் என்று கூறமுடியுமா? புலம்பெயர் நாட்டில் ஒரு குழப்பவாதி விடுதலைக்காக ஒரு இணையமும் எதிராக பல இணையங்களும் நடாத்துவதாக யாழில் ஒருவர் கூறியிருந்தார்.
நடுவர்களே உங்களை குழப்ப நிலையில் வைத்திருப்பதற்காக தலைப்பை
விட்டு நழுவுகின்றார்கள். நீங்கள் தடம்புரளமாட்டீர்கள் என்பதை நானறிவேன். கூறுவதற்கு நிறைய இருக்கின்றது.
பின்னால் வரும் மக்கள் படைக்கு வழிவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி வணக்கம்
அறிஞர்கள் நிறைந்த அரங்கில் என் கருத்துக்களை வைக்க பயமாக இருக்கின்றது.
பாருங்கோ பயத்திலை உங்களுக்கு வணக்கம்
சொல்ல மறந்திட்டன். தன் துயரத்திலும் இந்த பட்டிமன்றத்தில் முலம் இந்த இளைஞர்களை
திருத்த நல்ல தீர்ப்பு சொல்லவேண்டுமென்று ஆர்வத்துடன் வந்திருக்கும் நடுவர்
செல்வமுத்து ஐயா அவர்களே களத்திலை நல்ல கருத்துக்கள் வரவேண்டுமென்பதற்காக
பலருடைய கருத்துக்களில் வீச்சரிவாளை வீசிய அனுபவத்தில் இந்த பட்டிமன்றத்தை
திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் யாழினி அவர்களே டங் சிலிப்பாகிவிட்டது மன்னித்துக்
கொள்ளுங்கள் தமிழினி அவர்களே
மற்றும் மாண்புமிகு எனதணித்தலைவர் சோழியன்
அண்ணா அவர்களே மற்றும் இணையத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் இணையத்தால்
சீரழிகின்றனர் என்ற உண்மையை எடுத்துரைக்க வந்த நண்பர்களே
ஏதோ இந்த ரசிகை வில்லங்கத்தில் மாட்டிவிட்டா
வந்த நாங்கள் ஒப்புக்காக என்னத்தையாவது சொல்லிவிட்டு போவம் என்று ஒப்புக்காக
வாதாடும் எதிரணி நண்பர்களே
இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக ஒழுங்கு படுத்தி நடாத்தும்
ரசிகை அவர்களே னைவருக்கும் எனது வணக்கங்களை சிரம் தாழ்த்தி கூறிக்கொள்கின்றேன்.
என்னுடைய அணியினர் அனைவரும்
திரும்ப திரும்ப ஒரு விடயத்தை சொல்லவேண்டியிருக்கின்றது. காரணம் எதிரணியினர் தோல்வியை
தவிர்ப்பதற்காக தலைப்பை விடுத்து இணையம் என்று பொதுவாக கருத்தை கூறுவதைப்பார்த்தால்
அவர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். தலைப்பிலிருந்து நழுவி
நடுவர்களை திசைதிருப்பி வெற்றியை தமதாக்குவோம் என்ற நப்பாசைதான்.
நாங்கள் உயரத்தில் ஏறுவதற்காக ஒருவருடைய
தோளில் ஏறி மேலே சென்றுவிட்டபின் ஐயோ நான் கட்டையனுக்கு மேலே மிதிச்சு
மேலே ஏறினனான் என்று குறை கூறுகவர்களல்ல. ஐயா இணையம் நல்லது. இது தகவல்களை
விரைவாக்குகின்றது. உண்மைதான். படத்தை பார்த்தபடி சுவாரசியமாக பேசமுடிகின்றது.
என்ன ஆச்சரியமான வளர்ச்சி. இலவச தொலைபேசிகளை வளங்குகின்றது. அற்புதம்.
பல அரியதகவல்களை நொடியில் பெற்றுக்கொள்ளமுடிகின்றது. இவற்றை நாங்கள்
மறுத்தால் நாங்கள்தான் உலகின் பெரிய பொய்யர்கள். இன்னும் எத்தனையோ நன்மைகள்.
தலைவணங்குகின்றோம். விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் இவற்றை மறுக்க
அஞ்ஞானவாதிகளல்ல. ஆனால் தவறு ரசிகையினுடையது அவர் தலைப்பை இணையம்
இளைஞர்களை கெடுக்கின்றதா அல்லது வளர்க்கின்றதா என்று வைக்காமல்
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால்
நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? என்ற தலைப்பை
வைத்துவிட்டார்.
அதனால்தான் எதிரணியினர் தலைப்பிலிருந்து எல்லோரும்
நழுவுகின்றனர். தலைப்பை தங்களுக்கு சார்பாக வைத்துக்கொள்கின்றனர்.
சுவிஸிலிருந்து சிலகாலத்துக்கு முன்னர் எனக்கு ஒரு துண்டுப்பிரசுரம்
ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இளைஞர்கள் பலர் புகையிரத நிலையங்களில்
நின்று கைத்தொலைபேசி கமாராவூடாக அங்கு செல்லும் தமிழ்பெண்களை
படம்பிடித்து அந்த படத்தை ஆபாச படங்களுடன் இணைத்து அந்த பெண்களை
மிரட்டுவதாக (அதை களத்தில் இணைத்திருக்கின்றேன்.) அவற்றை இணையத்திலும்
சேர்த்துவிடுவார்களாம்.
புலம்பெயர் பெற்றோர்கள் அதிகம்
கணனி அறிவில்லாதவர்கள். அதை பயன்படுத்தி இளைஞர்கள் தங்கள் இச்சைகளை
இணையமூலம் நிறைவேற்றுகின்றனர். இணையம் வருவதற்கு முன்னர் ஆபாச வீடியோக்களை
அதற்குரிய இடங்களில் வாடகைக்கு பெற்றுக்கொள்ளமுடியும். அதனால் சிறுவர்களை அவை
சேருவதை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது இணையத்தில் பலபக்கங்களுக்கு
சென்றால் விளம்பரம் வ¨்து ஆர்வத்தை தூண்டுகின்றது. நீங்கள் சொல்லாம் இணைய
தீச்சுவர் மூலம் தடைசெய்யமுடியுமென்று. ஒருதடவை அந்த இணையத்துக்கு சென்றால்
இளைஞர்கள் தூண்டப்பட்டுவிடுவர். அதன்பிறகு தீச்சுவர் போட்டென்ன போடாமல் விட்டென்ன?
இங்கு ஒருவர் கனடாவில் பொங்கு தமிழ்
இளைஞர்கள் நடாத்தினர் என்றார். சுனாமி நிதிசேர்த்தார்கள் என்றார். கனடாவின் பொங்கு
தமிழுக்கு இளைஞர்கள் பெயர் லேபிளாகப் பயன்பட்டதே ஒழிய அவர்கள முழுவதுமாக நிற்கவில்லை.
சில அரசியல் காரணங்களுக்காக அவர்கள் பெயர்பயன்பட்டது.
மற்றது தமிழ்நெற் யாழ் சங்கதி
என்ற இணையங்களின் பெயர் கூறப்பட்டது. அவை நமது விடுதலைக்காக உருவாக்கபட்ட
இணையங்கள். அவை இளைஞர்களை திசைதிருப்ப முயலாது. இணையத்தினால் இளைஞர்கள்
தெரிந்து கொள்ளமுடியாத அசிங்கங்களை நாலு சுவருக்குள் இணையம் என்ற ஊடகமூலம்
பெற்றுக்கொள்ள வழிசெய்துவிட்டது.
பார்த்துப்பேசுவதற்கு உருவாக்கப்பட்ட நெற்மீற்றிங்கை
பயன்படுத்தி சுயஇன்பம் கற்றுக்கொடுக்கின்றார்கள். எதிரணியினர் கூறலாம் தொலைக்காட்சியில்
ஆபாசபடங்கள் இல்லையா என்று? அதை பெரிதாக இளைஞர்கள் பார்க்கமுடியாது. பெற்றோர்களும்
சேர்ந்திருந்து பார்ப்பதால் தொலைக்காட்சிகளில் ஆபாசங்களை அவர்கள் பார்க்கமுடியாது.
மற்றையது அவை கட்டணமாக இயங்குகின்றன. இணையங்களுக்கு தொலைபேசிமூலமும்
பணம் செலுத்தமுடியுமென்பதால் சுலபமாகிவிடுகின்றது.
எதிரணியினர் இணையத்தால் நன்மை என்கின்றார்கள் ஏதாவது ஒன்றை காட்டினார்களா? பொதுவான இணையத்தை நன்மை என்று
வாதாடாமல் தலைப்புக்கேற்றவாறு உதாரணங்களுடன் வாதாடுங்கள். ஏன் யாழ் களத்திலேயே தேவையில்லாத அரட்டை சினிமா பகுதிகளில் எழுதுபவர்கள் தொகைதான் அதிகம். எதிரணியினர் இங்கு புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் இணையத்தில் ஏதாவது சாதித்திருக்கின்றார்கள் என்று கூறமுடியுமா? புலம்பெயர் நாட்டில் ஒரு குழப்பவாதி விடுதலைக்காக ஒரு இணையமும் எதிராக பல இணையங்களும் நடாத்துவதாக யாழில் ஒருவர் கூறியிருந்தார்.
நடுவர்களே உங்களை குழப்ப நிலையில் வைத்திருப்பதற்காக தலைப்பை
விட்டு நழுவுகின்றார்கள். நீங்கள் தடம்புரளமாட்டீர்கள் என்பதை நானறிவேன். கூறுவதற்கு நிறைய இருக்கின்றது.
பின்னால் வரும் மக்கள் படைக்கு வழிவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி வணக்கம்

