01-16-2004, 07:21 AM
கிட்டுமாமா![[Image: imageview.php?imageId=8]](http://www.yarl.com/imageview.php?imageId=8)
ஆண்டுகள் பல அலையினுள் அழிந்தபோதும் அழியாது உன் முகம் எம் விழியெங்கும். . .
கிட்டடியில் கண்டதில்லை
நான் இதழ்விரிக்கும் முன்னே
நீ இமைமூடிக்கொண்டாயே
பத்திரிகைகளில் புகைப்படம்
கண்டதுண்டு புன்னகைத்த
உன் முகம் கண்டு
நான் புல்லரித்துப்போனதுண்டு
இருக்கும் போது உன்னை
நானறியேன் இந்தியன்
கருக்கியபின்னரே
உன் பெயர் நானறிந்தேன்
அறியா வயதினிலேயே
எனக்குள் ஆயிரம் விளக்கம்
தந்தவன் நீ
உன் நினைவை வெளிக்காட்ட
வீட்டின்முன் கொட்டகைபோட்டு
உன் புகைப்படம் வைத்து
தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுண்டு
ஏன் எதற்கு என்று
விளக்கம் புரியாமல்
விடுதலை கீதங்களை
என் செவிவழி படரவிட்டு
சந்தோசித்ததும் உண்டு
கண்ணாடி போட்ட
உன் புகைப்படம் பார்க்கும்போது
எனக்கு எந்தவித கவலையும்
தோன்றியதில்லை
இறப்பென்றாலே அறியாத வயது
ஏதோ எல்லோரும் வீட்டின்முன்
கொண்டாடுகின்றார்கள் என்று
நானும் கொண்டாடியதுண்டு
அவற்றை நினைக்க
இன்று நெஞ்சு விம்முதைய்யா
தேசம்விட்டு பிரியும்வரை
தேகம் அழவில்லை
இன்று கதறியழுகின்றேன்.
வீட்டின் அருமை வெளியில்
தெரியுமென்பார்கள்
என் மண்ணின்
மகிமை இன்று புரிகின்றது
எமக்காய் வாழ்ந்திட்ட
உறவுகள் எத்தனை
போராடி வீழ்ந்தாலும்
தாங்கிக்கொள்ளலாம்
எதிரியின்
சூழ்ச்சிக்குள் வீழ்ந்தால் அதை
தாங்கமுடியவில்லைய்யா
வஞ்சகன் விரித்த வலையில்
வஞ்சமில்லா நீ வீழ்ந்தாயே
கனவுகள் இலட்சியங்கள்
எல்லாமே ஈழத்தைநோக்கியே
இருந்த நீங்களெல்லாம்
இன்று இல்லை
ஊர்சுற்றி உதவாது வாழும்
நாம் இங்கே தமிழீழம்
காணப்போகின்றோம்
பொறுக்குதில்லையே
நெஞ்சம் வெடித்துச்சிதறப்போகின்றது
நன்றி.பரணீதரன் 14-01-2003
ஆண்டுகள் பல அலையினுள் அழிந்தபோதும் அழியாது உன் முகம் எம் விழியெங்கும். . .
கிட்டடியில் கண்டதில்லை
நான் இதழ்விரிக்கும் முன்னே
நீ இமைமூடிக்கொண்டாயே
பத்திரிகைகளில் புகைப்படம்
கண்டதுண்டு புன்னகைத்த
உன் முகம் கண்டு
நான் புல்லரித்துப்போனதுண்டு
இருக்கும் போது உன்னை
நானறியேன் இந்தியன்
கருக்கியபின்னரே
உன் பெயர் நானறிந்தேன்
அறியா வயதினிலேயே
எனக்குள் ஆயிரம் விளக்கம்
தந்தவன் நீ
உன் நினைவை வெளிக்காட்ட
வீட்டின்முன் கொட்டகைபோட்டு
உன் புகைப்படம் வைத்து
தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுண்டு
ஏன் எதற்கு என்று
விளக்கம் புரியாமல்
விடுதலை கீதங்களை
என் செவிவழி படரவிட்டு
சந்தோசித்ததும் உண்டு
கண்ணாடி போட்ட
உன் புகைப்படம் பார்க்கும்போது
எனக்கு எந்தவித கவலையும்
தோன்றியதில்லை
இறப்பென்றாலே அறியாத வயது
ஏதோ எல்லோரும் வீட்டின்முன்
கொண்டாடுகின்றார்கள் என்று
நானும் கொண்டாடியதுண்டு
அவற்றை நினைக்க
இன்று நெஞ்சு விம்முதைய்யா
தேசம்விட்டு பிரியும்வரை
தேகம் அழவில்லை
இன்று கதறியழுகின்றேன்.
வீட்டின் அருமை வெளியில்
தெரியுமென்பார்கள்
என் மண்ணின்
மகிமை இன்று புரிகின்றது
எமக்காய் வாழ்ந்திட்ட
உறவுகள் எத்தனை
போராடி வீழ்ந்தாலும்
தாங்கிக்கொள்ளலாம்
எதிரியின்
சூழ்ச்சிக்குள் வீழ்ந்தால் அதை
தாங்கமுடியவில்லைய்யா
வஞ்சகன் விரித்த வலையில்
வஞ்சமில்லா நீ வீழ்ந்தாயே
கனவுகள் இலட்சியங்கள்
எல்லாமே ஈழத்தைநோக்கியே
இருந்த நீங்களெல்லாம்
இன்று இல்லை
ஊர்சுற்றி உதவாது வாழும்
நாம் இங்கே தமிழீழம்
காணப்போகின்றோம்
பொறுக்குதில்லையே
நெஞ்சம் வெடித்துச்சிதறப்போகின்றது
நன்றி.பரணீதரன் 14-01-2003
[b] ?

